Thursday 6 June 2013

பொய்கோ ஜோக்ஸ் - பகுதி-1


அரசியல் சிகாமணி பொய் பொய்கோ அவசரமாக போன் செய்வதற்காக தொலைபேசி நிலையத்திற்குள் செல்கிறார்.....
தோட்டதுக்கு போன் செய்கிறார்.

பொய்கோ : ஹலோ நான் அரசியல் சிகாமனி பொய் பொய்கோ பேசுறேன்.தோட்டம்தானுங்களே??

எதிர்முனை: (அருகில் இருப்பவரிடம் போனை கொடுத்து) "யோவ் பொய்கோ பேசுறாப்ள" அந்தாளு ஒரு ஆமை மாதிரி எங்க போனாலும் விளங்காது, எதாவது பேசி கட் பண்ணிரு.

எதிர்முனை: ஹலோ சொல்லுங்க.

பொய்கோ:  ஹலோ நான் அரசியல் சிகாமனி பொய் பொய்கோ பேசுறேன்..ஆமா டெல்லியில இருந்து தான் பேசுறேன்.

எதிர்முனை: சொல்லுங்க என்ன விசயம்??

பொய்கோ:  வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல பிராச்சாரம் பண்ணனும்னு கேட்டிங்களே..

எதிர்முனை: யாரு நாங்க கூப்டோமா?? உன்னைய??

பொய்கோ: சரி, நான் தான் கேட்டேன்னு..அதுக்கு  டேட் சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்...

எதிர்முனை: அதெல்லாம் மேலிடத்துல கேட்டுதாங்க சொல்லனும்..

பொய்கோ: அடுத்த மாசம் மும்பையில் புது ரோடு போட்ருக்காங்க அங்க நடக்குற புரோகிராம், அப்படியே அங்க இருந்து கோவா போய் பீச்சுல ஒரு ரெண்டு மாசம் நடக்குற புரோகிராம்..அங்க இருந்து அப்படியே கர்நாடகா போறேன் அங்க ஒரு பிளாட்பாரம் தொறந்து வைக்க போறேன்.ஒரு அஞ்சு ஆறு மாசம் டூர்லையே இருக்கேன்.. நீங்க சொன்னா தோட்டத்துல ஒரு ஓரமா நடக்குறேன்.. இல்லைன்னா கள்ளத்தோணி ஏறி கியூபா போய் ஒரு புரட்சி பண்ணனும்..

எதிர்முனை: பரவாயில்ல பரவாயில்ல.. தேர்தல் முடிஞ்சவுடனையே வாங்க..உங்கள மாதிரி ஆமை புகுந்த ஆளுங்க பிராச்சாரம் எல்லாம் வேண்டாம்னு..சொல்லிட்டாங்க

பொய்கோ: அப்படியெல்லாம் சட்டுன்னு சொல்லாதிங்க..நான் நல்ல பெர்ஃபார்மர்ன்னு உங்களுக்கே தெரியும். சீட்டு பிரிக்கிறதுல வேணும்ன்னா ஒரு ரெண்டு சீட்டு கம்மி பண்ணிக்கோங்க..

எதிர்முனை: யோவ்..எது சீட்டா?? நாங்க எப்பையா உனக்கு சீட்டு தர்றோம்ன்னு சொன்னோம்.அதுவும் என்னமோ 5 சீட்டு கொடுத்த மாதிரி ரெண்ட கம்மி பண்ணிக்கோங்கன்னு வேற சொல்ற..கொடுத்தாலும் ஒன்னுதான்..ஒன்னுல எப்படியா ரெண்ட கம்மி பண்ணமுடியும்??

பொய்கோ: அய்யயோ..கோவப்படாதீங்கன்னே..ரொம்ப நம்பிட்டேன்..ஒரு சீட்டு கொடுங்கன்னே போதும் நாங்க ரெண்டு பேரு அட்ஜெஸ்ட் பண்ணி மடியில கூட உக்காந்துக்குறோம்.

எதிர்முனை: அடச்சீ..போனை வைய்யா..

எச்சியை முழுங்கியவாரே வெளியே வருகிறார்...வெளிய காத்துக்கொண்டிருந்த தா.பா, பொய்கோவை ஏற இறங்க பார்த்துவிட்டு போன் செய்யப் போகிறார்.

தா.பா: (தோட்டத்துக்கு போன் செய்து), ஆமாமா..நான் ரஷ்யாவுக்கு இளைஞர் கம்யூனிஸ்ட் எழுச்சி மாநாடுக்கு போறேன். அம்மா மெஸ் திறந்ததை பத்திக் கூட அதிபர் புடின் கிட்ட நான் தான் போன் பண்ணி சொன்னேன்.........(தொடர்கிறார்)...
பொய்கோ :(கடைக்காரர் சரத்திடம்) : ஏன் பாஸ்..ஆளாளுக்கு
இப்படி மும்பை, டில்லி,ரஷ்யானு அளந்து விடுறோமேன்னு நீங்க எதாவது ஃபீல் பண்றிங்களா??

போன் பூத் சரத்: அட போங்க சார்..நானே இந்தக் கடைய நாலு வருசமா கொடநாட்டுல தான நடத்திட்டு இருக்கேன்...

                                         

1 comment:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_7197.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete