Wednesday 17 September 2014

அன்னல் வியக்கும் அம்மா அரசு!!

தெலுங்கு படம் மாதிரி நல்லா காமெடி, ஆக்சன் அதிரடின்னு ரொம்ப ஜககோதியா போறது நம்ம ஊர்ல நடக்குற ஆட்சிதான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட எங்க ரூம் பக்கத்து வீட்ல இருக்குற ஒரு சின்ன பையன் என் கிட்ட "அண்ணே ஒரு கட்டுரை எழுதி தாங்கணே"ன்னு கேட்டான், என்னப்பா தலைப்புனு கேட்டா "அன்னல் காந்தி வழியில் அம்மா ஆட்சி"னு சொன்னான், கேட்டவுடன சிரிப்பு தான் வந்துச்சு.

"டேய் இந்த விசயம் காந்திக்கு தெரியுமாடா, ட்விட்டர் ட்வீட் அளவுக்கு கூட எழுத முடியாத ஒரு தலைப்ப கொடுத்து எப்படிடா கட்டுரை எழுத சொல்றாய்ங்க, சத்தியமா எவனாலையும் முடியாது, காந்தி மட்டும் உயிரோட இருந்திருந்தாரு, துப்பாக்கிய வச்சு அவரே சுட்டுகிட்டிருந்திருப்பாரு"ன்னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்.

பாராட்டு விழா நடத்திகிட்டே இருந்தாங்கன்னு திமுக ஆட்சிய கிண்டல் அடிச்சாங்க, பத்திரிக்கை காரங்களும் கூட சேர்ந்து ஆமா போட்டாங்க, "மொதல நானும் நம்பல நம்புனாதான் சோறுன்னு சொன்னாங்க நம்பிட்டேன், நீங்க எப்படி"ன்னு சந்தானம் கேக்குற மாதிரி தான் இருக்கு நிலமை. சட்டமன்றத்துல பாராட்டிகிட்டு இருந்தவங்க இப்ப கட்டாயக் கல்வி மாதிரி கட்டாய பாராட்டையும் அமல் படுத்திருக்காங்க போல. சரி அப்படி என்ன தான் பண்ணிட்டாங்க பாராட்டன்னு யோசிச்சாதான் தோனுச்சு.. எவ்வளவோ இருக்கு.. சில சாம்பிள் மட்டும் இங்கே.

ஆட்சிக்கு வந்தவுடனையே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தாங்க, அதாவது எதையுமே ஏற்கனவே உருப்படியா இருந்த பல விசயங்களை மாற்றம் வேணும்னு மக்கள் கேட்டுகிட்ட ஒரே காரணத்துக்காக நாசமா ஆக்கிட்டாங்க. எத்தனை தடவை நீதிமன்றத்துக்கு போய் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டாலும் நம் மக்களுக்கு தானேன்னு பொறுத்துகிட்டு நீதிமன்ற தீர்ப்பை காதுலையே வாங்கிக்காம மறுபடியும் மறுபடியும் மாற்றத்திற்காக போராடிட்டு இருக்காங்க. உதாரனமா மக்கள் நலப்பணியாளர்களை வேலையவிட்டு நிறுத்துனதுக்காக, உச்சநீதிமன்றமே, "தமிழ்நாட்டில் என்னதான் நடக்கிறது, போன ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதுதான் வேலையா"ன்னு கண்டிச்சும் அசராம தீர்ப்பை எதிர்த்து வழக்கு, அந்த தீர்ப்புக்கு வந்த தீர்ப்பு மீது வழக்குன்னு இன்ன வரைக்கும் போராடிட்டுதான் இருக்காங்க.

ஒருபுறம் மாற்றம் கேட்ட மக்களுக்காக போராடினாலும், தமிழக வளர்ச்சி மீது அதீத அக்கறை கொண்ட அரசு, திமுக கொண்டு வந்த மின் திட்டங்களை கிடப்பில் போட்டு, இன்றைய இளைஞர்களுக்கு கற்காலத்தை காட்டி அகமகிழ்ந்தது. பல சிறு குறு தொழில்களை மூடி தொழிலாளர், முதலாளிகளுக்கு அவர்கள் நலன் கருதி நிரந்தர ஓய்வுவளித்தது இந்த அரசு. தமிழகத்தை "நியுமரோ யூனோ" மாநிலமாக கொண்டு வருவேன் என்று வாக்களித்து அதை அப்படியே நிறைவேற்றவும் செய்தார். வளர்ச்சி விகிதத்தில் திமுக ஆட்சியில் நாலாவது இடத்தில் இருந்த தமிழகத்தை அரும்பாடு பட்டு முதல் இடத்திற்கு கொண்டு வந்துட்டாங்க, என்ன மேல இருந்து நாலாவதா இருந்ததை கீழிருந்து ஒன்னாவதா ஆக்கிட்டாங்க. என்னது அதுக்கு பேரு கடைசி இடமா??,
ஒன்னாவது இடம்னு தான சொன்னோம் மேல இருந்தா கீழ இருந்தான்னு சொன்னாங்களா??



அடுத்து கொஞ்ச நாளைக்கு முன்னாடி 'தமிழ்நாட்டுல போராட்டங்கள் ரொம்ப அதிகமா இருக்கே இது மக்கள் அதிருப்திய தானே காட்டுது'?ன்னு கேட்டதுக்கு சொன்னாங்க பாருங்க ஒரு அருமையான பதில் , "மக்களை கட்டுப்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் அவங்களுக்கு போராடும் உரிமையை இந்த அரசு வழங்கியிருக்கிறது, அதனால் தான் போராடுகிறார்கள்"னு அத எதோ ஒரு பெருமை மாதிரி சொன்னாங்க. நல்ல வேலை ஏன் மக்கள் நலப் பணியாளர்கள், விவசாயிகள் எல்லாம் தற்கொலை பண்ணிகிட்டாங்கன்னு கேக்கல, கேட்டிருந்தா "அவர்களுக்கு இந்த தனி மனித சுதந்திரத்தை அள்ளி வழங்கியிருக்கிறது அதனால் சுதந்திரமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்னு சொல்லியிருப்பாங்க. இதுக்கு மேலையும் இவங்க கிட்ட எவனாச்சும் கேள்வி கேக்க முடியுமா??


இதை விட இன்னும் அக்கறையா, மக்கள் கண்ட படம் பார்த்து கெட்டு போயிரக் கூடாதுன்னு  என்ன படம் பாக்கனும்னு தேர்ந்தெடுத்து வெளியிடுறாங்க. அவங்களுக்கு பிடிக்காத படங்களை மக்கள் நலன் கருதி தடை பண்ணிருவாங்க. இதுல எந்த விலக்கும் இல்ல. உலகநாயகன்ல இருந்து உள்ளூர் நாயன் வரை இதே நிலமை தான்.

இப்ப லேட்டஸ்டா வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் "பவுலிங்கா? ஃபீல்டிங்கா?" முறையில் இந்த உள்ளாட்சி தேர்தலை வெற்றிகரமாக நடத்திட்டு இருக்காங்க. என்னன்னு கேக்குறிங்களா,  அதாவது ஓட்டு போடுற சிரமத்தை மக்களுக்கு கொடுக்காம இருக்குறதுக்கும், தேர்தல் செலவை குறைக்கிறதுக்காகவும் பாதி இடத்துல எதிர்த்து நிக்கிறவங்க மனுவை தள்ளுபடி பண்ணிர்றாங்க, மிச்ச இடத்துல வாபஸ் வாங்க வச்சிறாங்க. ஆனால் போட்டியிட மட்டும் விட மாட்டோம்னு சொல்லிட்டாங்க. இப்படிப்பட்ட நல்லாட்சி வேறு எங்கு அமையும்.? இத விட்டா வேற என்ன,  மக்கள் பணத்தை டீசல்க்கு வீணடிக்க கூடாதுன்னு சின்னதா ஹெலிகாப்டர்ல போனாங்க, அப்பப்போ ஒரு மாசத்துக்கு ரெண்டு மாசம் ஓய்வு எடுத்தாங்க, நூலகத்துல எதுக்கு நேரத்தை வீணடிக்கனும்னு அதுக்கு பூட்ட போட்டாங்க, இந்த மாதிரி இன்னும் எவ்வளவோ இருக்கு.

அதையெல்லாம் மீறி காந்திக்கும் இந்த அம்மையாருக்கும் ஒரு ஒற்றுமைனா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை வெள்ளையர்களுக்கு எதிரா பயன்படுத்துனத இந்த அம்மா சொத்துக்குவிப்பு வழக்குல நீதிபதி, வழக்கறிஞர்களே பொறுமை இழக்குற அளவுக்கு செமையா பயன்படுத்திட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட அருமையான ஆட்சியை போய் காந்தி கூட ஒப்பிட்டா ஈடாக முடியுமா?? ஆமா இது மகாத்மா காந்தியா?? ராகுல் காந்தியா??

Wednesday 9 April 2014

லவ் பண்ணுடா மவனே..!!

லவ் பண்றதுக்கு என்ன வேணும்னு கேட்டா, சில பேரு 'தம்' வேணும், 'தில்'லு வேணும்னு சிம்பு மாதிரி டயலாக் விடுவானுங்க, இன்னும் சில பேரு சும்மா பொரட்டி போடனும் அப்படியே அதுல சால்னாவ ஊத்தனும்னு கெளதம் மேனன் படம் மாதிரி பேசுவானுங்க. ஆனா எனக்கு தெரிஞ்சு உண்மையிலையே லவ் பண்றதுக்கு ஃப்ரெண்ட்ஸ் தான் முக்கியமா தேவை. என்னடா இவன் மட்டும் சசிக்குமார்,சமுத்திரக்கனி மாதிரி டயலாக் விடுறானேன்னு நெனைக்கிரீங்களா? இது காதல சேத்து வைக்கிற ஃப்ரெண்ட்ஸ பத்தி இல்ல, காதல் பண்றவங்களுக்கு நடுவுல சிக்கிகிட்டு திண்டாடுற ஃப்ரெண்ட்ஸ பத்தி. இந்த விசயத்துல பொன்ணுங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனா பசங்களுக்கு மட்டும் கண்டிப்பா ஃப்ரெண்ட்ஸ் இல்லாம லவ் மேட்டர்ல ஒரு அணுவும் அசையாது. நாம எல்லாருமே நம்ம வாழ்க்கைல நெறையா கட்டத்த தாண்டி வந்திருப்போம் சில பேரு தாண்டாம சுத்தி வந்திருப்பாங்க,ஆனா கண்டிப்பா இந்தக் கேரக்டர மட்டும் 99% பேரு கடந்து தான் வந்திருப்போம் , அதான் லவ் பண்றவனுக்கு ஃப்ரெண்டா இருந்திருப்போம். ஏன் சினிமாவுல கூட அந்தக் காலத்து சந்திரபாபுல இருந்து இந்த காலத்து சந்தானம் வரைக்கும் எல்லா காமெடியனுக்கும் இது தான் ரோல்.

                               


இப்போ இங்க நம்ம பசங்க படுற அவஸ்தைய ஸ்டேஜ் பை ஸ்டேஜா பாப்போம். ஏற்கனவே அனுபவிச்சவங்க கரெக்ட்டா இருக்கான்னு பாத்துக்கோங்க, புதுசுன்னா படிச்சு பழகிக்கோங்க.

1) லவ்வ அந்த பொன்ணு கிட்ட சொல்றதுக்கு முன்னாடியும் சரி, சொல்லிட்டு வெயிட் பண்ற கேப்லையும் சரி எதோ நேர்ந்து விட்ட மாதிரியே சுத்துவானுங்க. ஹாலிவுட் படம் மாதிரி நிமிசத்துக்கு நாலு ப்ளான் சொல்லிட்டு அதுக்கு அவனுங்களே முடிவும் சொல்லிக்குவானுங்க. அந்தப் பொண்ணு வேணாம்னு சொல்லுச்சு நமக்கு டாமேஜ் கம்மி, அவனுக்கு டாமேஜ் ஓவரு, ஒருவேளை பொண்னு ஓகே சொன்னா அவன் தப்பிச்சிட்டான் நமக்கு ஏழரை நாட்டு சனி மட்டும் இல்ல வேர்ல்டு மேப்ல இருக்குற அத்தனை நாட்டு சனியும் தொத்திக்கும்.

2) இந்த கட்டம் தான் உங்க ப்ரெண்டுக்கு லவ் ஆரம்பிக்கிற கட்டம், அதனால நீங்களும் ஒன்னு, ரெண்டு ஆக்டிவிட்டீஸ்க்கு ரெடி ஆயிக்குங்க. முதல் கட்டம் உங்களுக்கு நைட்டு தூக்கம் போயிரும்,அதே சமயம் காலைல ரொம்ப சீக்கிரமே விடிஞ்சிரும். கர்ணன் கவசக்குண்டலத்தோட பொறந்த மாதிரி எந்நேரமும் அந்த மொபைலோடவே தான் இருப்பாய்ங்க. சேவல் கூவுற நேரத்துல தான் குட்நைட்டே சொல்லுவானுங்க. சேவல் கூவி முடிக்கிறதுக்குள்ள குட்மார்னிங் சொல்றதுக்கு ஃபோன் பண்ணிறானுங்க. இதுல எப்படி நம்ம தூக்கம் போகும்னு கேக்குறிங்களா?  இந்த சம்பவம் எல்லாம் நம்ம தலமாட்டுலையே தான் நடக்கும் ஆனா நம்ம காதுக்கு எதுவுமே கேக்காது. லவ் பண்றதுக்கு முன்னாடி தல கவுண்டமணி மாதிரி ஹை-டெசிபல்ல பேசிட்டு இருந்தவனெல்லாம் இப்போ மணிரத்னம் படம் ஹீரோயின் மாதிரி பம்மி பம்மி பேசுவானுங்க. இது போக ஒருவேலை காலைல அவன் மொபைல் எடுக்கலைனா அவ்ளோதான், செத்தோம். நமக்கு தான் அலாரம் அடிக்கும். காதலிக்க ஆரம்பிச்சவுடன கடமை கூடும்ன்னு சொன்னது காதலிக்கறவங்களுக்கு மட்டும் இல்ல, காதலிக்கிறவங்களோட நண்பர்களுக்கும் தான். நமக்கு வர்ற ஃபோன விட நம்ம மொபைல்ல இவனுங்களுக்கு வர்ற ஃபோன் தான் அதிகம். பெரும்பாலும் நம்ம பசங்க இந்தக் கட்டத்துலையே பொறுமையிழந்துருவானுங்க, ஆனா அதெல்லாம் ரெண்டே வாரம் தான், கஷ்டப்பட்டு ஒரு ரெண்டு வாரம் தாக்கு புடிச்சிட்டிங்கன்னா போதும்...அப்புறம் அதுவே பழகிரும்.

ரெண்டாவது நீங்க செய்ய வேண்டியது உங்க சிம்ம தூக்கி எறிஞ்சிட்டு மரியாதையா அவங்க ரெண்டு பேரு என்ன நெட்வர்க் வச்சிருக்காங்களோ அதுக்கு மாறிக்குங்க முடிஞ்சா அதுக்கு ரேட் கட்டரும் போட்டுக்குங்க. ஏன்னா நடு ராத்திரியில ரீசார்ஜ் பண்ண முடியாட்டி உங்க ஃபோன் தான் பலிகடா.. அப்புறம் பேலன்ஸ் காணோம்னு புலம்ப கூடாது. ஏற்கனவே சொன்ன மாதிரி இனிமே உங்க ஃபோன் அவனுக்கு தான் அதிகம் பயன்படும்.

3) ஒருவேளை அந்தப் பொண்ணு வேற ஊருல இருந்தா அவ்வளவுதான், நம்மாளு அந்த பொண்ண பாத்துட்டு திரும்ப வர்ற வரைக்கும் நமக்கு தான் வயித்த கலக்கும், ஏன்னா அவன் வீட்டுல நம்ம கூட இருக்குறதா தான் சொல்லிட்டு வருவான்.அவன் வர்ற வரைக்கும் நாம தான் சமாளிக்கனும் "ஏன்னா இப்போ நாம தான காளிங்". அதுபோக எதாவது ரொமான்ஸ் படம் ரிலீஸ் ஆச்சுனு வச்சிகோங்க, செத்தான் சேகரு.. அந்த படத்த அந்த டைரக்டர விட அதிகமா இவனுங்க தான் பாப்பாய்ங்க. அதவிட படத்த பாத்துட்டு வந்து விடுற அலும்பு அதுக்கு மேல. சத்திய சோதனை.

4) அதுக்கு அப்புறம் நார்மல் ஆக்டிவிட்டீஸ் தான்,தியேட்டர், ஷாப்பிங் மால்னு அவன் கூட நாம துணைக்கு போய் வேடிக்கை பாக்க வேண்டியது தான். அதுல சில நேரம் போறப்போ ஃப்ரெண்டோட வண்டியில போயிட்டு ரிட்டர்ன் 'சோலோ'வா பஸ்லையோ, ஆட்டோவிலையோ தான் வரனும். லவ் பண்ண ஆரம்பிச்ச அப்புறம் இவனுங்க கூட வெளிய போறதே முக்கால்வாசி இந்த மாதிரி தியாகங்களுக்காக தான், ஒருவேளை வேற வேலையா பசங்கல பாக்க போனோம்னா அங்க ஒரு விசயத்த கவனிச்சு பாத்திங்கன்னா தெரியும், எப்படி சரக்கு அடிக்கிற நேரத்துல யாருன்னே தெரியாம ஒருத்தன் கூட ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசுவானுங்களோ, அதே மாதிரி லவ் பண்ற பசங்களும் இன்னொரு லவ் பண்றவன் கூட யாருன்னே தெரியலைனாலும் ரொம்ப சகஜமா பழகிகிட்டு என்னமோ ரெண்டு நாட்டு தலைவர்ங்க எல்லை பிரச்சனைய பத்தி பேசிக்கிற மாதிரி சீரியசா டிஸ்கஸ் பண்ணிகிவானுங்க. ஏன்னா இனம் இனத்தோட சேருதாம். இங்கேயும் நாம சப் டைட்டில் போடாத இந்தி படம் பாக்குற மாதிரி நடுவுல உக்காந்து புரியாம வாயதான் பாக்கனும்.

5) இது தான் உச்சக்கட்டம், லவ் பண்ற அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எதாவது தகராறு வந்தா உடையிறது நம்ம மண்டை தான். என்னமோ பரம்பரை பரம்பரையா நடக்குற பங்காளி சண்டை மாதிரி அடிச்சிக்குவாங்க. இதுல சண்டைக்கான காரணத்துல ஆரம்பிச்சு அலசி,துவைச்சு,புளிஞ்சு கடைசியில காய வைக்கிற வரைக்கும் எல்லா கட்டப்பஞ்சாயத்தும் நாம தான் நீயா நானா கோபிநாத் மாதிரி செய்யனும்.. 'தொடர்ந்து பேசுவோம் லயன் டேட்ஸ் சிரப்'னு விளம்பர இடைவேளை கூட விட முடியாது. விசு பட டயலாக்கெல்லாம் பேசி "சமாதானமா போங்கடா கண்ணா"ன்னு சாந்தப்படுத்தனும்.  

6) ஒருவேளை அந்தப் பொண்ணு வேலை பாக்குற இடத்துலையோ, இல்ல மாமன் பையன்,அத்தை பையன் பிரச்சனையோ அல்லது வீட்டுலையோ கல்யாணம் பேச ஆரம்பிச்சிட்டாலோ நம்மல கேக்காமையே நம்மல கமிட் பண்ணிருவாய்ங்க. தல கவுண்டமணி, "கசாப்பு கடையில எல்லாம் ஆட்ட கேட்டுட்டுதான் வெட்டுறாய்ங்களா, அது மாதிரி தான்"னு சொல்ற மாதிரி  நாம எனி டைம் ஒரு "ஸ்கார்ப்பியோ" புக் பண்ணிட்டு "சம்போ சிவசம்போ"ன்னு ரெடியா இருக்கனும்.

7) ஒருவழியா இவங்க லவ் மேட்டர் வீட்ல என்னைக்காவது தெரிஞ்சிரும், அப்படி தெரிஞ்ச அவ்ளோதான் அதுல இருந்து அவங்க அப்பா அம்மா நம்மல எதோ அக்னி நட்சத்திரம் படத்துல பிரபுவும்,கார்த்திக்கும் பாத்துக்குற மாதிரி பாக்குறப்ப எல்லாம் "ஸ்லோ மோஷன்"ல மொறச்சிகிட்டே போவாங்க. நம்ம தல கவுண்டர் , "ஆமா இவன் ஒன்னும் தெரியாத கன்னிப் பொண்ணு தூக்கிட்டு போயி கெடுத்துட்டோம்"னு சொல்ற மாதிரி ஒன்னும் தெரியாதவைங்கள நாம தான் லவ் பண்ணுடா மவனேன்னு அனுப்பி வச்ச மாதிரி கொடுரமா பாப்பாங்க. இதையெல்லாம் விட கொடுமை ஒருவேளை அந்த லவ் பண்ண பொண்ணுக்கும் பையனுக்கும் வீட்டுலையே ஒத்துகிட்டு கல்யாணம் பண்ணி வச்சாலும் நம்ம மேல உள்ள 'க்ரைம் ரேட்'ட மட்டும் குறைச்சுக்கவே மாட்டாங்க.

8) இதவிட என்னொரு பேராபத்து இருக்கு..அதாவது கல்யாணத்துக்கு ரெண்டு பேரு வீட்டுலையும் ஒருவேளை ஒத்துக்கலைனா, அவனுங்களவிட பாதிப்பு நமக்கு தான் அதிகமா இருக்கும். அந்தப் பொண்ண சமாதானப்படுத்தி, அவங்க வீட்டுல பேச்சு வாங்கி, கூட இருக்குறவன் தொல்லைய தாங்கி,அவன் வீட்டுல பேச்சு வாங்கின்னு நாலா பக்கமும் தாக்குவாங்க.எல்லாத்தையும் சமாளிக்கனும். இதுல லவ் மேட்டர் வீட்டுல தெரிஞ்சு அவங்க ஒத்துக்குற வரைக்கும் உள்ள இடைப்பட்ட காலம் இருக்கே அது தான் நமக்கு உச்சக்கட்ட சோதனை காலம். நாம assignment சப்மிட் பண்ணாம இருக்குறப்போ, க்ளாஸ் முடியிற நேரம், வாத்தியார் ஒவ்வொரு benchஆ கரெக்ட் பண்ணிட்டு வரும்போது நம்ம கிட்ட வர்றதுக்கு முன்னாடி பெல் அடிக்காதான்னு இருக்குமே அப்படி ஒரு ஃபீலிங்...அடிவயிற்றில் எப்பவுமே ஒரு கலக்கம் இருந்துகிட்டே தான் இருக்கும். இதுல நடுவுல நம்மாளோட கூட வேலை பாக்குறவன் மூணாம்கட்ட, நாலாம்கட்ட ஃப்ரெண்டு எல்லாம் வந்து அவனுக்கு அட்வைஸ் பண்றேங்குற பேர்ல வீட்டுல ஒத்துக்கலனா தனியா கிளம்பிரு மச்சி, உன் வாழ்க்கை உன் உரிமை'ன்னு கல்யாண் ஜுவலர்ஸ் பிரபு மாதிரி உசுப்பேத்தி விட்ருவானுங்க. எல்லாத்தையும் கேட்டுட்டு எந்த நேரத்துல என்ன முடிவெடுப்பான்னு நமக்கு ஒவ்வொரு நிமிசமும் எதோ திரில்லர் படம் பாக்குற மாதிரியே இருக்கும். எதையும் அவன் மண்டையில் ஏற விடாம லூசுத்தனமா எதாவது செய்யவும் விடாம ஐசியூ வார்டு நர்ஸ் மாதிரி 24 மணி நேரமும் கவனிச்சிகிட்டே இருக்கனும்.

இந்த மாதிரி எல்லா கட்டத்தையும் தாண்டி அவங்களுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகி முடியறதுக்குள்ள நாம படுற பாடு இருக்கே.  சைட் அடிக்கும்போது கூட நிக்கிறதுல இருந்து கல்யாணத்து அன்னைக்கு மேடையில கூட நிக்கிற வரைக்கும் அவய்ங்க கதையில நாம தான் "ஹைலைட்"டா இருப்போம். இப்படி நண்பனுக்காக எல்லாத்தையும் பொறுத்துகிட்டு, சமாளிச்சிகிட்டு அவன தெம்பேத்தி விட்டு தைரியமா 'லவ் பண்ணுடா மவனே'னு சொல்ற மாதிரி நண்பர்கள் இருக்குற வரைக்கும் லவ் பண்றவன் தைரியமா நிம்மதியா இருப்பான். நாம பொலம்பிகிட்டே செய்ய வேண்டியத செஞ்சிட்டு தான் இருப்போம்.

Wednesday 26 February 2014

மூன்று பிரதமர்களும் முக்கிய அம்சங்களும்




கொஞ்ச காலத்துக்கு முன்னாடி நம்ம ஊருல இருந்த ஒரு ஹாட் டாபிக்னா அது அடுத்த சூப்பர் ஸ்டார் யாருங்குறது தான். அதுக்கு ஆயிரம் அடிதடி நடந்து இன்னும் முடிவு தெரியாம ஆளாளுக்கு நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு சொல்லிகிட்டு ஓட்டிகிட்டு இருக்காங்க. அது மாதிரி இப்ப ஒரு லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னனா அடுத்த பிரதமர் யாருங்குறது தான். எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் எந்த கட்சி ஜெயிக்கும்னு தான் போட்டி வந்திருக்கு ஆனா இப்பதான் தேர்தலுக்கு முன்னாடியே இத்தன பிரதமர் வேட்பாளர்கள் நமக்கு கிடச்சு அதுக்கு போட்டி நடந்திட்டு இருக்கு. ஆல் இந்தியா லெவல்ல லிஸ்ட் ரொம்ப நீளம்கிறதால நமக்கு தேவையான முக்கியமான லிஸ்ட்ட மட்டும் பாப்போம். நம்ம ஊருல ஹைலைட்டான மூனு பேரு, இதுல மோடியும் ராகுலும் இந்திய லெவல் போட்டி இடையில புகுந்து ட்விஸ்ட் கொடுத்தது நம்ம "அட்மினிஸ்ட்ரேட்டர் அம்மா" ஜெயலலிதா.





     மோடி, இந்திய அரசியலின் பவர்ஸ்டார். நம்ம தமிழ் சினிமாவுல பவர் ஸ்டார் எப்படி திடீர்ன்னு உள்ள புகுந்து அதிரடி விளம்பரத்தால அதிரவச்சாரோ அதே மாதிரி தான் மோடியும், முழுக்க முழுக்க மீடியா 'ஹைப்'னாலையே பிரபலமாயிட்டாரு. நம்ம மீடியாவ பத்தி தான் தெரியுமே குதிரையா குரங்காவும் காட்டும், குப்பைய குதிரையாவும் மாத்தும். குஜராத் கலவரத்தையும், சிறுபான்மையினருக்கு செய்த துரோகத்தையும் முழுசா மூடி மறச்சு குஜராத்தை என்னமோ அவரு மட்டும் தான் வடிவமச்ச மாதிரி விளம்பரபடுத்திட்டு இருக்காங்க. ராஜபக்சே மாற்று இன மக்களுக்கு எதிரா செய்த்த படுகொலையை விட மோடி சொந்த நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் பெரிசு. கரன் தப்பார் எடுத்த பேட்டி ஒன்ன பாத்தாலே போதும், முதல்வன் ரகுவரன் மாதிரி செம பெர்ஃபார்மன்ஸ் போடுவாரு. இதுல வேற மோடி இளைஞர்களின் நம்பிக்கை முகம், அலை வீசுது, நாத்தம் வீசுதுனு பில்டப் கொடுக்குறானுங்க, நடுவுல வேற ட்விட்டர், ஃபேஸ்புக்ல எக்கசக்கமா ஆதரவு மோடிக்கு தான் இருக்கு அவங்க எல்லாம் ஓட்டு போட்டாலே மோடி பிரதமர் ஆகுறத யாரும் தடுக்க முடியாதுன்னு எஃபக்ட் கொடுத்தாங்க. இத சொல்லும் போது ஒரு பேட்டியில எனக்கு நம்ம பவர்ஸ்டார் ,"நான் நெனச்சா நாளைக்கே என் ரசிகர்கள் 50லட்சம் பேர கடற்கறையில கூட்டி காட்டுறேன் சார்"னு சொன்னாரு அதான் ஞாபகம் வருது. கள்ள ஓட்டு போடுறதுக்கு ஆள் வச்சிருப்பாங்கன்னு கேள்வி பட்ருக்கேன் ஆனா கள்ள லைக் போடுறதுக்கு ஃபேக் ஐடி வச்சிருக்கிற ஆள இப்பாதான் பாக்குறேன். சரி அப்படி என்னதான்யா நிர்வாகத்திறமையால என்ன தான் சாதிச்சிட்டாருன்னு பாத்தா இந்தியாவுல உள்ள மாநிலங்கள்ல வளர்ச்சி சதவிகிதத்துல குஜராத் ஒன்னும் அவ்ளோ சிறப்பா இல்ல. பல மடங்கு பின் தங்கிய பீகார் முதல் இடத்துல இருக்கு. ஆனா மீடியா அதையும் பில்டபோட சொல்லி ஊர ஏமாத்துறாங்க. நம்மாளு மோடியும் டீ கடையில உக்காந்து அரசியல் பேசுறது, பஞ்ச் டயலாக் விடுறதுன்னு என்னென்னமோ கம்பு சுத்தி காட்டுறாரு..பாப்போம்.



அடுத்து நம்ம ராகுல் காந்தி. ஒரு நாள் டி.வியில ஒரு விளம்பரத்துல ஒரு இளைஞர் வந்து டப்பிங் பண்ண விளம்பரம் மாதிரி பேசிட்டு இருந்தாரு.. ஏதோ டப்பிங் பண்ண அரசாங்க விளம்பரமோ, இல்ல சக்தி மசாலா விளம்பரமோன்னு நெனச்சா திடீர்னு ராகுல், சோனியா,மன்மோகன் எல்லாம் என்ட்ரி ஆகுறாங்க..அப்புறம்தான் தெரியுது அது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரம்னு.. காங்கிரஸ் நிலமை இப்படி ஆயிருச்சே..இனிமே ராகுல் தான் நம்ம 'டான்' இவரு கைல தான் எல்லாரும் முத்தம் தரனும்னு காங்கிரஸ் காரங்க மைண்ட் செட்டானங்க. இவரும் இளைஞர் காங்கிரஸ் அது இதுன்னு ஆரம்பிச்சாரு, அப்பதான் தேர்தல் வந்துச்சு நம்மாளும் குடிசைக்கு போய் சப்பாத்தி சாப்பிடுறது, கயித்து கட்டில்ல உக்காந்து காத்து வாங்குறதுன்னு என்னென்னமோ பண்ணாரு கடைசியில எல்லாம் புஸ்குனு போயிருச்சு. குடிசைக்கு போய் சப்பாத்தி சாப்புட்டு ஓட்டு கேக்க மறந்துட்டாரு போல, மக்களும் பாவம் புள்ளைக்கு பசி போலன்னு சப்பாத்திய போட்டுட்டு ஓட்டு போடாம விட்டாங்க. பெருசுங்க எல்லாம் நாங்களா போய் கை காலுல விழுந்தா கூட ஓட்டு போட்ருபாய்ங்க, உன் பேச்ச கேட்டு இப்படி ஆயிருச்சேன்னு கடுப்பாயிட்டாங்க.  இப்ப நடுவுல சும்மா இருக்காம பேட்டி கொடுக்க போறேன்னு போய் அங்க எந்த கேள்வி கேட்டாலும் நம்ம வடிவேலு மாதிரி "என்ன கைய புடிச்சு இழுத்தியா??"ன்னு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு கிளம்பி வந்துட்டாரு. அப்பதான் காங்கிரஸ்க்கு தெரிஞ்சிச்சு போல இந்தாளு சிரிப்பு போலீஸ்னு. தம்பி நீங்க ஒதுங்கிக்குங்க நாங்க பாத்துக்குறோம் ஜெயிச்சா உன்ன ஆட்டையில சேத்துக்குறோம்னு சொல்லி அமைதி படுத்திருக்காங்க. மன்மோகன் சிங், மனுசன் அவரு பாட்டுக்கும் வெள்ளை சட்ட போட்டுகிட்டு நிதி அமைச்சரா டீசண்டா இருந்தாரு, அவர கொண்டு வந்து பிரதமர் ஆக்கிவிட்டு இண்டர்நேசனல் லெவல்ல நாரடிச்சிட்டாய்ங்க. இனிமே கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் எனக்கு அந்த ஞாபகம் தானடா வரும்னு ஃபீல் பண்ணிட்டு கிளம்பிட்டாரு. இப்ப பிரதமர் வேட்பாளர் யாருன்னு அவங்களுக்கு தெரியாது நமக்கும் தெரியாது.

கடைசியா நம்ம லோக்கல் ஸ்டார் ஜெயலலிதா. தெரிஞ்சிக்குங்க மக்களே, நாப்பதுக்கு நாப்பது ஜெயிச்சாலும் அது எப்படி பிரதமர் ஆக முடியும்னு யாரும் லாஜிக்கல் கொஸ்டின் கேக்க கூடாது. அவங்க சொன்னத கேட்டுக்கனும். தல கவுண்டமணி சொல்ற மாதிரி "பழனிச்சாமி என்ன தைரியத்துல நீ இப்படியேல்லா பேசுற"ன்னு எல்லாம் கேக்க கூடாது. நமக்கு தமிழ்நாட்ட நிர்வாகிக்கறதுக்கே ஒரு மாசத்துக்கு ரெண்டு மாசம் ஓய்வு கேக்குது. இதுல டெல்லி ஆசை எதுக்கு?? இங்க எல்லாம் சாதிச்சு முடிச்சிடாங்களாம் அடுத்து இப்ப இந்தியா மானத்தை நான் தான் காப்பாத்துவேன்னு கிளம்பிட்டாங்க. ஆபிஸ்ல ஒரு தடவை இந்த பேச்சு வந்தப்ப கூட வேலை பாக்குற ஒரு பொண்ணு அம்மா பிரதமர் ஆனா தான் நல்லா இருக்கும்னு சொன்னாங்க.அப்படி என்னதாங்க அந்த அம்மா பண்ணிருக்குன்னு கேட்டேன், யோசிச்சு யோசிச்சு பாத்து கடைசியில அவங்க நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்னு சொன்னாங்க. ஏங்க ரெண்டு மணி நேரம் சொல்லிட்டு கரெண்ட நிறுத்துனாங்க இந்தம்மா வந்து ரெண்டு மணி நேரம் தாண்டா எங்க ஊர்ல கரெண்டே விட்டுச்சுன்னு சொன்னா,"பொய் சொல்லாதிங்க பாஸ், நாலு மணி நேரம் தான் கரெண்ட் கட் ஆச்சு'ன்னு சொல்றான் இன்னொரு சென்னை பையன். ரெண்டு வருசமா தமிழ்நாடே இருள்ல மூழ்கி இருந்தது கூட தெரியாம அட்மினிஸ்ட்ரேட்டர்னு அரைகுறையா உளறிட்டு இருக்காங்க நம்ம பசங்க. நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்னு குருட்டுத்தனமா சொல்றவங்களுக்கு இப்போ வந்த GDP ரிப்போர்ட்ல அட்மினிஸ்ட்ரேட்டர் அம்மா தமிழகத்த எங்க கொண்டு போய் விட்ருக்காங்க தெரியுமா?? ஒலிம்பிக் பதக்க பட்டியல்ல இந்தியா பேரு மாதிரி கீழ கிடக்கு. 2009ல் திமுக ஆட்சியில் 10.8% இருந்த வளர்ச்சி விகிதம் பின் 2010ல் திமுக ஆட்சியில் 13.8ஆக உயர்ந்தது. பின் 2011-2012 ஜெயலலிதா ஆட்சியில் 7.42 ஆக  சரிந்த வளர்ச்சி விகிதம் இப்போது 2013ல் 4.14% ஆகக் குறைந்து அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது (அட்மினிஸ்ட்ரேட்டர்னு சொல்ற பல பேருக்கு GDP என்ன, எதுக்குனே தெரியாது). இதெல்லாம் நம்ம பசங்களுக்கு தெரியாது,காரனம் ஊடகம். ஒன்னுமே செய்யாம எல்லாமே செஞ்சு சாதிச்ச மாதிரி பில்டப் கொடுத்து ஏத்தி விடுறதே இவங்களுக்கு பொழப்பு.



நம்ம ஆளுங்களும் இந்தம்மா அறிவிக்கிற திட்டங்கள நம்பி என்னமோ நெறைய நன்மை செய்யிறதா நெனச்சிகிட்டு ஏமாந்து போறாங்க. சுருக்கமா சொல்லனும்னா வானத்தை போல படத்துல செந்தில் பிச்சகாரனுக்கு இட்லி,வடை,தோசைன்னு கட்டி தர சொல்லுவாரு அதுக்கேத்த மாதிரி அந்த பிச்சக்காரனும் மகராசா,எசமான்,நூறு வருசம் இருக்கனும் வாழ்த்துவாரு, கடைசியில ஒன்னுமே தராம செந்தில் பிச்சக்காரன்கிட்ட, ஏண்டா நீ சொன்னதெல்லாம் எனக்கு நடக்கவா போகுது,உன் மனசுக்கு சந்தோசமா நான் சொன்னேன், என் மனசுக்கு சந்தோசமா நீ சொன்ன அவ்ளோதான் கிளம்புன்னு சொல்லுவாரு. அதே கதை தான் தமிழக மக்களுக்கும், ஜெயலலிதாவும்.
செந்தில் ஜெயலலிதா அறிவிக்கும் திட்டத்துக்கு (அறிவிப்பு மட்டுமே) நம்மாளுங்களும் அன்னலெட்சுமி,வீரலட்சுமி,ஈழத்தாய் அது இதுன்னு அகராதியில இருக்குற எல்லா பட்டத்தையும் கொடுப்பாங்க, கடைசியில நீங்க என்ன அடுத்த தடவ எனக்கா ஓட்டுப் போட போறிங்க உங்களுக்கு செய்யிறதுக்குன்னு சொல்லிட்டு கொடநாட்டுக்கு கிளம்பிருவாங்க. இதுக்கும் வக்காலத்து வாங்குவானுங்க நம்மாளுங்க, கொடநாடு தமிழ் நாட்டுல தான இருக்கு அங்க இருந்து முதல்வர் அலுவலக வேலை செய்யலயான்னு லா பாயிண்ட் பேசுவானுங்க.
என்னயா டிக்கெட் எடுக்காம கக்கூஸ்லையே உக்காந்து போற மாதிரி சொல்றிங்க. டிக்கெட் எடுத்தவன் நல்லா சீட்ல உக்காந்து போக வேண்டியது தான.. எப்பவுமே கக்கூஸ்ல இருக்குறதுக்கு எதுக்கு டிக்கெட் எடுக்கனும். (படிக்காதவன் படத்தில் விவேக் ட்ராக்). அப்படி முடியாத பட்சத்துல எதுக்கு கஷ்டப்பட்டு முதல்வரா இருக்கனும் போய் முழுசா ஓய்வு எடுக்க வேண்டியது தான.

ஆகமொத்ததுல ஒன்னு தெளிவா தெரியுது ஒருகாலத்துல கிராமத்து மக்கள சினிமாவ காட்டி ஓட்டு வாங்குன மாதிரி இன்னைக்கு இளைஞர்கல மீடியா விளம்பரத்த காட்டி ஏமாத்தி ஓட்டு வாங்க பாக்குறாங்க. இவங்களுக்கு போடுங்க அவங்களுக்கு போடாதிங்கன்னு சொல்லல,யாருக்கு போட்டாலும் கொஞ்சம் முன்ன பின்ன யோசிச்சு, விசயத்தை,விளைவுகளை,நிகழ்வுகளை எண்ணி முடிவு பண்ணுங்க.