Wednesday 26 June 2013

மலிவு விலை அரசு..!!


                                    

தமிழகத்தில் இன்றைய தேதியில் அதிகம் உபயோகிக்கும் வார்த்தை 'மலிவு'. விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த, சீர்படுத்த இன்றைய அரசு கையாளும் முறை "மலிவு விலை கடைகள்". மலிவு விலையில் உணவகம்,மலிவு விலையில் காய்கறி கடை,மலிவு விலை தண்ணீர் இப்போது மலிவு விலையில் குடிநீர். இப்படி எல்லாத்தையும் மலிவு விலையில் கொடுப்பதால் மேலோட்டமாக இந்த விசயத்தை பார்க்கும் போது மக்களுக்கு ஏதோ நல்லது போன்று தான் தெரியும்,ஆனால் உள் சென்று பார்த்தால் தான் இந்த திட்டங்களின் சுயரூபம் தெரியும்.

அம்மா உணவகம், அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் அவதி பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் அரசின் அதிரடி அறிமுகம் தான் இந்த "அம்மா உணவகம்". இட்லி 1 ரூபாய், சாம்பார் சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு (அவா ஆட்சியில சாதம் தான் போடுவா.. நமக்கு சோறுன்னா தான் இறங்கும்.) விற்கப்படுகின்றன. இப்போ விலைவாசி ஏற்றத்துக்கும் இந்தத் திட்டத்துக்கும் என்ன சம்பந்தம்?? எல்லாரும் கடையிலையே போய் சாப்பிடுங்க வீட்டுல சமைக்காதிங்கன்னு சொல்றாங்களா? இப்படி எல்லாரும் வீட்ல பொண்டாட்டி புள்ளையோட போய் தினமும் அம்மா உணவகத்துலையே சாப்பிடதான் முடியுமா? சரி இந்த கோணத்துல யோசிச்சு பாருங்க அந்நிய நேரடி முதலீடுக்கும் இதுக்கும் ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. அந்நியன் எப்படி அன்னாச்சியை நொடிக்க வச்சிருவான்னு நாம கவலை பட்டோமோ அது போல தான் இன்னைக்கு அம்மா ஆயாவை நொடிச்சு போக வைக்கிறாங்க. விலை அதிகமாக உள்ள பொருட்களை அரசு கொள்முதல் செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விநியோகம் செய்தாலாவது எதாவது பயன் இருந்திருக்கும்.

                                           

காய்கறி விலைகள் படு பயங்கரமாக உயர்ந்திருக்கும் நேரத்தில் தமிழக அரசு சரியான ஒரு திட்டத்தை தொடங்கியுள்ளது..அதுதான் மலிவு விலை காய்கறி அங்காடி. அதென்ன மலிவு விலை காய்கறி அங்காடின்னு பாத்தோம்னா பேரு மட்டும் தான் புதுசு திட்டம் பழசுதான். விளைவித்த உழவர்கள், இடைத்தரகர்கள் சுரண்டல் இல்லாமல் நேரடியாக மக்களிடம் விற்க வகுத்த அருமையான திட்டமான திமுக அரசால் ஆரம்பிக்கப்பட்ட உழவர் சந்தை திட்டத்தை வேறு வழியின்றி நியூமராலஜி பார்த்து தூசி தட்டி புதுசா இவங்களா ஆரம்பிச்ச மாதிரி மேக்கப் பண்ணது தான் இந்த மலிவு விலை அங்காடி. மெட்ரோ ரயில், சமச்சீர் கல்வி,வரிசையில் இப்போது வேறு வழியின்றி தங்கள் ஆட்சியில் முடக்கிப்போட்டிருந்த திமுக திட்டமான உழவர் சந்தை திட்டத்தை இன்றைய அதிமுக அரசு கையிலெடுத்திருப்பது மக்களுக்கு நல்ல விசயம் தான். இந்த அங்காடிகள் இப்போது நல்ல முறையில் தான் செயல் படுகிறது மற்ற கடைகளை விட குறைந்த விலையில் காய்கறி கிடைக்கின்றது,மக்களிடம் நல்ல வரேவேற்பு கூட்டமும். ஆனால் ஆரம்பிக்கப்பட்ட கடைகள் தமிழ்நாடு முழுக்க ஒரே நேரத்தில் தொடங்கப்பட்டிருந்தால் மக்கள் பயன் அடைந்திருப்பார்கள்.மொத்த தமிழ்நாட்டிற்கும் சேர்த்து சென்னை மற்றும் புறநகரில் மட்டும் 31 கடைகள் திறந்தது எந்த விதத்தில் நியாயம்?

ஒருவேளை படிப்படியாக திறந்தால் எல்லா ஊருகளுக்கும் சென்றடைவதற்குள் விலை இன்னும் பல மடங்கு ஏறி விடும். உழவர் சந்தையும் தமிழ்நாட்டில் 250க்குள் தான் இருந்தது. ஆனால் அது சந்தை இது கடை.இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு சந்தையில் 100 கடைகள் வரை இருக்கும் ஆனால் கடை என்பது ஒன்றே ஒன்று தான். மேலும் உழவர் சந்தை தமிழ்நாடு முழுவதும் இருந்தது. ஏழரை கோடி மக்களுக்கும் விலைவாசியை கட்டுபடுத்த சென்னையில் மட்டும் மலிவு விலை கடைகள் திறந்தது எப்படி சரியாகும்.? கூட்ட நெரிசல் மக்கள் அலைமோதுவார்கள், "வெள்ளத்தில் பிழைத்தவன் வெள்ள நிவாரன நிதி வாங்குவதில் நெரிசலில் சிக்கி இறந்தான்"என்பது போல் தான் ஆகும்.

                                               

அடுத்து மலிவு விலை குடிநீர்..இதுதான் இருப்பதிலேயே அபத்தமான ஒன்று. தன் மக்களுக்கு அதன் அரசே தரமான தண்ணீர் என்று விலைக்கு விற்பது எவ்வளவு பெரிய மோசம். மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கவேண்டிய அரசே இப்போது காசுக்கு தண்ணீரை விற்கின்றது. ரிலையன்ஸ், டாடா போல தமிழ்நாடு அரசும் அவர்களுக்கு போட்டியாக இந்த அரசை ஒரு 'கார்ப்பரேட் கம்பெனி' போல நடத்தி வருகிறது.மக்கள் நலத்தில் அக்கறையோடு செயல் படாமல் லாபக்கணக்கை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுகிறது. ஒரு லிட்டர் குடி நீர் 10 ருபாய். அதுவும் பேருந்துகளிலும் பேருந்து நிலையங்களிலும் கிடைக்கும். அருமை. பேருந்தில் சென்ற் தண்ணீரை வாங்குவதற்கு கடையிலேயே வேறு தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொள்ள மாட்டார்களா?? பேருந்து கட்டணத்தியும் உயர்த்திவிட்டு அதில் தண்ணீர் பாட்டில் விற்பது பெரும் மோசடி.

மேலும் தண்ணீரை விலை கொடுத்து வாங்குவதே கொடுமை அதை அரசே செய்ய்வது இன்னும் கொடுமை. காசு கொடுத்து எல்லோரும் தண்ணோர் வாங்கி விட முடியுமா அல்லது அவர்களை போன்றவர்களுக்கு மட்டும் தான் இந்த அரசா? சாமானிய மக்கள்,ஏழை மக்களுக்கு தாகத்தை தனிப்பது யார் கடமை?

மின் கட்டணம் விண்ணைத்தொடும் வேளையில் இப்போ அதற்கு டெபாசிட்டும் பல மடங்கு உயர்ந்தப்பட்டு மக்களின் கழுத்தை நெறிக்கின்றது. மக்களிடம் அப்பட்டமாக பணத்தை பறிமுதல் செய்யும் மோசடித் திட்டம் இது. மின்சாரம் என்பது இன்று அத்தியாவசிய தேவையாகிவிட்டது. அப்படிப்பட்ட ஒன்றுக்கு இந்த ஆட்சியில் ஆயிரக்கணக்கில் டெபாசிட் வசூலிக்கப்படுகிறது. மின்சாரத்தை யாராவது வேண்டாமென எழுதி கொடுப்பார்களா?? என்றுமே பயன்படக்கூடிய மின்சாரத்திற்கு இவ்வளவு பெரிய தொகையை டெபாசிட் என்ற பெயரில் வசூலித்து மக்கள் தலையில் பாரத்தை ஏற்றுகின்றது இந்த அரசு.    இப்படி பேருந்து கட்டணம்,பால் கட்டணம் மின் கட்டணம் என மக்கள் மீது சுமையை ஏற்றி அரசு கல்லா லாபம் கட்டுவதுதான் இந்த அரசின் சாதனையா?? மக்களுக்கான அரசு தன் கஜானா காலியானாலும் மக்களுக்கு துன்பம் விலைவிக்காமல் திட்டம் வகுப்பதே சிறந்த அரசு. கடந்த திமுக அரசு கஜானாவை காலி பண்ணிவிட்டது எனக் கூறி அதை நிறப்பும் குறிகோளுடனையே இந்த அரசு மக்களை நசுக்கிறது.எல்லா பாரத்தையும் மக்கள் மீது சுமத்தி,எல்லா அத்தியாவசிய பொருட்களையும் விலை ஏற்றி அதன் மூலம் லாபம் ஈட்டுவதற்கு பெயர் அரசு அல்ல. இதைப்பற்றி எந்தக் கேள்வியாவது ஊடகங்களோ,பத்திரிக்கைகளோ கேட்டதுண்டா??கேட்குமா?

இது போதாதென்று திரையரங்குகளில் பத்து நிமிடங்களுக்கு மேல் தமிழக அரசின் சாதனைகள் என பட்டியலிடுகின்றன. அதில் அம்மா உணவகம்,யானைகளுக்கு இன்பச் சுற்றுலா தவிர காட்டப்படும் பெரும்பாலான சாதனைகள் திமுக அரசால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.உதாரணத்திற்கு, இலவச பஸ் பாஸ், கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் போல இன்னும் பல. உண்மையில் இந்த ஆட்சியில் சுக போக வாழ்க்கை யானைகளுக்கு தான்.

ஆங்கிலத்தில் பேசி பேட்டி அளித்தால் போதும் ஊடகங்களும் சரி மக்களும் சரி அதுதான் நிர்வாகத்திறமை என வர்ணிக்கின்றனர். மக்கள் நலத்தை மனதில் கொண்டு திட்டம் வகுப்பதே சிறந்த ஆட்சியாகும்.அந்த வகையில் பார்த்தால் தமிழக மக்களால் தேர்ந்துடுக்கப்பட்ட இந்த அதிமுக ஆட்சி தன் திட்டம் போலவே மிகவும் மலிவான ஆட்சியை நடத்தி வருகிறது.தமிழக மக்கள் ஒவ்வொரு முறை அதிமுக அரசை தேர்ந்தெடுக்கும் போதும் ஏற்படும் இன்னல்களை விட இந்த முறை அதிக அளவில் அனுபவிக்க வேண்டிய நிலை உள்ளது. இதை சரி செய்ய இனிமேலாவது எதாவது உறுப்படியான "மக்கள் நல"த் திட்டத்தை இந்த அரசு செய்ய வேண்டும்.


Friday 21 June 2013

ஓரம் போ... ட்ராஃபிக் கலாட்டா..!!


                                 

சமீபத்துல யாரோ சொன்னதை ஒரு நாளிதழ்ல படிச்சது,"ஒரு ஊருல மக்கள் எந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர்கள் சாலையில் எப்படி வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை வைத்தே புரிந்துகொள்ளலாம்". அவரு சொன்னது சரியா தப்பான்னு தெரியல,ஆனா கண்டிப்பா சரியா இருக்கக் கூடாது இருந்துச்சுன்னா நம்ம ஊரு மாதிரி மட்டமான ஊரு உலகத்துலையே இருக்காது.ஏன்னா நம்ம ஊருல நெறைய பேருக்கு வண்டி எப்படி ஓட்டுறதுன்னு தெரியும்,ஆனா எப்படி வண்டிய ஒட்டுறதுன்னு தெரியாது.அதாவது accelerator கொடுத்தா ஓடும்,பிரெக் போட்டா நிக்கும்ங்குறத மட்டும் கத்துக்கிட்டாலே வண்டி ஓட்ட ஆரம்பிச்சிருவாங்க. ரோட்டுல முக்கால்வாசி பேருக்கு வண்டி ஓட்டும் போது கொடுக்குற சிக்னல் எதுவுமே புரியாது.இன்னும் பல பேரு வண்டியில இண்டிகேட்டர்ன்னு ஒன்னு இருக்குறதே வெறும் அலங்காரத்துக்குன்னு மட்டும் தான் நெனச்சிருக்காங்க. ஒரு தடவ நானும் நண்பனும் வண்டியில போகும் போது அவன் ஓட்டிட்டு இருந்தான், இடது பக்கம் திரும்பும்போது மட்டும் கை சிக்னலோ, இண்டிகேட்டரோ போடாம படக் படக்குனு திருப்புனான் நான்,"ஏண்டா வலது பக்கம் போறப்போ மட்டும் சிக்னல் தர, இடது பக்கம் போறப்போ சிக்னல் தர மாட்டேங்குற"ன்னு கேட்டேன்,அதுக்கு அவன் "மச்சி நமக்கு keep left தான அதுனால இடது பக்கம் போனா எப்பவுமே சிக்னல் தர வேணாம்டா"என்றான்.
நான்,"டேய் என்னடா நீயா ஒரு ரூல்ஸ் போடுற??அப்படியெல்லாம் கிடையாதுடா,பின்னாடி வரவனுக்கு நீ எந்த பக்கம் போறன்னு எப்படிடா தெரியும் அதுக்குதான்டா சிக்னல்.சரி அப்புறம் எதுக்குடா வண்டியில left இண்டிகேட்டர் வச்சிருகாய்ங்க,அத சொல்லு".அவன் பதிலே சொல்ல.இப்படி இவய்ங்களா எதாச்சும் மனசுல கற்பனைய வளத்துகிட்டு  ஒரு பழக்கத்த ஃபாலோ பண்றாய்ங்க.அதே மாதிரி சிட்டிக்குள்ள வண்டி ஓட்டும் போதும் ஹெட்லைட்ட" "ஹை-பீம்"ல வச்சு தான் வண்டி ஓட்றாங்க,எதிர்ல வர்ற வண்டி ஓட்றவங்களுக்கு கண் கூசுமேங்குற எண்ணமே இருக்காது, நாம கேட்டோம்னா,"நீயாடா எனக்கு கரெண்ட் பில்லு கட்டுற, என் லைட்ட நான் எப்படி வேணாலும் போடுவேன்னு அகராதி பேசுறாய்ங்க.

இதெல்லாம் விட கொடுமை சிக்னல்ல நிக்கிறப்போ தான் நடக்கும். முக்கியமா பாலத்துல இடது பக்கம் போகவேண்டியவன் வலது பக்கம் நிப்பான்,நேரா போக வேண்டியவன் இடது பக்கமா நிப்பான்.இதுல அடிச்சு புடிச்சு நாம் வெளிய வர்றதுக்குள்ள அடுத்த சிக்னல் விழுந்துரும்.இதுல உச்சக்கட்ட கொடுமை என்னனா சிக்னல்ல நமக்கு ஃப்ரீ லெப்ட் போட்ருக்கும் ஆனா நேரா போறவன் வலது பக்கம் போறவனெல்லாம் இடது பக்கம் வழிய மறிச்சு நிப்பாய்ங்க,என்னதான் அந்த இடத்துல நீங்க தலைகீழா தண்ணீ குடிச்சாலும் நகரவே மாட்டாய்ங்க.அவனுங்க போனாதான் நாமளும் போனும்,அப்படியொரு நல்ல எண்ணம். இப்பெல்லாம்.எலெக்ட்ரானிக் டைமர் சிக்னல் வேறயா நம்ம ஆளுங்க கிட்ட கேக்கவே வேணாம்.மதுரையில 5 செகண்ட் பாக்கி இருக்கும் போதே வண்டிய கிளப்புறாங்கன்னா,சென்னையில குறஞ்சது 8 செகண்ட்லையே எடுத்துறாய்ங்க.தப்பித் தவறி 1,0 ஆகுற வரைக்கும் நின்னோம்னா செத்தோம்.ஒன்னு ஹார்ன் அடிச்சே சாவடிப்பாய்ங்க இல்லைனா அசிங்கமா அர்ச்சனை ஆரம்பிச்சிருவாய்ங்க. இந்த அனுபவம் எனக்கு நெறையா இருக்கு. சிக்னல்ல ஹார்ன் அடிக்கிறத கூட ஏத்துக்கலாம். அது ஏண்டா 'டோல் கேட்'ல நிக்கும் போது கூட அடிக்கிறீங்க??

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி சொல்லுவாங்க சென்னைல மட்டும் வண்டி ஓட்டிட்டா தமிழ்நாட்டுல எங்க வேணாலும் ஓட்டலாம்னு, ஆனா இப்போ சென்னையில கூட வண்டி ஓட்டிறலாம்,பாலமெல்லாம் கட்டி பெருமளவு போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்திருக்காங்க. அதே நிலமை இப்பொ மதுரையில வந்திருக்கு. அதுலையும் மதுரையில இப்பெல்லாம் வண்டியெடுதுட்டு வெளிய போயிட்டு பத்திரமா வீடு வந்து சேந்துட்டோம்னா முன் ஜென்ம புண்ணியம் தான். அத வச்சு ஒரு நாள் என் நண்பன் கிட்ட சொன்னேன், "மச்சி முன்னாடி தான் சென்னைல ஓட்டுறது கஷ்டம்,இப்பொ மதுரையில ஓட்டிட்டேன்னா எங்க வேணா ஓட்டலாம்டா", அவன்,"என்னடா இப்படி சொல்ற எங்க ஊருல நம்ம திருப்பூர்ல ஓட்டிட்டா எங்க வேணாலும் ஓட்டலாம்னு சொல்லுவாங்கடா",என்றான். அடப்பாவிங்களா அப்போ எல்லா ஊருலையும் இதே நிலமைதானா??(இதுல நமக்கு ஒரு பெருமை). அதுவும் நம்ம ஊரு ட்ராபிக்ல பீக் டைம்ல பாத்தோம்ன கூலாங்கல் குவியலுக்குள்ள தண்ணிய ஊத்துன மாதிரி நுழஞ்ச நுழஞ்சு போவாய்ங்க. அதவிட கொடுமை எதாவது ஒரு இடத்துல இடைஞ்சல் ஆயிருச்சுன்னா பின்னாடி நின்னு சரியானவுடன போவோம்ங்குற எண்ணமே இருக்காது, அப்படியே பக்கவாட்டுல போயி போயி முன்னாடி நின்னு 'டூ வே'(two way) ரோட 'ஒன் வே' (one way) மாதிரி ஆக்கிருவாய்ங்க. இப்போ அவனும் போக முடியாது நாமளும் போக முடியாது.

ஆக்சிடெண்ட் இப்பெல்லாம் சர்வ சாதாரணாமா ஆயிருச்சு. ஒரு காலத்துல மண், தண்ணி லாரி,பிரைவேட் பஸ் இவங்க தான் அந்த நல்ல காரியத்துல அதிகமா ஈடுபட்டாங்க (இப்பவும்தான்) ஆனா இப்ப இவங்களுக்கு டஃப் பைட் (tough fight) கொடுக்குறதுக்குனே வந்திருக்கிறது தான் நம்ம "பங்கு ஆட்டோ" அதான் 'ஷேர் ஆட்டோ'. ரோட்டுல வண்டி ஓட்டும் போது என்னவெல்லாம் பண்ணக்கூடாதோ அதையெல்லாம் கொஞ்சம் கூட தப்பாம கரெக்ட்டா பண்ணுவாய்ங்க. கொஞ்சம் இதயம் பலவீனமா உள்ள ஆளா மட்டும் இருந்தாங்கன்னா இந்த ஷேர் ஆட்டோ காரய்ங்க வண்டி ஓட்டுறத ஒரு 10 நிமிஷம் நின்னு பாத்தா போதும், மூணு அட்டாக் ஒன்னா வந்துரும். zooவுல குரங்கு இங்குட்டும் அங்கிட்டும் தாவுற மாதிரி ரோட்டுல எந்தப்பக்கம் இருந்தாலும் கை காட்டுனீங்கன்னா போதும் அடுத்த மைக்ரோ செகண்ட்ல அங்க இருப்பாய்ங்க.ரோட்டுல எவன் போறான் எவன் வர்றான்னு கண்டுக்கவே மாட்டாய்ங்க கருமமே கண்ணா இருப்பாங்க,கருமம்.ஷேர் ஆட்டோல பெரும்பாலும் முன்னாடி கண்டக்டர் மாதிரி ஒரு ஆளு உக்காந்திருப்பாரு.நானும் ரொம்ப நாளு வண்டிக்கு கண்டக்டர் அல்லது கிளீனரா இருப்பாரோன்னு நெனச்சேன் அப்புறம் தான் தெரிஞ்சது,அடுத்த கொஞ்ச நாள்ல அவரே ட்ரைவர் ஆக போறாரு அதுக்கான தொழில் நுனுக்கங்கள அப்சர்வ் பண்ண தான் முன்னாடி உக்காந்திருக்காருன்னு. சத்திய சோதனை!! ஒருத்தன் ஓட்டுறதையே தாங்க முடியல இதுல அவன் ட்ரெயினிங்ல வந்தவன் மட்டும் எப்படி இருப்பான்.

                                                             

டூவீலர்ல அதுவும் இப்போ இந்த 'ஆக்டிவா'வச்சிருக்காங்க பாருங்க அதுல சில பேரு இந்த விசயத்துல ஒரே மாதிரி தான் இருக்காங்க சர்ர்ர்ர்னு...பறக்குறது. .நாம மொத கியர் போட்டு எடுக்குறதுக்குள்ள அடுத்த சிக்னல் போயிர்றாங்க. ஒட்டுறதும் அப்படியே வளைச்சு வளைச்சு என்னமோ சர்கஸ் காட்டிட்டே போவாய்ங்க. பைக் ஒட்றவங்ககிட்ட இந்த ஹெல்மெட் படுற பாடு இருக்கே..யப்பா..தலைய தவிர எல்லா எடத்துலையும் மாட்டி வச்சிருக்காய்ங்க. அதைவிட முன்னாடி எல்லாம் வேடிக்கை பாத்துட்டு வண்டி ஓட்டுனானுங்க, செல்ஃபோன் பேசிட்டே வண்டி ஓட்டுனானுங்க இப்ப அடுத்தக் கட்டமா மெசேஜ் அனுப்புகிட்டே வண்டி ஓட்டுறானுங்க.. டெத் ரேட்டை(death rate) எப்படியெல்லாம் இன்கிரீஸ்(increase) பண்றதுன்னு நம்ம ஆளுங்ககிட்ட தான் கத்துக்கனும்..

   

சரி இவங்கதான் இப்படின்னு பாத்தா நடந்து போறவனுங்க தொல்லை இருக்கே..தாங்கல.. எதாவது திருவிழா,பண்டிகை சமயம்னா கேக்கவே வேணாம் ஜாலியா நடுரோட்டுல ராஜா மாதிரி உலா வருவாங்க. இன்னும் சில பேரு நடந்த போறவனுங்க என்னமோ ரஜினி மாதிரி வானத்தை பாத்துட்டு யோசிச்சிட்டே நடக்குறாய்ங்க..அட எருமை மாடு கூட ஹார்ன் அடிச்சா நகருது இவனுங்க அசையவே மாட்டேங்குறாய்ங்க..நின்னு நிதானமா திரும்பி பாத்து வண்டி மாடல், கலர், ஃபேன்சி நம்பரா இல்லையான்னு எல்லாம் பாத்துட்டுதான் நகராலாம வேணாமன்னு முடிவெடுப்பானுங்க.இன்னும் கொஞ்ச நாள்ல மாடு இவனுங்கல பாத்து, "டேய் மாடு அதான் ஹார்ன் அடிக்கிறாருல நடு ரோட்டுல திரியிற ஒதுங்கிப் போ"ன்னு சொல்லப்போவுது அப்போதான் திருந்த போறாய்ங்க.

மொத்தத்துல இன்னைக்கு நிலமையில நாம மட்டும் சரியா வண்டி ஓட்டுனா பத்தாது,எதிர்ல தப்பா ஒட்றவனுக்கும் சேர்த்து நாம அட்ஜெஸ்ட் பண்ணிதான் ஓட்டனும். அதுனால முடிஞ்சளவு நம்ம பாதுகாப்ப அதிகபடுத்திக்கனும். இதையெல்லாம் மனசுல வச்சு கவனமா வண்டி ஓட்டுனா தினமும் நாம பத்திரமா வீடு திரும்புவோம்னு எதிர்பார்த்து வீட்ல காத்துடு இருக்கவங்களுக்கு என்னைக்குமே எந்த ஏமாற்றமுமே இருக்காது.





Thursday 6 June 2013

பொய்கோ ஜோக்ஸ் - பகுதி-1


அரசியல் சிகாமணி பொய் பொய்கோ அவசரமாக போன் செய்வதற்காக தொலைபேசி நிலையத்திற்குள் செல்கிறார்.....
தோட்டதுக்கு போன் செய்கிறார்.

பொய்கோ : ஹலோ நான் அரசியல் சிகாமனி பொய் பொய்கோ பேசுறேன்.தோட்டம்தானுங்களே??

எதிர்முனை: (அருகில் இருப்பவரிடம் போனை கொடுத்து) "யோவ் பொய்கோ பேசுறாப்ள" அந்தாளு ஒரு ஆமை மாதிரி எங்க போனாலும் விளங்காது, எதாவது பேசி கட் பண்ணிரு.

எதிர்முனை: ஹலோ சொல்லுங்க.

பொய்கோ:  ஹலோ நான் அரசியல் சிகாமனி பொய் பொய்கோ பேசுறேன்..ஆமா டெல்லியில இருந்து தான் பேசுறேன்.

எதிர்முனை: சொல்லுங்க என்ன விசயம்??

பொய்கோ:  வர்ற நாடாளுமன்ற தேர்தல்ல பிராச்சாரம் பண்ணனும்னு கேட்டிங்களே..

எதிர்முனை: யாரு நாங்க கூப்டோமா?? உன்னைய??

பொய்கோ: சரி, நான் தான் கேட்டேன்னு..அதுக்கு  டேட் சொன்னிங்கன்னா வசதியா இருக்கும்...

எதிர்முனை: அதெல்லாம் மேலிடத்துல கேட்டுதாங்க சொல்லனும்..

பொய்கோ: அடுத்த மாசம் மும்பையில் புது ரோடு போட்ருக்காங்க அங்க நடக்குற புரோகிராம், அப்படியே அங்க இருந்து கோவா போய் பீச்சுல ஒரு ரெண்டு மாசம் நடக்குற புரோகிராம்..அங்க இருந்து அப்படியே கர்நாடகா போறேன் அங்க ஒரு பிளாட்பாரம் தொறந்து வைக்க போறேன்.ஒரு அஞ்சு ஆறு மாசம் டூர்லையே இருக்கேன்.. நீங்க சொன்னா தோட்டத்துல ஒரு ஓரமா நடக்குறேன்.. இல்லைன்னா கள்ளத்தோணி ஏறி கியூபா போய் ஒரு புரட்சி பண்ணனும்..

எதிர்முனை: பரவாயில்ல பரவாயில்ல.. தேர்தல் முடிஞ்சவுடனையே வாங்க..உங்கள மாதிரி ஆமை புகுந்த ஆளுங்க பிராச்சாரம் எல்லாம் வேண்டாம்னு..சொல்லிட்டாங்க

பொய்கோ: அப்படியெல்லாம் சட்டுன்னு சொல்லாதிங்க..நான் நல்ல பெர்ஃபார்மர்ன்னு உங்களுக்கே தெரியும். சீட்டு பிரிக்கிறதுல வேணும்ன்னா ஒரு ரெண்டு சீட்டு கம்மி பண்ணிக்கோங்க..

எதிர்முனை: யோவ்..எது சீட்டா?? நாங்க எப்பையா உனக்கு சீட்டு தர்றோம்ன்னு சொன்னோம்.அதுவும் என்னமோ 5 சீட்டு கொடுத்த மாதிரி ரெண்ட கம்மி பண்ணிக்கோங்கன்னு வேற சொல்ற..கொடுத்தாலும் ஒன்னுதான்..ஒன்னுல எப்படியா ரெண்ட கம்மி பண்ணமுடியும்??

பொய்கோ: அய்யயோ..கோவப்படாதீங்கன்னே..ரொம்ப நம்பிட்டேன்..ஒரு சீட்டு கொடுங்கன்னே போதும் நாங்க ரெண்டு பேரு அட்ஜெஸ்ட் பண்ணி மடியில கூட உக்காந்துக்குறோம்.

எதிர்முனை: அடச்சீ..போனை வைய்யா..

எச்சியை முழுங்கியவாரே வெளியே வருகிறார்...வெளிய காத்துக்கொண்டிருந்த தா.பா, பொய்கோவை ஏற இறங்க பார்த்துவிட்டு போன் செய்யப் போகிறார்.

தா.பா: (தோட்டத்துக்கு போன் செய்து), ஆமாமா..நான் ரஷ்யாவுக்கு இளைஞர் கம்யூனிஸ்ட் எழுச்சி மாநாடுக்கு போறேன். அம்மா மெஸ் திறந்ததை பத்திக் கூட அதிபர் புடின் கிட்ட நான் தான் போன் பண்ணி சொன்னேன்.........(தொடர்கிறார்)...
பொய்கோ :(கடைக்காரர் சரத்திடம்) : ஏன் பாஸ்..ஆளாளுக்கு
இப்படி மும்பை, டில்லி,ரஷ்யானு அளந்து விடுறோமேன்னு நீங்க எதாவது ஃபீல் பண்றிங்களா??

போன் பூத் சரத்: அட போங்க சார்..நானே இந்தக் கடைய நாலு வருசமா கொடநாட்டுல தான நடத்திட்டு இருக்கேன்...