Wednesday 28 November 2012

தமிழகம் என்ற ஒரு இருண்ட கண்டம்..!!



                                       மின்வெட்டு. இன்னைக்கு மக்கள் அதிகமா அவதிப்படும் மிகப் பெரிய பிரச்சனை.முன்னாடி எல்லாம் ஹோட்டல் பொங்கள்ல இருக்குற முந்திரி பருப்பு மாதிரி எப்பவாது கரெண்ட்டு போகும், ஆனா இப்ப எல்லாம் பந்தியில போடுற பிரியாணில பீஸ் மாதிரி தான் கரெண்ட்டே கிடைக்குது. கரெண்ட் எப்ப போச்சுன்னு கேட்டது போயி கரெண்ட்டு வந்துச்சான்னு கேக்குற நிலமை. இன்னும் சில பேரு மின்வெட்டோட ஒன்றி போயி கரெண்ட்டு வந்ததே தெரியாம கரெண்ட்டு இருந்தும் விசிறியால விசிறிகிட்டும், மெழுகுவர்த்தி வச்சிக்கிட்டுமே வாழ ஆரம்பிச்சிட்டாங்க. ஒரு நாள் தியேட்டர்ல நைட் ஷோ படம் பாக்குறப்போ மின்வெட்டு வழக்கம்போல அது வேலைய காட்டிட்டு இருந்துச்சு,ஜெனெரேட்டர்,கரெண்ட்டுனு மாத்தி மாத்தி ஓடிட்டு இருந்துச்சு, ஒரு மூனாவது தடவ ஜெனெரேட்டர்ல இருந்து கரெண்ட்டுக்கு மாத்தும்போது பக்கத்துல ஒருத்தர் கேக்குறாரு,"கரெண்ட் போச்ச இல்ல வந்துச்சா,எதுக்கு ஆப் ஆகுதுனே தெரியலைனு.எந்த ஒரு விஷயமா இருந்தாலும் சரி மக்கள் கொஞ்ச நாள்ல அதோடவே ஒன்றி வாழ பழகிக்குவாங்கக்குறதுக்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு.

இப்போ மட்டும் தான் மின்வெட்டு இருக்கா, போன ஆட்சியிலதான் முதலில் ஆரம்ப்பிச்சது  அதனால் அவங்கதான் காரணம்னு சில அறிஞர்கள் இந்தப் பிரச்சனையை திசைத் திருப்புறாங்க. ஆமாம், போன ஆட்சியிலும்தான் மின்வெட்டு இருந்தது, ஆனால் முன் அறிவிப்போடு சொன்ன நேரத்தில் மட்டும்தான் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது (இத சொல்லி சொல்லி வாயே வலிக்குது.. எத்தன நாள்தான் தெரியாத மாதிரியே நடிப்பாய்ங்களோ..!). ஆனால் இப்போ, மொத்தமே மூன்று மணி நேரம் தான் கரெண்ட்டு இருக்கு அதுவும் சில நாள் கிடையாது.நேரம் காலம் பாக்காம கண்ட நேரத்துக்கு அவனுங்க இஷ்டத்துக்கு கட் பண்ணிருவாங்க.பகல்ல பண்ணா கூட பரவாயில்ல, இராத்திரி அதுக்கு மேல, வெளிய மக்கள் தைரியமா போக முடியல, பெரியவங்க, குழந்தைங்க நிம்மதியா தூங்க முடியல, மின்வெட்ட பயன்படுத்தி கொலை,கொள்ளைனு சகலமும் சவுகரியமா நடக்குது. பண்டிகை நாட்கள நம்பி கடன் வாங்கி தொழில் செய்யும் வியாபாரிகளுக்கு இது பெரிய அடி. இன்வெர்ட்டர் சார்ஜ் ஆகுற அளவு நேரம் கூட கரெண்ட் இருக்க மாட்டேங்குது. சாய்ந்தர நேரம் கடைவீதி பக்கம் போனா ஒரே இருளடைஞ்சு கிடக்கு. 

ஏன் மின்வெட்டு நேரம் அதிகமாச்சு, அதுக்கான காரணம் என்ன, சரி செய்ய என்ன பண்ணப்போறிங்கனு நமக்கும் கேக்க முடியாது கேட்டாலும் சொல்லமாட்டாங்க. மின்வெட்டை சரி செய்ய கடந்த ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட (Electricity Projects) அனைத்து முயற்சிகளும்,திட்டங்களும் அப்படியே நிலுவையில்,கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதுவே பெரும் பின்னடைவு, மின்வெட்டு நேரம் உச்சத்திற்கு சென்றதுக்கான முக்கிய காரணம். ஆனால் இதற்கு எந்த விளக்கமும் இன்றைய அரசு தரவில்லை. ஒரு மாநிலமே இருளில் மூழ்கி இருக்கும் நேரத்தில் கூட மக்கள் பிரச்சனையை பொருட்படுத்தாமல் பழிவாங்கும் படலமாகவே செயல்பட்டுக்கொண்டும்,அடுத்தவர்களை குறை கூறிக்கொண்டுமே காலத்தை கடத்திக்கொண்டு ஒரு அரசு இருப்பது எவ்வளவு கையாளாகாத்தனத்தை குறிக்கிறது. பல பத்திரிக்கைகளும் இதைப்பத்தி கேட்க துணிவில்லாமல் மின்வெட்டுனு ஒரு பிரச்சனை இருக்குற மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பிற கட்சிகளின் அரசியலையே நாட்டின் தலைப்பு செய்தியாக போட்டு அரசிடம் ஆதாயம் தேட பார்க்கிறார்கள்.

தமிழ்நாட்டுல உற்பத்தியாகும் மின்சாரத்தில் முக்கால்வாசி வேற மாநிலங்களுக்கு வழங்கப்படுகிறது,இருக்கும் கொஞ்ச மின்சாரத்திலேயும் சென்னைக்கு மட்டுமே முக்கால் பங்கும், மீதி தமிழகத்துக்கு மீதி பங்குனு கூரு போட்ருக்காங்க. அது ஏன் சென்னைக்கு மட்டும் கருணைனு கேட்டா,அங்க தலைமையிடம், தொழிற்சாலைகள் அதிகம், அதனால் அங்கு மின்சாரம் அதிகம் தேவைப்படும் அதனால்தான் இந்த பாகுபாடுனு சொல்றாங்க. ஆமா தமிழகத்தோடு ஒப்பந்தம் போட்டு தொழிற்சாலைக்கள் தொடங்கிய அனைத்து தொழிற்சாலைகளுக்கும் கண்டிப்பாக தேவையான மின்சாரம் அளிக்கப்பட வேண்டும். இதை மீறினால் அரசுக்கு சட்ட ரீதியான சிக்கல்கள் வரும், பெருமளவு இழப்பீடும் கொடுக்க வேண்டியது வரும். ஆகையால் இது தவிர்க்க முடியாத ஒன்று. தொழிற்சாலைகளுக்கு கொடுக்கும் மின்சாரத்தையும் நிறுத்த முடியாது மக்களுக்கும் மின்சாரம் அளிக்க வேண்டும். இதற்கு என்ன வழி.?

நிலுவையில் போடப்பட்டுள்ள மின் திட்டங்களை (Electricity projects) செயல் படுத்தினாலே தமிழத்துக்கு இன்றைய நிலையில் போதுமான மின்சாரம் கிடைக்கும். மேலும் இது போல் நிலையை வருங்காலத்தில் தவிர்க்க புதிதாக தொடங்கப்படும் தொழிற்சாலைகளுடன் ஒப்பந்தம் போடும் போதே மின் உற்பத்தி அளவை கணக்கில் கொண்டு பகுதி மின்சாரத்தை மட்டும் அரசு வழங்கி மீதம் உள்ள மின் தேவைக்கு சூரிய சக்தி மின்சாரம்,   போன்றவற்றை கண்டிப்பாக தொழிற்சாலைகளை நிறுவ சொல்ல வேண்டும் (குறிப்பிட்ட அளவிற்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களில் சூரியசக்தி மின்சாரம் உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும் என்று இப்போது நிபந்தனை உள்ளது) . சூரிய சக்தி மின்சாரம் போலவே "bloom energy" என்று ஒரு மின் உற்பத்தி முறை உள்ளது. இயற்கை எரிவாயு அல்லது bio gasஐ செலுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.

 இந்த Bloom energyல் பல அடுக்குகளாக solid oxide fluid cells இருக்கின்றது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட fuel cell technology களிலேயே சிறந்ததே இந்த solid oxide fluid cell technology. இந்த cell களுக்குள் அனுப்பப்படும் இயற்கை எரிவாயு, அல்லது பயோ கேஸில் இருந்து அதிகப்படியான எலக்ட்ரான் உருவாகி மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின் உற்பத்தி முறையால் குறைந்த செலவில், அதிக மின்சாரம் தொடர்ந்து தயாரிக்க முடியும். இதில் சுற்றுசூழல் மாசும் மிக குறைவு. அமெரிக்காவில் இன்று பல தொழிற்சாலைகள் இந்த முறையையே பின்பற்றுகின்றன.இது போன்ற திட்டங்களை புதிதாக தொடங்கும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தினால் கணிசமான அளவு மின்சாரம் மிச்சமாகும்.


இன்னும் கொஞ்ச நாள்ல மின்வெட்டு பிரச்சனையை மக்களே மறந்து போகக்கூட வாய்ப்பு இருக்கு,அதுக்குள்ள இருளும் இருள் சார்ந்த இடமுமா இருக்குற தமிழகத்துக்கு இந்த மாதிரி ஏதாவது மின்சாரத்தை சேமிக்க, அல்லது உற்பத்திக்கான திட்டம் இருந்தால் தெரிவிக்கலாம்.!! 

Thursday 18 October 2012

மாற்றான் - எனர்ஜியான் குடிங்க..!!



இந்தப்படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடி மாற்றான் படத்தோட கதை இந்தப் படத்தோட காப்பி அந்தப் படத்தோட காப்பி, ஒரு நாவலின் கதைன்னு நெறைய பேரு சொன்னாங்க,ஆனா டைரக்டர் கே.வி ஆனந்த், அதெல்லாம் கிடையாதுப்பா மாற்றான் யார மாதிரியும் எது மாதிரியும் கிடையாது அவன் ஒரு புது மாதிரி,உண்மையிலையே மாற்றான்னு அடிச்சு சொன்னாரு. ஆனா படத்த பாத்ததுக்கு அப்புறம் தான் தெரியுது முன்னாடி சொன்ன மாதிரி எதாவது ஒரு படத்தோட காப்பியாவே இருந்திருக்கலாம்.ஏன்னா சில படத்துல அடுத்து அடுத்து என்ன ஆகும்னு பாக்குற ஆடியன்ஸ்க்கு தான் தெரியாம இருக்கும்,ஆனா இந்தப்படத்துல டைரக்டருக்கே தெரியாம பாவம் தவிச்சிருக்காரு.

படத்தோட கதை, அகிலன்-விமலன் சூர்யாக்களின் தந்தை திறமையா ஜெனிடிக் எஞ்சினியர் அவர் ஆரம்பிக்கும் ஒரு ஊட்டச்சத்து பவுடர் கம்பெனி 'எனர்ஜியான்'ல (Energion) எதோ கலப்படம் இருக்குறதா பலபேர் சொல்லியும் அத நிரூபிக்கமுடியல. அதோட பின் விளைவுகள தெரிஞ்சிகிட்டு, அப்பா தான் அதுக்கு காரணம்னு அவரை எதிர்க்குறாரு விமலன் சூர்யா. கலப்படத்துக்கான ஆதாரம் உள்ள pendrive விமலன் சூர்யாகிட்ட கிடைக்குது.அத பறிக்க சூர்யா அப்பா ஆள் அனுப்புறாரு அவங்களால விமலன் சூர்யா கொல்லப்படுறாரு.அப்புறம் என்ன இன்னொரு சூர்யா பழிவாங்குறது+உண்மையை கண்டு புடிக்கிறது போன்ற வேலைகள்ல களம் இறங்குறாரு.

ஒட்டிப் பிறந்த ரெட்டைப் பிறவிகள் கதைல சூர்யா எப்படி கலக்குறார்னு பாக்குறதுல ஒரு ஆசை. சூர்யாவும் அந்த நம்பிக்கைய மோசம் பண்ணாம (ப்ரியாமணி மாதிரியே) நல்லாவே நடிச்சிருக்காரு (அவரோட முந்தய படம் கேரக்ட்டர் ரெண்டு சேர்ந்து நடிச்ச மாதிரி இருந்துச்சு). அதுவும் முதல் பாதில மட்டும். ரெண்டாவது பாதில 'சிவகாமி கம்ப்யூட்டர்' தன் சித்து விளையாட்ட காட்டுன மாதிரி அவரோட மாமூலான கிளாஸ் எடுக்குற வேலைய இந்தியாவுல ஆரம்பிச்சு அப்படியே உக்§Åனியா போயி அங்கிருந்து அப்படியே குஜராத்ல முடிச்சு கடைசில ஜனாதிபதி விருதும் வாங்கிறாரு.(ரெண்டு வருஷத்துல ரெண்டு ஜனாதிபதி விருது, ஏழாம் அறிவிலும், மாற்றானிலும் பெற்ற ஒரே தமிழன்..!! அவர் இதுபோல பல விருதுகளை பெற வாழ்த்துகிறேன்). A.R.முருகதாஸும், K.V.ஆனந்தும் போட்டிப் போட்டு சூர்யாவுக்கு ஜனாதிபதி விருது வாங்கிக் கொடுத்திருக்காங்க. அப்புறம் வழக்கம் போல மொக்க காமெடி, சிக்ஸ் பேக் டூயட்,நெஞ்சுல குத்திக்கிட்டு சோகப்பாட்டு, ஸ்பெஷல் டயலாக் டெலிவரி ஸ்டைல், சண்டைனு அவரு வேலைய முடிச்சிட்டாரு. சிக்ஸ் பேக் வச்சிருந்தா சண்ட சீன்ல காட்டுனா பரவாயில்ல,எதுக்குய்யா பாட்டு சீன்ல சட்டைய கழட்டிப்போட்டு சுத்துறிங்க. இங்க பரவாயில்ல, அங்க ஹிந்தி படத்துல ஜான் ஆபிரகாம்னு ஒருத்தன் அடுத்த கட்டத்துக்கு போய்ட்டான், அதாவது ஜட்டியையும் பாதி கழட்டி விட்டு ஆடுறான். அது வரைக்கும் நம்ம சினிமா பரவாயில்ல.  

காஜல் அகர்வால்,படத்துல அழகா இருப்பாங்க ஆனா பாதி படத்துல அவங்க பேசுறதே புரியாது ஏன்னா சூர்யாவுக்கு அவங்கதான் 'கூகுள் ட்ரான்ஸ்லேட்டர்'. ரஷ்யன் மொழி பெயர்ôÀ¡ளர். சூர்யா^2 நடுவுல சிக்க வச்சிðடாங்க. ஒரு பெண் போலிஸ் காஜல் கிட்ட இவைங்கள என்ன ஆடித்தள்ளுபடில புடிச்சியானு கேப்பாங்க, அதுக்கு அர்த்தம் படத்தோடரெண்டாவது பாதில தெரியும். ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான இருக்காங்க அதுனால என்னனு முதல்ல ஒருத்தன லவ் பண்ணிட்டு அவன் போனதுக்கு அப்புறம் இன்னொருத்தன கல்யாணம் பண்ணிக்குறாங்க. 'வாட் எ ப்ராக்டிகல் லவ் ஸ்டோரி'.அடுத்தது நம்ம ஹாரிஸ் ஜெயராஜ். அவர் பங்குக்கு வெயிட்ட காட்டிட்டாரு. அவரும் எத்தன படத்துல தான் புது ட்யூன் போடுற மாதிரி சமாளிப்பாரு பாவம். அதுவும் கடைசில ஒரு பேக்கிரவுண்டு மியூசிக் போடுவாரு பாருங்க.. கண்ணமாம்பேட்ட தரத்துல. ச்சே. வாய்ப்பே இல்ல. இந்த படத்துல கூட முந்தின படப் பாட்டு சாயல் இருந்துச்சு, இவரு அடுத்த படம் துப்பாக்கி தான் உச்சக்கட்டம். படம் அறுவையா இருந்து பாத்திருக்கோம் ஆனா பாட்டே அறுவையா இருக்குறத துப்பாக்கி படத்துல தான் அனுபவிச்சேன்.

முதல் பாதி கூட எதோ போயிருச்சு, படத்துல பல மொக்க இருந்தாலும் சில விஷயங்கள் நல்லா இருக்கு. எடிட்டிங்,கேமரா,தீம் பார்க் சண்டை,ரெட்டையர் கிளப் பாட்டு சீன் எல்லாம் சூப்பர். ஆனா எல்லாத்தையும் சேத்து ரெண்டாவது பாதில மொக்க பண்ணிட்டாங்க. சூர்யாவுக்கு ஹார்ட் ட்ரான்ஸ்ப்ளாண்ட் பண்ணது நமக்கு ஞாபகம் இருக்கு ஆனா அவரு மறந்துட்டு இங்கேயும் அங்கேயும் பறந்துகிட்டே இருக்காரு.  அப்பாதான் கொலைகாரர்னு தெரியிற சீன், கி¨Çமேக்ஸ் சீன்ல அப்பா கேரக்டர் வில்லத்தனமா(!!??) பேசுற டயலாக் எல்லாம் செம சப்பையா இருக்கு. எதோ ஏழாம் அறிவு படத்த கொஞ்சம் பட்டி டிங்கரிங் பாத்து வேற ட்ரஸ் போட்டு விட்டு மாற்றான்னு காட்டிட்டாங்க.   
 என் நண்பன் ஒருத்தன் சூர்யா ரசிகன் (படத்த first show பாத்தவன்) சொன்னான், "நண்பா நீ பாத்ததுல படத்துல நெறையா சீன் கட் பண்ணிடாங்க போல அதான் இப்படி சொல்றனு சொன்னான்'. நான் வடிவேலு கைப்புள்ள காமெடில வர அடி கொடுத்த கைபுள்ளைக்கே இந்த நிலமைனா அடி வாங்குனவன் உயிரோட இருப்பான்னு நெனைக்கிறியா நீயினு சொல்ற மாதிரி, நான் நினைச்சிகிட்டேன், அடப்பாவி நெறையா சீன் கட் பண்னத பாத்த எனக்கே இந்த நிலமைன்னா, முழுசா பாத்தவன் ஒழுங்கா வீடு போயி சேர்ந்திருப்பான்னு நெனைக்கிறியா நீயி.

படத்த முழுசா பாத்து முடிக்கனும்னா நீங்களும் எனர்ஜியா ஒரு லோட்டா குடிச்சிட்டு தான் போகனும்.எனர்ஜியான் குடிச்சா என்ன எபெக்ட்னு படத்துல பாத்துக்கோங்கோ..!!   

Sunday 14 October 2012

'ரியல்' எஸ்டேட்- விளை(லை) நிலம்..!!





 நாங்க தங்கியிருந்த ரூம் பக்கத்துல ஒரு ஹோட்டல்ல வேலை பாத்த முருகேசன் அண்ணன பாத்தோம்.. ஆள் முன்னாடி பாத்ததை விட இப்பொ நல்லா 'டெவலப்' ஆயிருந்தாரு. அவருகிட்ட ஃப்ரெண்டு, 'என்னணே ஆளு 'வெயிட்' ஆயிட்டிங்க?? செம வசதியா"ன்னு கேட்டான். அவர், தம்பி நான் ரியல் எஸ்டேட் பண்ண ஆரம்பிச்சிட்டேன்பா, நல்லா போகுது அதான்னு அவரு சர்வர் வேலை to  ரியல் எஸ்டேட் அதிபர்(!!?) ஆன கதையை சொன்னாரு.  ஃப்ரெண்டு என்ட, 'நண்பா என்னடா சொல்றாரு இந்தாளு, ரியல் எஸ்டேட்ல அவ்ளோ வருமானமா வரும்? எதோ டகால்டி விட்றாண்டா நம்மகிட்ட' ன்னு சொன்னான்.

யோசனை தாங்க முடியாம அடுத்தநாள் அவர்கிட்டயே கேட்டோம் அவர் சொன்னதில் இருந்து ரியல் எஸ்டேட்ட பத்தி நிறைய விஷயம் தெரிஞ்சிச்சு.

உதாரணத்திற்கு ஒரு வீடு விலைக்கு வருதுனா அந்த வீட்டு ஓனர் அவரு தேவைக்கேற்ப, அப்புறம் வீட்டோட மதிப்பீடு, (அதாவது இடம் மற்றும் வீட்டோட வயசு 'building age' ) எல்லாத்தையும் கணக்கு பன்ணி அவரு லாபத்திற்க்கு விலைய fix பண்ணுவாரு. சுமார் 10 லட்சம்னு முடிவு பண்ணி அவருக்கு தெரிஞ்சவங்ககிட்டையும், தரகர்கள் கிட்டையும் சொல்லி வைக்கிறாரு.
வாங்க விருப்பப்படுறவங்க புரோக்கர் மூலமாகவோ இல்ல நேரடியா ஓனர் கிட்டையே பேசியோ வீட்ட முடிப்பாங்க.அப்புறம் புரோக்கர் ரெண்டு பக்கமும் கமிஷன் வாங்கிக்குவாரு. இதுதான் நடந்துச்சு இத்தனை நாளு. ஆனா இப்பொ எப்படினா , அந்த ஓனர் கிட்ட ஒரு ரியல் எஸ்டேட் காரர் போயி அந்த வீட்ட நான் முடிச்சிக்குறேன்னு சொல்லி ஒரு தொகைய அட்வான்ஸ் கொடுத்து ஒரு அக்ரிமெண்ட் (நாலு மாசத்துக்குள்ள முழு தொகைய கொடுப்பதாக ) போட்டு அந்த வீட்ட ப்ளாக் பண்ணி வச்சிருவாரு. இப்பொ அதே வீட்ட அந்த ரியல் எஸ்டேட் காரர் வெளிய 14 லட்சத்துல ஆரம்பிச்சு விலை பேச ஆர்ம்பிப்பாரு. பாக்க வர்றவங்க கிட்ட எடத்த பத்தி ஓஹோனு பேசி ஒத்துக்க வச்சி 10லட்ச ரூபாய் வீட்ட 13.5லட்சத்துக்கு முடிச்சிருவாரு. அதுல 10 லட்சத்த ஓனர்கிட்ட கொடுத்திட்டு வீட்டை வித்துருவாரு. ஆகமொத்தம் ரியல் எஸ்டேட்காரருக்கு முதலீடே இல்லாம 3.5 லட்சம் லாபம்.

ஆனால்.. 10 லட்ச ரூபாய் வீட்ட 13.5 லட்சத்துக்கு வாங்குனவர் மட்டும் இதுல பாதிக்கப்பட்டவர் இல்ல, இனிமே அந்த ஏரியாவுல எந்த இடத்துல யாரு வீடு வாங்குனாலும் அவங்க தலையிலும் இந்த பாரம் இறங்கும். சுருக்கமா சொன்னா 10 லட்ச ரூபாய் வீடு 11,12,னு ஏறாம ஒரே அடியா 15,16னு ஏறும். உண்மையான மதிப்பை விட பல மடங்கு அதிகமா விலை போகும். மக்கள் தேவை அதிகமா இருக்குறதால கிடைக்காம போயிருமோனு பயத்துல யோசிக்காம வாங்கிர்றாங்க.

வீடு இப்படின்னா, அடுத்த ப்ளாட்டு இதுக்கு மேல இருக்கு. முன்னாடி வருஷத்துக்கு வருஷம் விலை கூடுச்சுனா இப்பெல்லாம் மாசம் மாசம், இன்னும் சொல்லப்போனா வாரத்துக்கு வாரம் விலை கூடுது. போன மாசம்தான் ஒரு சென்ட் 5 லட்சம் சொன்னிங்க அதையே இந்த மாசம் 5.25 சொல்றிங்கனு கேட்டா, அதுபோன மாசம்,நான் சொல்றாது இந்த மாசம்னு டயலாக் விடுறாய்ங்க. அதுவும் அந்த எடம் உங்களுக்கு கொஞ்சம் புடிச்ச மாதிரி பேச்சோ இல்ல ரியாக்சன் விட்டிங்கனா போதும் அவ்ளோதான். பக்கத்துல டைடல் பார்க் வருது , ஜுராசிக் பார்க் வருதுனு டப்புனு 1 லட்சம் ஏத்திருவாய்ங்க. ஒரு இடம் அதோட மதிப்புப்படி 5 வருசத்துக்கு அப்புறம் ஏற வேண்டிய விலைய இப்பவே அந்த இடத்துக்கு கொடுத்து வாங்குனா என்ன ஆகும்.?? அந்த எடத்த 4 வருஷம் கழிச்சு பேங்க் லோன்க்கு அடகு வச்சா வாங்குன விலை கூட தர மாட்டாய்ங்க.

இது பத்தாதுனு இப்போ சிட்டி விரிவடைய விரிவடைய ஊருக்கு வெளிய இருக்குற விவசாய நிலத்த கம்மியான விலைக்கு வாங்கி அதையும் ப்ளாட் போட்டு வித்துர்றாய்ங்க. ஏற்கனவே பல விவசாய எடத்துல இப்போ கமர்சியல் பில்டிங் வந்தாச்சு. மீதி இருக்குற இடத்தையும் இப்படி கூரு போட்டு வித்துட்டா என்ன ஆகும்.?? ஏற்கனவே பக்கத்து மாநிலத்துக்காரன் கிட்ட தண்ணிக்கு தலைகீழ தண்ணி குடிக்க வேண்டியதா இருக்கு, போதாததுக்கு மழை வேற சதி பண்ணுது, இதுனாலையே பாதி விவசாயிங்க எடத்த வித்துட்டு பனியன் கம்பெனிக்கு வேளைக்கு போய்ட்டாங்க. இதே நிலமை தொடர்ந்துச்சுனா கொஞ்ச வருசத்துல சோத்துக்கே நாம அந்நிய நாடுகள் கிட்ட கை ஏந்துற நிலமை வரும். இப்போ நம்ம கண் முன்னாடியே இந்த நாலு வருசத்துல எவ்வளவோ விளை நிலங்கள் கட்டிடங்களாக மாறிட்டு இருக்கு. இது இன்னும் வேகமா தொடர்ந்தா இந்தியாவின் முதுகெழும்பான விவசாயம் மோசமானா, நாட்டோட நிலமை ரொம்ப ஆபத்தானதா ஆயிரும்.

ஏற்கனவே ஒரு பக்கம் மழை இல்ல, விளைச்சல் இல்ல, மோட்டர் போட கரெண்ட் இல்ல, விவசாயம் செய்ய ஆள் கிடைக்கலன்னு ஆயிரம் பிரச்சனை இருக்கு இதுல இன்னும் கொஞ்ச நாள்ல விவசாயம் பண்ண நிலமும் இல்லாம போயிரும் போல.இந்த பிரச்சனையை உடனடியா எதாவது முயற்சி எடுத்து தடுத்து நிறுத்தனும். இல்லைன்னா வடிவேலு ஒரு படத்துல, ஐயா, என் கிணத்த காணோம்ன்னு கம்ப்ளேய்ண்ட் கொடுக்குற மாதிரி ஒரு நாள் நிஜமாவே இந்த நிலமை வரலாம்.



(எனக்கு தோன்றிய தடுப்பு வழி - விளை நிலங்களை விற்க நேரிடும் போது அந்த நிலத்தை அரசே கையகப்படுத்தி அந்த நிலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் உதவியுடன் அரசே விவசாயம் செய்யலாம். அல்லது வருமையின் காரணமாக விற்க நேரிடும் போது அந்த நிலத்தில் விவசாயத்திற்கான செலவை அரசு ஏற்றுக்கொண்டு அந்த நிலத்தின் உரிமயாளர் ஒரு விவசாயியாக  இருந்தால் அவரையே விவசாயம் செய்ய சொல்லலாம். விளைச்சளில் அவருக்கும் குறிப்பிட்ட பங்கு அளிக்கலாம். இது எனக்கு தோன்றிய வழிகளே.எதில் ஏதும் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத விசயம் இருந்தால் அல்லது மாற்று கருத்து இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்.)      
         


Wednesday 3 October 2012

தாண்டவம்- விக்ரமின் திருட்டுப்பய சகவாசம்




எந்த படத்துக்கு விமர்சனம் எழுதனும்னாலும் அந்த படத்த பாத்துட்டு தான் எழுத முடியும். ஆனா தாண்டவம் படத்துக்கு விமர்சனம் எழுதனும்னா மட்டும் நீங்க இதுவரைக்கும் தமிழ் சினிமால வழக்கமான பழிவாங்குற கதை படங்கள பாத்திருந்தா போதும். கொஞ்சம் கூட பட்டி டின்கரிங் வேலை பாக்காம அப்படியே அடிச்சி கலக்கி விட்ருக்காரு இயக்குனர் விஜய்..!! படம் ஆரம்பிக்கிற மொத சீன்ல இருந்து கடைசி சீன் வரைக்கும் சலைக்காம (மத்த படத்த) பாத்து பாத்து எடுத்திருக்காரு. படம் ரிலீஸ்க்கு முன்னாடி விக்ரம் ஒரு பேட்டி கொடுத்தாரு,"விஜய் இந்த படத்துக்காக 200% உழைப்பை கொடுத்திருக்காரு"னு, அதுக்கு அர்த்தம் படம் பாக்கும் போது தான் தெரியுது. ஆமா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம எத்தன படத்துல முடியுமோ அத்தன படத்துல இருந்து சுட்டா.. கடின உழைப்புதான்.

வழக்கம் போல ஹீரோ போலிஸ், அதே ஆபிஸ்ல அதே டேபிள்ல உக்காந்திருக்கிற ஒரு போலிஸ் ப்ரெண்டு, இவன் உயிர அவன் காபாத்த, அவன் உயிர இவன் காப்பாத்தனு ஆரம்பிச்சு அப்படியே கிராமத்துக்கு புடிக்காத கல்யாணத்துக்கு போயி, பொண்ண பாத்தவுடன சைலண்ட்டா தாலிய கட்டி,அங்கிருந்து டில்லிக்கு போயி அங்க ஒரு மொக்கைய போட்டு, சொய்ங்ங்னு லண்டன் போய் லாண்ட் ஆகுது கதை. சரி அங்கயாச்சும் எதாவது புதுசா இருக்கானு பாத்தா அங்கேயும் அதே பழைய சோறு தான். சுருக்கமா சொல்லப்போனா அர்ஜுன் படத்துல ஆரம்பிச்சு நேரா மௌன ராகம் பக்கம் போயிட்டு அப்படியே ஒரு U-turn போட்டு 'கஜினி'ல வந்து நின்னாரு பாருங்க.. ச்ச.. வாய்ப்பே இல்ல. அப்படியொரு உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும் தெரிந்தது.


படத்துல விக்ரம்ம பாத்தா பரிதாபமா இருக்கு. எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டரு. பாவம் அவர சொல்லி என்ன செய்ய. சேர்க்கை சரியில்ல. ஜக்பதி பாபு, இந்த படத்துக்கு நான் போனதுக்கு முக்கிய காரணத்துல இவரும் ஒருத்தர். ஆனா கடைசில அவரையும் மொக்கையா ஆக்கிட்டாய்ங்க. so sad. விக்ரம் காப்பாத்துறதுக்குனே அவரு மாட்டிக்கிறதும், பழைய மொக்க டயலாக் பேசவும்தான் அவர படத்துல நடிக்க வச்சிருக்கய்ங்க போல. படத்துல ஒரே ஆறுதல் மூனு ஹீரோயின். முதல் நாப்பது நிமிஷம் எமி ஜாக்சன், அடுத்த நாப்பது நிமிஷம் அனுஷ்கா அப்புறம் ஒரு இருபது நிமிஷம் லக்ஷ்மி ராய், மறுபடியும் ஒரு இருபது நிமிஷம் எமி. எனக்கென்னமோ தியேட்டர்ல படம் முடியிற வரைக்கும் நிரைய பேரு உக்காந்து இருந்ததுக்கு இதுதான் முக்கிய காரணம் போல. (படத்துல பாக்குற மாதிரி இருந்ததும் அது மட்டும் தான்). எல்லத்துக்கும் மேல கல்யாணம் பண்ணிக்க போறவங்கள பத்தி ஒன்னுமே தெரியாம இருப்பாங்களாம்.இதவிட உச்சக்கட்டம் டெல்லில கண் டாக்டர் அனுஷ்கா,ஆனா விக்ரம் ஆபிஸ் போற விதத்த பாத்தும் எஸ்.ஐ னு நெனைக்குறாங்களாம். ஏண்டா டில்லி எஸ்.ஐ னா மட்டும் கோட்,டை கட்டிட்டு டொயோட்டோ பார்ச்சுனர் கார்ல போவாங்களா?? இதுல "லஞ்சம் வாங்குவாரு போல"னு லாஜிக் டயலாக் வேற கேடு.

பாட்டு அதுக்கு மேல, தெய்வத்திருமகள் படத்துல பட்டைய கிளப்புன ஜி.வி.பிரகாஷ் இதுல செம அருவை. பேக்கிரவுண்டுல திடீர்னு தலைவர் கவுண்டர் அடி வாங்குன மாதிரி 'கொய்ங்ங்ங்ங்னு' ஒரு சத்தம், கேட்டா பாம் வெடிச்ச எபெக்ட் தர்றாய்ங்களாம்.காது சவ்வு அந்துருச்சு.


விக்ரம் அடிக்கடி புறா மாதிரி வாய்ல டொக்..டொக்னு சவுண்டு விட்டுகிட்டே கழுத்த சாய்ச்சு  பாக்குறாரு..நல்ல வேலை அதுக்கு மட்டும் Daniel Kish வச்சு ஒரு விளக்கம் தர்றது நல்லா இருந்துச்சு.அதுலயும் நாசர் முந்திகிட்டு உள்ள புகுந்து 'இவிகளுக்கு கண்ணு தெரியாது'னு கூகுள்ல பாத்து கண்டுபுடிச்சி சொல்றாரு. நாசர் 'வீரக்கத்தி'யா வந்து கடைசில அவரும் மொன்ன கத்தியா ஆயிட்டாரு. அடுத்து சந்தானம், பாவம் அவரும் எவ்ளோ நேரம் தான் தனியா போராடுவாரு. ஓப்பனிங் நல்லா இருந்துச்சு ஆனா பினிசிங் சரியில்லயேப்பா..!!   


படத்துல நல்லா இருந்தது விக்ரம் கண்ணுத் தெரியாம போடுற சண்டையும், ரெண்டு காமெடி மட்டும்தான்.அதுகூட இப்போ என்னானு மறந்து போச்சு. படம் மொக்கையா இருக்குறது சகஜம் தான் ஏன் சூப்பர் ஸ்டார் கூட 'பாபா' மொக்கைய போட்டாரு.ஆனா அது புது மொக்க.இது

எல்லா படத்துலையும் இருந்து உருவி எடுத்து போட்ட மொக்க. இந்த     படத்த கூட பாத்துரலாம் போல ஆனா இவைங்க எல்லாரும் சேர்ந்து 'டிவி'ல கொடுக்குற பேட்டி இருக்கே..அததான் தாங்கிக்க முடியல..கொய்யால என்னமோ சொந்தமா யோசிச்சு படம் எடுத்த மாதிரி அவ்ளோ பீலா விடுறாய்ங்க. மனசாட்சியே இல்லையாடா உங்களுக்கு..    
   
சுருக்கமா சொல்லனும்னா பழைய துணியெல்லாம் சேர்த்து தச்ச மிதியடி தான் இந்த படம்.!! தாண்டவம். தியேட்டர்க்குள் நுழையாமல் அப்படியே தாண்டவும்.      
         தில் இருந்தா போய் பாருங்க. 

Tuesday 18 September 2012

உலகப்போராளி சைமன் ஆவேசப் பேட்டி!



நம் தொலைக்காட்சிப் பேட்டிக்கு தன் தம்பி படையுடன் வந்து இறங்கினார் சைமான்.  யாருமே இல்லாத இடத்தில் தங்களை தாங்களே தள்ளிக்கொண்டு.. ஹேய்.தள்ளு.தள்ளு.அண்ணனுக்கு வழிவிடு.. ஹேய் தள்ளு தள்ளு என்று அலப்பறையுடன் வந்து பேட்டி எடுக்கப்படும் அரங்கில் வந்து அமர்ந்தனர்.

தொகுப்பாளர்: சார். எதோ படை வருவாங்கனு சொன்னிங்க, மூணே முக்கால் பேருதான் வந்திருக்காங்க, மீதி எல்லாரும் எப்பொ சார் வருவாங்க? நேரம் ஆச்சு, நிகழ்ச்சிய ஆரம்பிக்கனும்.

சைமான் : பிரிஞ்சு பிரிஞ்சு வர்றதுக்கு என் தம்பிகளை சிங்களப் படைனு நெனச்சிங்களா?? தமில் உணர்வும், வீரமும், மானமும், வேகமும் கொட்டிக்கிடக்கும் இளைஞர் படை. மொத்தமா தான் வந்திருக்காங்க. ஃபேக் ப்ரொஃபைலையெல்லாம் (fake profile) வீட்டுலயே வச்சுட்டு வந்திருக்குறதுனால கூட்டம் குறைவா இருக்கு. நீங்க
ஆரம்பிங்க.

(தொகுப்பாளர் கடுப்புடன் நிகழ்ச்சியை தொடங்குகிறார்.)

நேயர்களே.. இன்று நம் குறுக்குக்கு குறுக்கு நிகழ்ச்சிக்கு ஒரு 'முக்கிய' பிரமுகர் வந்திருக்கிறார். அவர் ஹாலிவுட் சூப்பர்மான், ஸ்பைடர்மான், ஹீமான், ஏன் நம்ம ஊரு அனுமான் வரிசையில் உலக தமிழர்களை காக்க போராடும் சைமான் அவர்கள். திரளான(!!??) தன் தம்பி படையுடன் வந்திருக்கிறார். வாருங்கள் சைமான் அவர்களே. வணக்கம். முதல் கேள்வி என்னன்னா... (சைமான் இடைமறிக்கிறார்)

சைமன்: ஏய் இருப்பா இருப்பா.. டேய் அந்த வாட்டர் பாட்டிலை எடுங்கடா... (பாட்டிலை திறந்து தலையில் ஊற்றிக்கொண்டு தொடர்கிறார்) உலகெங்கும் உள்ள தமிழ்நாட்டில் வாழும் அனைத்து மொழிபேசும் ஈழத்தமிழர்களுக்கும் வணக்கம்.
இப்ப சொல்லுப்பா..

தொகுப்பாளர்: (??!!).. சார் முதலில் உங்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காரணம், கொள்கை அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க.

சைமான்: பெரியார் திக, விடுதலை சிறுத்தைகள் மேடைகளிலே பேசிப் பேசிப் போர் அடித்த போது என் தமிழ்த்தம்பி ஒருவன் " 'ஓசி' மேடையிலேயே 'ஓபி' அடிக்கிறோமே, நமக்கென்று ஒரு மேடை வேண்டாமா அண்ணா?" என்று கண்ணீருடன் கேட்டான். அவனுக்கு நான் என்ன பதில் சொல்வது? அந்த தம்பிக்காக நான் அமைத்த மேடைதான் நாம் டம்ளர் கட்சி. கொள்கை என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. கொள்கை இல்லாமலேயே கடைசி வரை இருக்க வேண்டும், வேலைவெட்டி இல்லாமலே நாம் வாழ்ந்து காட்ட வேண்டும். அதான் எங்கள் கொள்கையே.

தொகுப்பாளர்: தமிழ்நாட்டில் உள்ள பிரதான இரண்டு பெரிய கட்சிகளை எதிர்த்து உங்களால் வெற்றி பெற முடியும் என எப்படி நம்புகிறீர்கள்?

சைமான்: ஏன் முடியாது? ஏன் சார் முடியாது? 1928லே ஜவஹர்லால் நேரு தலைமையில் ஆப்ரிக்காவிலே ஆட்சியைப் பிடித்ததே காங்கிரஸ், அது நடக்கும்போது இது ஏன் சார் நடக்காது? இதுவரை வேண்டுமானால் நீங்கள் சொன்ன கட்சிகள் ஆண்டிருக்கலாம். ஆனால் வரும் 2029இல் பிப்ரவ்ரி 30ஆம் நாள் டமிலகத்தில் எங்கள் ஆட்சிதான். அது மட்டுமல்ல இலங்கை, ஐரோப்பா, திருச்சி, அண்ணாநகர் என உலகெங்கும் எங்கள் ஆட்சிதான்.
(சைமனின் தம்பிகள் ஆராவாரம் செய்கிறார்கள், " முரட்டு முதல்வர் சைமன் வாழ்க.!! அண்ணனின் தம்பி சைமன் வாழ்க..!! தம்பிகளின் அண்ணன் சைமன் வாழ்க..! ஒன்று விட்ட சித்தப்பாவின் மைத்துனர் சைமன் வாழ்க..!!")

(சைமான் பெருமிதத்தோடு கையசைத்து அமைதிபடுத்துகிறார்)

தொகுப்பாளர்: மூணே முக்கால் தம்பிகளை வைத்துக்கொண்டு எப்படி சார் ஆட்சி அமைப்பீர்கள்?

சைமான்: என்னுடன் தோள் கொடுத்து நிற்பவன் எல்லாம் உண்மை உணர்வாளர்கள். என்னுடைய படை பள்ளியில் உருவாகிக்கொண்டிருக்கிறது. எங்கள் கட்சி பொதுப்பணித்துறை அமைச்சர் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப்பள்ளியில் 5ம் வகுப்பு C sectionல் படிக்கிறார். அதே போல எங்கள் கட்சி மாநில செயலாளர் மதுரை அரசு மருத்துவமனையில் இப்போதுதான் பிறந்திருக்கிறார். இதே போல இன்னும் எத்தனையோ தம்பி படைகள் டமிலகமெங்கும் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளிலும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

தொகுப்பாளர்: தமிழ்நாட்டில் தமிழர்களின் இன்றைய நிலையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சைமான்: ( முகத்தை சுருக்கி..மேலும் கீழும் பார்த்து, பெருமூச்சு விடுகிறார்..)

தொகுப்பாளர்: சொல்லுங்க சார். காமிரா ஆன்ல இருக்கு. நேயர்கள் எல்லாம் பார்த்துட்டு இருக்காங்க.

சைமான்: அது வந்து.. ப..ப..வ..வ.. அது வந்து.... ஹ்ம்ம்ஹ்ம்ம்... காமிராவ ஆஃப் பண்ணுப்பா... (பாத்ரூம் வராத குழந்தையை போல முகத்தை வைத்துக்கொள்கிறார்)

தொகுப்பாளர்: (தம்பி ஒருவரிடம் மெதுவாக) ஏன் அண்ணே முக்குறாரு? பாத்ரூம் வெளிய தான் இருக்கு வேனும்னா அவர போய்ட்டு வர சொல்லுங்க.

தம்பி : யோவ்.. எங்க அண்ணனை என்ன நினைச்ச..? அண்ணனுக்கு இந்த கேள்வினாலே அலர்ஜி. தமிழ்நாடு விசயமெல்லாம் அவருக்கு 'அவுட் ஆஃப் சிலபஸ்'னு தெரியாதாய்யா உனக்கு?

சைமான் (திடீரென தன்னையே மறந்து): என்னத்த சொல்ல இங்கே நடந்துகொண்டிருப்பது ஆட்சியே இல்லை. அப்படிப்பட்ட மிக மோச.... (தம்பி குறுக்கிட்டு, "அண்ணே வார்த்தை தடிக்குது.. கவனம் கவனம்.)

சீமான்: (எச்சியை முழுங்கிக்கொண்டு).. அதாவது இது தமிழ்நாட்டில் நடக்க வேண்டிய ஆட்சியே இல்லை. உலக மக்களை காக்கும் திறன் கொண்ட அருமையான ஆட்சி. ஈழத்தாய் அருளால், பாசத்தால், அரவணைப்பால், உலக தமிழர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்.

//கரண்ட் கட் ஆகிறது//

சைமன்: பார்த்தீர்களா ஒரவுஹலே.. நம் பேட்டியை வெளிய தெரிய விடாமல் செய்வதற்காக திமுக செய்யும் சதி இது. இது அடக்குமுறை இல்லையா, கொடுங்கோல் தனம் இல்லையா?? அடாவடித்தனம் இல்லையா??

தொகுப்பாளர்: சார்..என்ன சொல்றிங்க? இப்போ ஆட்சியில் இருப்பது அதிமுக. மின்தடைக்கு காரணமும் அவர்கள் தான் நீங்கள் ஏன் திமுகவை குறை சொல்றிங்க?

சைமன்: ஓ அப்படியா? (இதெல்லாம் சொல்றதில்லையாப்பா? என்று தம்பியைப் பார்த்து திட்டுகிறார்.)

தொகுப்பாளர்: ஓட்டுப்போடலேனா வெட்டுவேன் குத்துவேன்னு சொன்னீங்களாமே?

சைமன்: ஆமாம். சொன்னேன். எனக்கு உரிமையில்லையா? இதெல்லாம் என்ன பெருமையா.. கடமை...

தொகுப்பாளர்: (மனதிற்குள், "சம்பந்தம் இல்லாம பேசுறானே!!") சார். ஏன் சார் எந்த தேர்தலிலும் நிக்க மாட்டேங்குறீங்க?

சைமன்: என்ன தம்பி நீ? புத்திசாலினு நினைச்சா முட்டாளா இருக்கியே.. என் கட்சியினர் எல்லாம் ஸ்கூல்ல படிக்கிறாங்க, ஆஸ்பத்திரில இப்பதான் பிறந்திருக்காங்க அவங்களுக்கு எப்படி ஓட்டு இருக்கும்? என்னப்பா நீ கிறுக்கனா இருக்கியே!! ஹாஹா

தொகுப்பாளர்: ("உன்னலாம் பேட்டி எடுக்குறேன் பாரு நான் லூசுதான் என மனதிற்குள் நினைத்துக் கொள்கிறார்.) சரி அத விடுங்க சார். ராஜாஜியும், பெரியாரும் அரசியல் எதிரிகள். ஆனா அவங்களுக்குள்ள நாகரீகம் இருந்தது. நீங்களோ நாகரீகம்னா எங்க விக்கும்னு கேக்குறவரு. அதைப் பத்தி என்ன நினைக்குறீங்க?  

சைமன்: இப்படிதான் எம்.ஜி.ஆர் பதவியேற்பு விழாவுக்கு மகாத்மா காந்தி சக்கர நாற்காலியில் வந்திருந்தார். அப்போது எம்.ஜி.ஆர் எழுந்து நின்று வரவேற்றார். அதுதான் பண்பாடு, நாகரீகம். ராஜாஜி யார் என்று எனக்கு தெரியாது. திமுக காரரா? அவரால் தான் என் இனம் அழிந்தது. என் வீட்டில் மூட்டைப்பூச்சி வந்தது.. அவரால் தான் நேற்று வெயில் அடித்தது.. கறுவறுப்போம்.

தொகுப்பாளர்: ஈழம் அமைப்பது பற்றி.

சைமன்: அது ரொம்ப ஈசிப்பா. ஐநால என்னை அரைமணி நேரம் பேசவிட்டா ஈழம் வாங்கிருவேன். சூரியன் எப்.எம்ல பத்து நிமிசம் பேசவிட்டா கடலை உருண்டை வாங்கிருவேன்.

தொகுப்பாளர்: பிரபாகரனைப் பற்றி?

சைமன்: தேசியத்தலைவர் அவர்கள் என்னைப் பார்த்ததும், "நீதான் தமிழ்நாட்டின் வருங்காலம். என் தம்பி நீதான்" என்றார். பின் ஐந்து நிமிட சந்திப்பில் பல மணி நேரம் உரையாடினார்.
தொகு: நடிகர் விஜய் உங்கள் படத்தில் நடிக்கமாட்டேன் என சொல்லிவிட்டாரே?

சைமன்: ஆமாம். பகலவன் படத்தில் நடிக்கிறேன் என சொல்லிவிட்டு பின் எஸ்கேப் ஆகிவிட்டார். இப்போது ஜீவாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். தேசியத்தலைவருக்கு பிடித்த நடிகர் ஜீவாதான். ஆமாம் ஜீவா தான். இதான் ஃபைனல். ஜீவா தான்.
(இடையில் ஒரு தம்பி மறித்து "அண்ணா ஜீவாவும் முடியாதுனு சொல்லிட்டாரு. டி.ஆர் தான் நடிக்கிறேனு சொல்லிருக்காரு" என்கிறார்) பிடித்த நடிகர் ஜீவானுதான் தேசிய தலைவர் முதல்ல சொன்னாரு. அப்புறமா டி.ஆர்னு மாத்திட்டாரு.

தொகு: திராவிடம் மேல உங்களுக்கு என்ன கடுப்பு?

சைமன்: திராவிடம் என்ன தம்பி கிழிச்சுச்சு? பிற்படுத்தப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன்லாம் இப்ப படிக்கிறான். எல்லாரும் சமமா உக்காராங்க, பேசுறாங்க. ஆனா எங்க வீட்ல குழாயில தண்ணி இன்னும் 'லீக்' ஆகுதே. திராவிடம் என்ன தம்பி கிழிச்சுச்சு?

தொகு: பெரியார் பேரன்னு சொன்னீங்க. அம்பேத்கர் மாணவன்னு சொன்னீங்க. இப்ப  பெரியார திட்றீங்களே?

சைமன்: அது போன வாரம். நான் சொல்றது இந்த வாரம்.

தொகு: சைமன்ங்குறது உங்க பேரு. செந்தமிழனுங்குறது நீங்க படிச்சு வாங்குன பட்டமா?

சைமன்: நான் செந்தமிழன் ஆகனும்னு என் தம்பிங்க ஆசைப்பட்டாங்க. அதான் எங்க அப்பா பேரை செந்தமிழன்னு மாத்தி செந்தமிழன் சைமன் ஆயிட்டேன். நாளைக்கே நான் டாக்டர் ஆகனும்னு என் தம்பிங்க ஆசைப்பட்டா எங்க அப்பா பேரை டாக்டர்னு மாத்திருவேன்.

தொகு: சார் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி சார். அப்புறம்..

(ஒரு தம்பி குறுக்கிட்டு சைமானிடம் எதோ பேசுகிறார். "அண்ணா மணி எட்டே முக்கால். செல்லமே சீரியல் போட்ருவாங்க" என்கிறார். சைமன், "அய்யயோ எட்டே முக்கால் ஆச்சா" என்றபடியே ஆடிடோரியத்தை விட்டு ஓடுகிறார்.)

பின்னாலேயே அவர் தம்பிகள்,
"கறுவறுப்போம் ஹொய்யா ஹொய்..
வந்தேறி ஹய்யா ஹய்...
வேரறுப்போம் ஹொய்யா ஹொய்..
ஜும்பாலே ஜும்பாலே
ஜும்பக்கு ஜும்பா...!
கறுவறுப்போம் ஹொய்யா ஹொய்..
வந்தேறி ஹய்யா ஹய்...
வேரறுப்போம் ஹொய்யா ஹொய்.. ."

என்று அவர்களின் நாம் டம்ளர் கட்சிப்பாடலை பாடியபடியே புரட்சி செய்ய ஓடுகிறார்கள்....!


Thursday 13 September 2012

முகநூல் கஜினிகள்



  இந்தியாவிலயே, ஏன் இந்த வர்ல்டுலயே வாய வச்சே போராடுற கோஷ்டினா அது நம்ம நட்ட நடு சென்டர் கோஷ்டி தான். எந்த பக்கம் இருந்து அவிய்ங்களை சாணியால அடிச்சாலும் திமுககாரன் நிக்கிற பக்கம் மட்டுமே தங்கள் இலக்கா வச்சு முன்னேறுறதுல அவிய்ங்களுக்கு நிகர் அவய்ங்கதான்!

இவனுகள பத்தி இன்னும் சிறப்பா சொல்லனும்னா
"கஜினி"னு சொல்லலாம். 17 முறை விடா முயற்சியுடன் படையெடுத்த கஜினி முஹம்மது இல்ல, இது நம்ம சூர்யா அரைமண்டையனா நடிச்ச கஜினி மாதிரி. அதுல அவருக்கு short term memory loss இருக்கும் ஆனா இந்த நடுசென்டர்காரய்ங்களுக்கு life time memory loss இருக்கும். நடுநிலைனா என்னனு கேட்டீங்கனா அது ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்கும்பாய்ங்க.
 

முதல்ல நம்ம தமிழ்நாட்டு லெவல்ல பார்ப்போம். இங்க 2011 மே மாசத்துல ஆட்சி மாறுனதே இவய்ங்களுக்கு தெரியல. அந்த அளவிற்கு நடுநிலமை நோய் முத்திப்போச்சு! கஜினில வில்லன் சூர்யா மண்டைலயே ஒரு போடு போட்ட மாதிரி இவய்ங்க தலைல அந்தம்மா கரண்டு பில்லு, பஸ் டிக்கெட்டு, பால் விலைனு ஒரே போடா போட்டதுல, மொத்தமும் மறந்து போய் இப்படி ஆயிட்டாய்ங்க போல பாவம்!

கஜினி படத்துல மண்டை பொளந்து மெண்டலாகுறதுக்கு முன்னாடி கடைசியா பாத்த அசினை மட்டும் சூர்யாக்கு நியாபகம் இருக்க மாதிரி இவய்ங்களுக்கு கடைசியா பாத்த திமுக மட்டும் நியாபகம் இருக்கு. எந்த போராட்டமானாலும் சரி, விலைவாசி ஏத்துனாலும் சரி, ஒருநாளைக்கு 28மணி நேரம் கரண்டை புடுங்குனாலும் சரி, திங்கிற சோத்துல விசத்த கலந்தாலும் சரி, போலிச வுட்டு அள்ளைலயே மிதிச்சாலும் சரி அவிய்ங்க குறிக்கோள் திமுகவ திட்டுறது தான். பொது விஷயத்துல கலைஞர் எதாவது அறிக்கை வுட்டா, நக்கல் அடிக்கிறது, அறிக்கை கொடுக்கலேனா ஏன் கொடுக்கலேங்குறது!

இன்னைக்கு ஒரு ஜென்டில்மேன் கலைஞர் வீல் சேர்ல போறத கிண்டல் பண்ணிருக்காரு. ஏண்டா உங்களுக்கெல்லாம் வயசானா வீல்சேர்ல போகாம 'க்யூரியாசிட்டி' விண்கலத்துலயாடா போவீங்க?

போன ஆட்சில சொல்லிட்டு ரெண்டு மணி நேரம் கரண்ட்ட கட் பண்ணதுக்கு வாயிலயும், வயித்துலயும் அடிச்சுக்கிட்டு "அய்யோ போச்சே, போச்சே"னு அழுதாய்ங்க. இப்ப ஒருநாளைக்கே ரெண்டு மணி நேரம்தான் கரண்ட் இருக்கு. ஆனா ஒருபய வாய தொறக்கலையே! எல்லாரும் ஈடன் கார்டன்ல வாழுற ஆதாம் ஏவாள் மாதிரி சந்தோசமா இருக்காய்ங்க போல!

இவய்ங்க தான் இப்படினா புதிய தலைமுறை டிவி அதுக்கு மேல. நடுநிலைமைய ஓல்சேல் குத்தகைக்கு எடுத்தவய்ங்க இவய்ங்கதான். அம்மா செருப்பால அடிச்சா கூட அம்மா செருப்பால் ஆசிர்வதித்தார்னு செய்தி வாசிக்கிறாய்ங்க. சேனல்4 போட்டத மறு ஒளிபரப்பு பண்ணி போராளிகளோட ஃபேவரிட் சேனல் ஆனாய்ங்க. இப்ப பாத்தா இவய்ங்களே அங்க காலேஜ தொறந்து வச்சிருக்காய்ங்க. இதப்பத்தி தமிழ்தேசியவாதி எவனாச்சும் பேசுறானானு பாத்தா.. ஹ்ம்ம் ஹ்ம்ம்... இதெல்லாம் ஒரு பொழப்பு!

கூடங்குள போராளித்தலைவர் என்னனா மன்மோகன் சிங்தான் தமிழக முதல்வர் மாதிரி மத்திய அரசை மட்டும் குறை சொல்றாரு! ஆகமொத்தம் உதயகுமாருல இருந்து உதவாத குமாரு வரைக்கும் இப்படிதான் இருக்காங்க!

ஒரு படத்தில் வடிவேலு காமெடில, சரக்குனு நினைச்சு விசத்த குடிச்சிருவாரு வடிவேலு. குடிச்சுட்டு, "என்னடா தொண்டய கவ்வுது"ம்பாரு..,
மற்றொருவர்: "விஷம் குடிச்சா அப்படிதான்னே இருக்கும்"னு சொல்லுவாரு.

அது மாதிரி இப்ப தமிழ்நட்டு மக்கள் ஓவரா ஆசப்பட்டு அதிமுகவ தேர்ந்தெடுத்துட்டு "தொண்ட கவ்வுதேடா"ங்குறாய்ங்க!
இப்ப நம்ம சொல்லுவோம், "மாற்றம் வேனும்னு கேட்டா இப்படிதாண்ணே இருக்கும்..!!"   


                             

Wednesday 8 August 2012

இணையத்தில் "டமில் டேஸிய போராளி" ஆவது எப்படி ??

டமில் டேஸிய போராளி ஆகுறது ரொம்ப ஈசி..!! கீழ இருக்குற சிம்பிள் ஸ்டெப்சை ஃபாலோ பண்ணுங்க..






நீங்கள் சோத்துக்கே வக்கில்லாமல் வீட்டில் மூதேவி என திட்டு வாங்கும் இளைஞனாய் இருந்தால் முதல் தலையாய கடமையாய் பேஸ்புக்கில் ஒரு கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள் (உங்களுக்கு ஏற்கனவே ஒரு கணக்கு இருந்தாலும் பரவாயில்லை..).

வீட்டில் எவ்வளவு நல்ல பெயர் உங்களுக்கு வைத்திருந்தாலும் அதை ப்ரொபைல் பெயராக வைக்க கூடாது. உங்கள் ப்ரொபைல் பெயரை பார்க்கும் போதே அது போலி ப்ரொபைல் என்று.. சாரி.. போராளி ப்ரொபைல் என்று தெரியவேண்டும். (எ.கா) வீரத்தமிழன், சிங்கத்தமிழன், கரடிதமிழன், அழகியடமில் மகன். அல்லது உங்கள் பெயரோடு டைகர், புலி ஆகிய அடைமொழிகளை சேர்த்துக்கொள்லாம். சுரேஷ் டமில் புலி, ரமேஷ் தமிழ் டைகர், என இருந்தால் நல்ல ரீச் கிடைக்கும். கொட்டை எடுத்த புளியாக நீங்கள் இருந்தாலும் புலி என போட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் புலி எதுவும் முகநூலில் இல்லை!

அடுத்த கட்டமாக ப்ரொபைல் படம். மறந்தும் உங்கள் படத்தை போட்டுவிடாதீர்கள். இருக்கவே இருக்கிறார்கள் பிரபாகரன், சேகுவேரா! அவர்கள் படத்தை போட்டுக்கொள்ளுங்கள். குறிப்பாக சொல்லவேண்டுமானால் நரம்பு புடைக்க 'ஒறவுஹலே' என கத்தி கூச்சல் போடுபவர் படத்தை வைக்கலாம். (கெட்டவார்த்தையில் திட்டு கிடைத்தால் நிர்வாகம் பொறுப்பல்ல)

கவர் போட்டோக்கு வைக்கும் படமும் மிக முக்கியம். இது ஈழம் சம்பந்தமான படம் எதாவதாக இருக்க வேண்டும். அல்லது அடுத்த கட்டத்துக்கு போக வேண்டுமானால் தலைவர் பிரபாகரன் படத்தையோ, விடுதலை புலிகள் 'லோகோ'வையோ வைக்கலாம். இல்லை எதேனும் சின்ன குழந்தை சோகமாக இருக்கும்படியாக ஒரு படத்தை வைக்கலாம்.

உங்கள் இருப்பிடத்தை இந்தியாவிற்குள் இருப்பதாக காட்டிகொள்ளாதீர்கள். காரைக்குடியில் இருந்தாலும் கனடா என்று போட்டுக் கொள்ளவேண்டும். அப்போதுதான் நீங்கள் போடும் 'ஸ்டேடஸ்' வெகுதூரம் ரீச் ஆகும். உங்களுக்கு தனி அடையாளம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் "அடி வாங்கனுமோ?" என்ற பயமில்லாமல் கண்டதையும் பேசலாம்.

அடுத்ததாக, பேஸ்புக்கில் ஈழம், தமிழ் தேசியம் சம்பந்தமாக உள்ள க்ரூப்,பேஜ் ஒன்னு விடாமல் அத்தனையிலும் சேர்ந்துவிடவும். அதில் பதிவு போடுகிறீர்களோ இல்லையோ. கண்டிப்பாக 'லைக்' மற்றும் 'ஆம்.சரியாக சொன்னீர்கள் தோழர்' போன்று கமெண்ட் போட்டுவிடுங்கள். அல்லது பதிவில் யாரை திட்டிகொண்டு இருக்கிறார்களோ, அவர்களோடு சேர்ந்து நீங்களும் திட்டியோ அல்லது அந்த கமெண்டுக்கு லைக் போட்டு உங்கள் ஆதரவை பதிவு செய்யுங்கள். நீங்கள் கவனிக்கப்படுவீர்கள்.

இதில் ஒரு பெரிய ப்ளஸ் என்னவென்றால் உங்களுக்கு எந்த ஒரு வரலாறும் தெரிந்திருக்க தேவையில்லை. உங்களுக்கு முன் அந்த பதிவில் கமெண்ட் போட்டவர் திட்டி இருந்தால் நீங்களும் திட்டுங்கள்.முன்னே பாராட்டி பேசியிருந்தால் நீங்களும் கோஷம் போடுங்கள்.  மேலும் எம்.ஜி.ஆர் காலத்தில் சிம்பு சூப்பர்ஸ்டார், சிம்பு காலத்தில் தியாகராஜ பாகவதர் சூப்பர் ஸ்டார் என எதுவேண்டுமானாலும் உளறலாம். யாருக்கும் தெரியாது. ஏனென்றால் நீங்கள் டமில்டேசிய போராளி ஆயிற்றே!

 முக்கியமாக இப்போது ஆட்சியில் இருப்பவர்களை பற்றி பேச கூடாது. அது உங்களுக்கு பெரும் ஆபத்தில் முடியும். அது உங்களுக்கே தெரியும்.ஆட்சியில் இல்லாத திராவிட கட்சிகளை உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் கேவலமாக பேச வேண்டும். அவர்களால் தமிழ்நாட்டில் நாம் என்ன பயன் அடைந்திருந்தாலும் அதை பொருட்படுத்தாது அவர்கள் தலைவர் முதல் தொண்டன் வரை ஒருவரையும் விட்டு வைக்க கூடாது. முடிந்தால் நமீதாவுடன் இருப்பது போன்று கீழ்த்தரமாக 'போட்டோ ஷாப்பில்' மார்ப்பிங் செய்து அவர்கள் படத்தை போஸ்ட் செய்யலாம். இதுதான் இணைய கொரில்லா முறை!

யார் நமக்கு எதிர் கருத்து சொன்னாலும் அவனை வந்தேறி, தெலுங்கு வந்தேறி, மனவாடு, கருவாடு, சேச்சி, நைனா என கூச்சபடாமல் திட்டலாம்.  உங்கள் வீட்டில் தண்ணி வரவில்லையென்றாலும், கொடநாட்டில் ஜெயாவுக்கு கொசு கடித்தாலும், எதிர்த்தவீட்டு கோவாலுக்கு எயிட்ஸ் வந்து செத்தாலும் திராவிடம்தான் காரணம் என செம்ம திட்டு திட்ட வேண்டும். கூடவே நீங்கள் மேப்பில் கூட பார்த்திருக்காத குஜராத்தை புகழ்ந்து தள்ளி உங்கள் மதவெறியையும் இதில் திணிக்கலாம். இவை எல்லாத்திற்கும் உங்களுக்கு சிறப்பு மதிப்பெண் கிடைக்கும்.

அதிமுக்கியமாக தப்பித்தவறி கூட தமிழ்நாட்டில் உள்ள பிரச்சனைகள் பற்றி பதிவோ அல்லது கமெண்டோ போட்டுவிடக் கூடாது. மின் கட்டணத்தை உயர்த்தினாலும் சரி, பால் விலையை ஏற்றினாலும் சரி, பேருந்து கட்டணத்தை உயர்த்தினாலும் சரி, நூலகத்தில் கூத்து நடத்த அனுமதித்தாலும் சரி, மக்கள் நலப்பணியாளர்கள் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டாலும் சரி, காலராவில் பேதி புடுங்கி எத்தனை பேர் மாண்டாலும் சரி.. ஹ்ம்ம் ஹ்ம்ம்ம் எதப்பற்றியும் அஞ்சாது, கண்டுகொள்ளாது நாம் நம் குறிகோளில் உறுதியாக இருக்க வேண்டும்.  

வாய் பேச்சு மட்டுமே பேச லாயக்கு ,போலி ப்ரொபைல்,முகரையை காட்ட வக்கில்லாதவர்கள், வரலாறு தெரியாத அரைகுறைகள், ஓட்டு இல்லாத பயலுக என உங்களைப் பற்றி எப்படிப்பட்ட  உண்மைகளை கூறினாலும் உங்கள் கவணத்தை சிதற விடாதீர்கள். உங்கள் எண்ணம் எப்போதுமே ஈழம்..ஈழம்..ஈழம் ஆகதான் இருக்க வேண்டும்.
எவனாவது எதிர்கருத்து ஸ்டேடஸ் போட்டால் அங்கேயே அவனுக்கு பதில் கொடுக்க கூடாது. அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து உங்கள் wallயில் போட்டு "இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லையா?" என ஒப்பாரி வைக்க வேண்டும். அப்போதுதான் "அநீதி கண்டால் கொதிப்பவர்" என நீங்கள் ஃபார்ம் ஆகலாம்.

இவ்வாறு பின்பற்றினால் நீங்கள் எவ்வளவு காலிப்பயலாக, களவாணிப்பயலாக, லுச்சாப் பயலாக இருந்தாலும் இணையத்தில் டமில் டேஸிய போராளி ஆகலாம்.







பின் குறிப்பு :- நீங்கள் தொடங்கும் பேக் ஐடி ஒரு பெண் பெயரில் இருந்தால் மிகவும் நன்று. கண்டிப்பாக ஜாஃப்னா யுனிவர்சிட்டி என்றும் போட வேண்டும். ரேட்டிங் எகிறும். அதிவிரைவில் உங்களுக்கு வீரத்தமிழச்சி, ஈழத்து இளவரசி போன்ற பட்டங்கள் உங்களை தேடி வரும்.!! லைக்குகள் ஆயிரக்கணக்கில் குவியும், அதற்கு கம்பனி காரண்டி!   

Sunday 5 August 2012

நண்பனை எதுவென்று சொல்ல?


தாய் அன்பும்,
தந்தை சொல்லும்,
சகோதர சொந்தமும்
ஒன்றாய் இருத்தல்
குடும்பமென்றார்கள்..
துவண்டபோது துணிவும்
தோல்விகளில் தோளும்
கொடுக்கும் பக்தி என்றார்கள்!
கோபத்தில் திட்டினாலும்
தந்தை என்போன் கனிவனென்றார்கள்;
நம்மைவிட நம்மை தெரிந்துவைத்திருப்பவள்
தாய் என்றார்கள்!
வெற்றிபெறும் நேரத்தில்
நம்மைவிட மகிழ்வோர்
இல்லத்தார் என்றார்கள்!

இவையனைத்தும் நண்பனிடம்
காணும் நான்
நண்பனை எதுவென்று சொல்ல?

அது இதுவெல்லாம் அவர் இவரென்றால்
அது இதுவென எல்லாமும்
நண்பனன்றோ!

நண்பனைத் தவிர
நல்லுறவு ஏதுமுண்டோ?

Sunday 22 July 2012

Batman : Dark Knight Rises: "சூப்பர் ஹீரோக்களின் ஹீரோ".!!





     
 சூப்பர் ஹீரோ படத்துக்கு ஆக்சன் மட்டுமே இல்லாமல் ஆழமும் புகுத்திய Christopher Nolanஇன் 'THE DARK KNIGHT RISES' அதன் முந்தைய பாகங்களுக்கு எந்த சேதமும் விளைவிக்காமல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறது! பொதுவாகவே பேட்மன் திரைப்படங்களில் கதை, ஆக்சனைவிட அதிகமான எதிர்பார்ப்பு பேட்மானின் வில்லனுக்கே இருக்கும். ஏனெனில் பேட்மேன் காமிக்சை எடுத்துக்கொண்டால் தோண்டத் தோண்ட வில்லன்கள் தான் வருவார்கள். இரண்டாம் பாகமான DARK KNIGHTயில் நிகழ்ந்த ஹார்வி டென்ட் மரணத்திற்கு பொறுப்பேற்று தலை மறைவாகி எட்டு வருடங்களுக்கு பிறகு களத்திற்கு திரும்பும் பேட்மேனுக்கு, 'ஜோக்கரு'க்கு நிகரான வில்லனாக 'பேன்'(Bane) வாய்த்திருக்கிறாரா என்றால் கண்டிப்பாக இல்லை. ஜோக்கரின் எல்லையில்லா வில்லத்தனம், திட்டமின்றி செயல்படுவது என கொள்கையில்லா வில்லனாக இதில் 'பேன்' இல்லை. சராசரி சூப்பர்ஹீரோ படங்களில் வரும் வில்லன் போன்று பழிவாங்கும் எண்ணம், அழிவெண்ணம், முன்கதை என சகல சம்பிரதாயங்களுடன் Bane இருப்பதால் இந்த படத்தில் வில்லன் சற்று பலவீனமாக தோன்றுகிறார். மற்றபடி பேட்மன் படங்களுக்கே உரிய வில்லன் அறிமுகம், வசனம், ஆக்சன் காட்சிகள் அமர்க்களம். குறிப்பாக வில்லன் அறிமுகமாகும் விமான காட்சி அட்டகாசம்! ஜோக்கர் தன் Pshycoத்தனத்தால் பேட்மேனை தாக்கியதைவிட இதில் பென் உடல்ரீதியாக அதிகமாக தாக்கியிருக்கிறார். குறிப்பாக பாதாள உலகில் பேட்மேனுக்கும் Baneக்கும் நடக்கும் சண்டையில் சூப்பர் ஹீரோ யார் என்பதே தெரியாத அளவுக்கு வலிமை மிக்க வில்லனாக காட்சியளிக்கும் பென், இறுதிக்காட்சியில் அவர் வரலாறு  தெரியும் போது வலு இழந்து 'மொக்கை'யாகிறார்!

கடந்த பேட்மேன் படங்களை விட இதில் ஆக்சன் அதிகம். பேட்மேன், கமிஷனர் கோர்டான், வில்லன் பென் இவர்களுக்கு நிகராக Anne hathway, 'கேட் வுமன்' கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். பேட்மேனுடன் இணைந்து வரும் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் அட்டகாசம். மேலும் கமிஷனர் கார்டனாக வரும் Gary Oldman மற்றும் Lucius Foxஆக வரும் Morgan Freeman வழக்கம்போல் தங்கள் Characterக்கு வலு சேர்த்திருகின்றனர். 

ஹார்வி டென்ட் கொலையினால் ஏற்பட்ட மக்களின் எதிர்ப்புக்கும், கொலைவழக்கில் தேடிவரும் போலிஸ் டிபார்ட்மென்ட்டுக்கும் இடையே கோத்தம் சிட்டியை பென்னிடம் இருந்து  காக்க  களத்திற்கு திரும்பும் பேட்மான் Introduction செம.!! எட்டு வருடங்களாக வெளியுலக தொடர்பில்லாமல் இருக்கும் ப்ரூஸ் வேய்ன் ,தோற்றம்,செயல் அனைத்திலும் சோர்ந்து தெரிகிறார். பின் பேட்மேனாக திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்து களம் இறங்கும் காட்சி அற்புதம். பென்னிடம் பாதாளத்தில் நடக்கும் சண்டையில் சரமாரியாக அடி வாங்கி, பின் gotham சிட்டியை காக்க வேண்டும் என்ற துடிப்பில் மீண்டு வரும்போதும், இறுதி கட்ட போரில் தனக்கே உரிய பாணியில் எதிரிகளை கையாள்வதிலும் Batman returns. இதுவரை வந்த பேட்மேன் படங்களை விட இதில் பேட்மேனுக்கு அதிகமான ஹீரோயிச சீன்கள் இருக்கிறது. 

படத்தில் அடுத்த முக்கியமான பங்கு Hans Zimmerன் இசை. ஒவ்வொரு காட்சியிலும் நம் கண்களை விட காதுக்கு வேலை வைக்கிறார் ஹேன்ஸ் ஜிம்மர்! குறிப்பாக சிறையில் அடைப்பட்டிருக்கும் பேட்மான் வெளிய தப்பிக்க முயற்சி செய்யும் காட்சியின் பின் வரும் இசை உச்சக்கட்டம். 

  பொதுவாக சூப்பர் ஹீரோ குற்றவாளிகளை தண்டித்துவிட்டோ, கொன்றுவிட்டோ நகர்பவர்களாக இருக்கையில் பேட்மேனின் சட்டத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை அவரை சூப்பர் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோவாகவே நமக்கு காட்டுகிறது. 

இது Christopher Nolan's, Batman சீரிஸின் இறுதி பாகம். டார்க் நைட் படத்தில் இருந்த நல்லதுக்கும் தீமைக்குமிடையில் இருக்கும் தத்துவார்த்தமான கதைக்களம் இதில் இல்லையென்றாலும் இதைவிட அருமையான முடிவை இந்த பேட்மேன் சீரிஸ் பெற்றிருக்க முடியாது! நொலேன் நொலேன் தான்!