Monday 25 February 2013

ஹலோ..எங்களுக்கு பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்ட்டும் வீக்கு


தமிழ்நாட்டுல மட்டும் இல்ல உலகத்துல எங்க நடந்தாலும் என்ன நடந்தாலும் 'திமுக'வையே ஃபோக்கஸ் செய்து கொண்டிருக்கிறது மீடியா. அதாவது இவைங்கள பொருத்தவரைக்கும் தமிழ்நாட்டுல ஏன் நம்ம வர்டுலயே இருக்குற ஒரே கட்சின்னா அது திமுக தான். 'திமுக'ல இருக்குற ஒருத்தரோட மூணாம் பங்காளியோட ரெண்டாவது தம்பியோட மாமியாரோட அண்ணன் பையனோட அக்கா மகன் எதாவது செஞ்சா கூட அத தேடி கண்டுபுடிச்சு u-turn, z-curve எல்லாம் அடிச்சு வந்து எப்படியோ தலைமைகிட்ட முடிச்சிருவாய்ங்க. ஆனா ஆளும்கட்சியில நடக்குற பிரச்சனைய பத்தி எழுதுனா மட்டும் (முக்கால்வாசி எழுதவே மாட்டாய்ங்க) என்னமோ ஆப்ரிக்கால நடக்குற பிரச்சனை மாதிரி பட்டும் படாம எழுதுவாய்ங்க. அப்படி ஒரு விசுவாசம். சரி இதெல்லாம் தெரிஞ்ச கதை தான், ஆனா பத்திரிக்கையும் மறந்து போன, நாட்டையே உலுக்கிய (!!??) சில போராளிகள் என்ன பண்ணாங்க, என்ன செய்றாங்கன்னும் யாருக்குமே தெரியல. அது என்னான்னு பாப்போம்.

மொதல்ல நம்ம
ஈழத்து இளைய மகன் சைமன்:

 ஆரம்பத்துல சேவாக் மாதிரி அதிரடியா ஆரம்பிச்சு ஓட்டிகிட்டு இருந்தாரு, என்னையா தொண்ட கிழிய கத்துறாரே எதாவது பண்ணுவாரோன்னு நெனைக்குறப்பவே 'உஜாலா'க்கு மாறி முதல்வர சந்திக்கப் போனாரு! அங்க என்னடான்னா கைய கட்டிக்கிட்டு கங்குலிய பார்த்து பம்முற ஆசிஸ் நெஹ்ரா மாதிரி பல்லக் காட்டிக்கிட்டு இருக்காரு. இதுக்கு பேசாம இவரு அடுத்தவன் போட்ட மேடைல கத்திகிட்டே இருந்திருக்கலாம். ஆனா கூட இருந்த எவனோ நம்ம வண்டு முருகன் வடிவேலுகிட்ட சொன்ன மாதிரி, "ஆமான்ணே அப்படியே ஜேசுதாஸ் மாதிரியே இருக்கிங்கண்ணே"னு சொல்லித் தொலைச்சு உசுப்பேத்தி அரசியல்ல குதிக்க வச்சிடாய்ங்க. அதோட விட்டாய்ங்களா, எல்லா மேடைக்கும் கூட்டிட்டு போய் பலி ஆடு மாதிரி தலைல தண்ணிய ஊத்திவுட்டாய்ங்க! இவரும், ''எம்.ஜி.ஆர் பதவியேற்புக்கு பெரியார் வந்தாரு', 'ஜெயலலிதா பதவியேற்புக்கு ஜெய்சங்கர் வந்தாரு', 'பாகிஸ்தான் தேர்தல்ல பவர்ஸ்டார் நின்னாரு'ன்னு எதாச்சும் உளறிட்டு அப்புறம் அத சமாளிக்க இன்னொரு பொய்ய சொல்லி, வாய குடுத்து புண்ணாக்கிறதுல இந்தாள விட்டா வேற ஆளே கிடையாது. 

 போன ஆட்சி இருந்தப்ப வரைக்கும் தைரியமா மேடையேறி ஊளையிட்டுகிட்டு இருந்தாரு. ஆட்சி மாறனும் மாறுனாதான் மக்களுக்கு நல்லதுனு கத்திட்டு இருந்தாரு. ஆட்சியும் மாறுச்சு, கூடவே இந்தாளு தலையெழுத்தும் மாறிடுச்சு. நரி ஊருக்குள்ள வர்றதே தப்பு இதுல ஊளையிட்டுகிட்டு வேற வருதானு ஒரு 'சி.டி'யை வச்சே ஃபியூஸ புடிங்கிட்டாய்ங்க. அப்ப அடைச்ச வாயிதான்! ஹ்ம்ம் ஹ்ஹ்ம்ம்.. திறக்கவேயில்லையே!! எதோ ஹரி பட ஹீரோ மாதிரி சுப.வீய குத்துவேன், எவனாயிருந்தாலும் வெட்டுவேன்னு பொலம்பிகிட்டு இருந்தாரு எவனும் கண்டுக்கல. அதுக்கப்புறம் இப்பெல்லாம் ஏப்பம் கூட சத்தமா விடுறது இல்ல. கல்யாண மண்டபத்த புடிச்சோமா அடக்கி வாசிச்சோமான்னு பொழப்பு போயிகிட்டிருக்கு.

                                  

 அரசியல் ஆசை தான் இப்படி போச்சுன்னு பாத்தா சினிமாவுல           அதவிட மோசம். (அடேங்கப்பா அதுக்கு முன்னாடி நாலு ஆஸ்கரு வாங்கிட்டாரோன்னு நீங்க கேக்குறது புரியுது) ஏற்கனவே வாழ்த்துகள்னு ஒரு சர்வதேச தரத்துல ஒரு மொக்க படம் எடுத்ததோட அரசியலுக்கு ஓடிவந்த அண்ணனுக்கு மறுபடியும் சினிமா ஆசை வந்துருச்சு! அதுக்கு 'விஜய்'யை பலி ஆக்க அண்ணன் போட்ட பிட்டு தான், "எனக்கு புடிச்ச நடிகர் விஜய்னு என்கிட்ட பிரபாகரன் சொன்னாருன்னு மேடைல சொன்னது!  நம்ம விவேக் ஒரு படத்துல மயில்சாமி கிட்ட சொல்ற மாதிரி "நீ பண்ண எல்லத்தையும் நான் பொறுத்துக்குவேன், ஆனா திருப்பதில சந்திரபாபு நாயுடுவே லட்டுக்கு பதிலா ஜிலேபி போட சொல்லிட்டாருனு விட்டியேடா ஒரு பீலா, அததாண்டா என்னால பொறுத்துக்க முடியல"னு அது மாதிரியான பீலா தான் இதுவும். ஜெயில்ல உக்காந்து கதை ரெடி பண்ணிட்டேன் படத்துக்கு பேரு கூட "பகலவன்"னு வச்சிட்டேன்னெல்லாம் அடிச்சு வுட்டாரு. ஆனா அதுக்கு இடைல கலைஞர் டிவில விஜய் வாழ்த்துகள் படம் பார்த்துருப்பாரு போல. சீமான் பேரைக் கேட்டாலே தெறிச்சு ஓடுறாராம்! இப்ப அந்த படத்துல நடிக்க டி.ஆர் கிட்ட கால்ஷீட் கேக்குறதா கேள்வி!!

                                                

 அப்படி இப்படி எதாச்சும் பண்ணி தேர்தல்ல இறங்கிருவாருனு மக்கள் எதிர்பார்த்தாங்க, ஆனா அண்ணன் என்ன பண்ணாரு?? என் கட்சி நிர்வாகி எல்லாம் ஸ்கூல்ல அஞ்சாப்பு, ஆறாப்பு படிக்கிறாங்கன்னு வழக்கம்போல தெளிவா பேசுனாரு, மக்கள் எல்லாம் அப்பவே முடிவு பண்ணிட்டாங்க,"இது எதோ காமெடி பீஸு", நம்ம அடுத்த வேலைய பாப்போம்ன்னு.

நம்ம சைமன் அண்ணனோட ஒரே பிரம்மாஸ்திரம் ஈழப்பிரச்சனை, அதுலயும் மண்ண அள்ளி போட்ருச்சு இந்த டெசோ. நம்ம ஆளு லோக்கல்ல நாலு பேத்த சேத்தோமா, உதாரு விட்டோமானு இருந்தாரு. ஆனா இந்த 'டெசோ'ல என்னன்னா பொதுகூட்டம், ஐ.நா சபை உறுப்பினர்கள் கிட்ட தீர்மானம் கொடுக்குறது டைரக்டா அத்தாரிட்டிகள் கிட்டயே கொண்டு போனவுடன நம்மாளுக்கு வயித்தக் கலக்கிருச்சு. உலக வரலாற்றுலயே ஒரு பொதுக்கூட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்துன ஒரே ஆள் நம்ம அண்ணன் தான்! கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம 'டெசோ எதிர்ப்பு கூட்டம்' அறிவிச்சாரு! கடைசில அது புஸ் ஆயிருச்சு! எந்தப் பக்கம் போனாலும் நமக்கு அணை கட்டுறாய்ங்கனு கடைசில அண்ணன், " பிறந்தநாள் கொண்டாட்டமும் திண்டாட்டமும்"னு ஒரு சீரியல் நடிக்கப் போறதா நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆவேச நாயகன் வைகோ :

சீமான் தான் எதோ வக்கீல் வண்டு முருகன் காமெடினு பாத்தா நம்ம வைகோ அதுக்கு மேல கரெக்டா சொல்லனும்னா எவ்ளோ அடிச்சாலும் தாங்குறதுல அண்ணன் ஒரு வீரபாகு, அடி வாங்குனத அடுத்த நிமிஷமே மறந்துட்டு திருப்பி அவனுங்ககிட்டையே போறதுல அண்ணன் ஒரு கைப்புள்ள. இந்த மாதிரி அண்ணனுக்குள்ள அவருக்கே தெரியாம பல ரூபங்கள் குடியிருக்கு. ஒன்னரை வருசம் கிட்ட "பொடா"வுல உள்ள தூக்கி போட்டுச்சு அந்த அம்மா, ஆனா அடுத்த தேர்தல்லையே அவங்க கூட கூட்டணி வச்சிட்டு, "அன்பு சகோதரி என்ன உள்ள தூக்கி போட்டது அது போன வருசம் நான் சேந்தது இந்த வருசம்"னு டயலாக்க போட்டுட்டு கூச்சமே இல்லாம கெளம்புனவரு நம்ம அண்ணன். அங்க போனா அந்த 'அன்பு சகோதரி' என்ன பண்ணாங்க ரெண்டேகால் சீட்டு, ஒன்னே முக்கால் சீட்டுனு புட்டு புட்டு தர்றேன்னு சொல்லி கடைசில அதையும் புடிங்கிட்டு விட்டுட்டாங்க! நடுத்தெரு நாராயணன் மாதிரி டிவி டிவியா புலம்புனதுதான் மிச்சம்! ஆனால் அண்ணாத்த அப்படியே ஒரு பில்டப்ப போட்டு தேர்தல புறக்கணிக்கிறோம்னு சொல்லி உதார் விட்டாரு ஆனா உண்மையில நடந்தது என்னன்னா தேர்தல் தான் அண்ணனை புறக்கணிச்சிச்சு.

                                                                      

அதுக்குமேல துயரமா நம்ம நன்னாரி சர்பத்..சாரி..நாஞ்சில் சம்பத்தும் வைகோவ அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரு. அந்தாளு காமெடி அதுக்கு மேல. மத்தவங்களாச்சும் எந்தக் கட்சிக்கு தாவுறதுனு முடிவு பண்ணிட்டு வெளியேருவாங்க, ஆனா இந்தாளு வெளிய வந்திட்டு எங்கிட்டு போறதுனு யோசிச்சிகிட்டே உக்காந்திருந்தாரு. கடைசில தனக்கு ஏத்த குட்டைல போய் ஒருவழியா விழுந்திருச்சு. போன எடத்துல ஒரே சொகுசு வாழ்க்கைதான். மொட்டை அடிச்சவன் கூட்டம் மத்தியில குடுமி வச்சவன் மேல்ங்குற மாதிரி, மேல இருந்த கேஸ் வாபஸ், புது இன்னோவா காரு, புது கொ.ப.செ பதவி, கலக்குற சர்பத்து..பிராமாதம். இந்தாளு போனதுக்கு அப்புறம் படிக்காதவன் ரஜினி மாதிரி "ஊர தெரிஞ்சிகிட்டேன்"னு நம்ம வைகோ பாடிகிட்டு இருந்தாரு. அதுக்கு காரணம் சம்பத் இவர விட்டுட்டு போன வருத்தம் நெனைக்காதிங்க, கூப்டிருந்தா நானும் வந்திருப்பேன், ஆனா அவன் மட்டும் இப்ப தனியா போய் சேர்ந்துகிட்டானேங்குற வருத்தம் தான் அவருக்கு. வெளிய போன சர்பத்தோட மொத டார்கெட்டே(target) வைகோ தான். அந்த ஆளு மதிமுகவ விட்டு போறப்பவே பவர்ஸ்டார் மாதிரி "நான் ஆகுறேண்டா பெரிய லீடர், வைகோவுக்கு இனிமே என்னாலதாண்டா தொல்லை, ஆனந்த தொல்லை"ன்னு சபதம் எடுத்துட்டு போயிருக்காரு. ஆனா அங்க போனதுக்கு அப்புறம் இந்தாளும் பிறவி அதிமுக காரன் ஆயிட்டாரு. அதிமுக எம்.எல்.ஏங்களுக்கு போட்டி போட்டு மேடை போட்டு அம்மா புகழ் பாடிட்டு இருக்காரு.
   
வைகோவோட தலையாய பணியே அப்பப்ப கலைஞர திட்டி அறிக்கை விடுறதுதான். அதாவது இந்தாளு வீட்டுல டிரைவர் வரலைனாலும் அதுக்கும் கலைஞர் தான் மத்திய அரசு கிட்ட சொல்லி டிரைவர வரவிடாம தடுத்து நிறுத்திட்டாங்க சொல்லுவாரு. இந்தாளுக்கு நல்லா தெரியும் கலைஞர என்ன திட்டினாலும் நாளைக்கு வீட்டுக்கு போய் பார்த்தா மன்னிச்சு உள்ள விட்ருவாருன்னு. அதுக்கப்புறம் வைகோவோட முக்கிய ஆயுதமும் ஈழம் தான். அத வச்சே பல வருசம் வியாபாரத்த ஓட்டுனாரு.அதனால தான் இப்போ 'டெசோ'வ முழு மூச்சுல எதிர்க்கிறாரு, எங்க ஒருவேளை 'டெசோ'னால எதாச்சும் நல்லது நடந்துட்டா தன் தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுருமோங்குற பயத்துலதான். டி.டி.எச்சை பார்த்து கேபிள் டிவிகாரன் பயப்படுற மாதிரி! முக்குக்கு முக்கு, டி.விக்கு டி.வி போய் டெசோனால ஒன்னும் ஆகாது,அது தேவையில்லாததுனு பொலம்பிட்டு இருக்காரு.(ஆமா,இவர விட்டா கேப்டன், பாகிஸ்தான் தீவிரவாதிகள தொம்சம் பண்ண மாதிரி இலங்கைல போய் உடனே ஈழம் வாங்கி கொடுத்துருவாரு.) இத்தன வருசத்துல எதாச்சும் ஈழத்துக்காக உருப்படியா பண்ணிருக்காரா இவரு?? ஒரு காலத்துல "விடுதலைப் புலிகளுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை"ன்னு அறிக்கை விட்டுட்டு, இப்போ என்னமோ விடுதலை புலிகளுக்கும் ஈழத்துக்கும் இவரு ஒருத்தர் தான் authority மாதிரி உதார் விட்டுட்டு இருக்காரு. ( இப்படி தான் இன்னொருத்தரு 5நிமிசம் 'ஐ.நா'ல பேசுனா ஈழம் வாங்கி தந்திருவேன்னு காமெடி பண்ணிட்டு இருக்காரு. கெட்ட வார்த்தை அதிகமா பேசுறாரு, எச்சி தெறிக்குதுனு அவரை இப்பலாம் அவங்க வீட்லயே பேச விடுறதில்லையாம்)

 ஜெயலலிதா ஒரு தடவ அத்வானிய "செலக்டிவ் அம்னிசியா"னு சொல்லி திட்டுனாங்க. அந்த வியாதி ஒருவேளை இவருக்கு தான் இருக்கும் போல. எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம அடுத்த தடவையும் அதே எடத்துக்கு போயி அவமானப்படுவாரு. ஒரு வேளை இவருக்கு அவமானம்ன்னா என்னன்னு தெரியாம இருக்கும் போல. வைகோவுக்கும், சம்பத்துக்கும் ஒரே வித்தியாசம் என்னன்னா சம்பத் அதிமுகவோட அறிவிக்கப்பட்ட கொ.ப.செ. இவரு "ஸ்பெஷல் ஃபோர்ஸ்" அதாவது அறிவிக்கப்படாத கொ.ப.செ. எப்பெல்லாம் அதிமுகக்கு பின்னடைவு ஏற்படுதோ அப்போதைக்கு இந்தாள ஏவிவிட்டு திமுகவ குறை சொல்லி ஊரு ஊரா சுத்தவிட்டுட்டு கடைசில இந்தாளையே சுத்தல்ல விட்ரும். கை துடைத்த டிஷ்யூ (tissue paper) மாதிரி தூக்கி போட்ருவாய்ங்க. ஆனா ஏன் என்ன பண்ணாலும் பாசமலர் சிவாஜி மாதிரி சகோதரி, சகோதரின்னு அன்பை பொழியிறாருனு தெரியல. 

                              

இது போக அப்பப்போ ஊரு ஊரா நடையக்கட்டுவாரு. மொத ஒரு ரெண்டு தடவயாவது ஏன் நடக்குறாரு, என்ன காரணம்னு கேட்டாங்க, அதுக்கப்புறமெல்லாம் நான் நடை பயணம் மேற்கொள்கிறேன்னு பேட்டி கொடுத்தா மக்கள் எல்லாம் சந்தானம் மாதிரி "இவரு ஒருத்தரு சிரிப்பு காமிச்சிகிட்டு"னுங்குற மாதிரி பேச ஆரம்பிச்சிடாங்க. சமீபத்துல கூட எதுக்கோ ரொம்ப நாளா நடந்துகிட்டு இருந்தாரு, ஒரு நாள் அவரு நடைபாதையில் குறுக்கே வந்த முதல்வரம்மா அவருகிட்ட "ஆமா எதுக்கு நடக்குறிங்க"னு கேட்டாங்க. நடக்குறதே தமிழக அரசு நிறுவனமான டாஸ்மாக்கை எதிர்த்து, ஆனா இத்தன நாளா அது முதல்வருக்கே தெரியலையாம். இதுக்கு பேசாம வீட்டு மொட்டமாடிலயே நடந்துருக்கலாம், அவரு வீட்டு வாட்ச்மேனுக்காவது தெரிஞ்சிருக்கும். இதவிட ஒரு உச்சக்கட்ட அவமானம் யாருக்கும் வராது, "ச்சே, நம்ம வீக்னஸ் வீனாவுல போச்சு"ன்னு நொந்துட்டாரு. ஆனாலும் நம்மாளு அதையெல்லாம் கண்டுக்காத மாதிரி முண்டாசை இறுக்கிக் கட்டிக்கிட்டு பொறந்தநாள் வாழ்த்து சொல்லி அடுத்த தேர்தல்க்கு அடி போட்டுட்டாரு (அதாவது அடுத்த அவமானத்துக்கு ரெடி ஆயிட்டாரு).          

இந்த வைகோவும் பல காலமா முட்டி மோதி, என்னென்னமோ பண்ணி பாத்துட்டாரு, ஆனா நேத்து வந்த தேமுதிக கூட எதிர் கட்சியா வந்துருச்சு ஆனா இவைங்க பாடு இன்னும் ஆரம்பிச்ச எடத்துலையே தான் இருக்கு. வடிவேலு சொல்ற மாதிரி, "ஆளு ரொம்ப வீக்கா இருக்க, உன்னைய இந்த வேலைக்கு தப்ப செலக்ட் பண்ணிருக்காய்ங்க"னுதான் இவர பாத்து சொல்லனும் போல. தொரத்தி அடிக்கிர எடத்துல பாசதோட இருக்குறது. அரவணைக்கிற இடத்துல அடாவடி பண்றது! என்னமோ போப்பா இப்படியே நடந்து நடந்து ஒருநாள் அமேஜான் காடுகளே வந்துரும் போல! அப்புறம் எர்வாமேட்டின் விக்க வேண்டியதான்!
               
                                                                                                                                 (தொடரும்)
 

2 comments:

  1. மொத ஒரு ரெண்டு தடவயாவது ஏன் நடக்குறாரு, என்ன காரணம்னு கேட்டாங்க, அதுக்கப்புறமெல்லாம் நான் நடை பயணம் மேற்கொள்கிறேன்னு பேட்டி கொடுத்தா மக்கள் எல்லாம் சந்தானம் மாதிரி "இவரு ஒருத்தரு சிரிப்பு காமிச்சிகிட்டு"னுங்குற மாதிரி பேச ஆரம்பிச்சிடாங்க.// சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது

    ReplyDelete
  2. வடிவேலு சொல்ற மாதிரி, "ஆளு ரொம்ப வீக்கா இருக்க, உன்னைய இந்த வேலைக்கு தப்ப செலக்ட் பண்ணிருக்காய்ங்க"னுதான் இவர பாத்து சொல்லனும் போல. :)

    ReplyDelete