Wednesday 26 February 2014

மூன்று பிரதமர்களும் முக்கிய அம்சங்களும்




கொஞ்ச காலத்துக்கு முன்னாடி நம்ம ஊருல இருந்த ஒரு ஹாட் டாபிக்னா அது அடுத்த சூப்பர் ஸ்டார் யாருங்குறது தான். அதுக்கு ஆயிரம் அடிதடி நடந்து இன்னும் முடிவு தெரியாம ஆளாளுக்கு நான் தான் அடுத்த சூப்பர்ஸ்டார்னு சொல்லிகிட்டு ஓட்டிகிட்டு இருக்காங்க. அது மாதிரி இப்ப ஒரு லேட்டஸ்ட் ட்ரெண்ட் என்னனா அடுத்த பிரதமர் யாருங்குறது தான். எனக்கு தெரிஞ்சு இதுவரைக்கும் எந்த கட்சி ஜெயிக்கும்னு தான் போட்டி வந்திருக்கு ஆனா இப்பதான் தேர்தலுக்கு முன்னாடியே இத்தன பிரதமர் வேட்பாளர்கள் நமக்கு கிடச்சு அதுக்கு போட்டி நடந்திட்டு இருக்கு. ஆல் இந்தியா லெவல்ல லிஸ்ட் ரொம்ப நீளம்கிறதால நமக்கு தேவையான முக்கியமான லிஸ்ட்ட மட்டும் பாப்போம். நம்ம ஊருல ஹைலைட்டான மூனு பேரு, இதுல மோடியும் ராகுலும் இந்திய லெவல் போட்டி இடையில புகுந்து ட்விஸ்ட் கொடுத்தது நம்ம "அட்மினிஸ்ட்ரேட்டர் அம்மா" ஜெயலலிதா.





     மோடி, இந்திய அரசியலின் பவர்ஸ்டார். நம்ம தமிழ் சினிமாவுல பவர் ஸ்டார் எப்படி திடீர்ன்னு உள்ள புகுந்து அதிரடி விளம்பரத்தால அதிரவச்சாரோ அதே மாதிரி தான் மோடியும், முழுக்க முழுக்க மீடியா 'ஹைப்'னாலையே பிரபலமாயிட்டாரு. நம்ம மீடியாவ பத்தி தான் தெரியுமே குதிரையா குரங்காவும் காட்டும், குப்பைய குதிரையாவும் மாத்தும். குஜராத் கலவரத்தையும், சிறுபான்மையினருக்கு செய்த துரோகத்தையும் முழுசா மூடி மறச்சு குஜராத்தை என்னமோ அவரு மட்டும் தான் வடிவமச்ச மாதிரி விளம்பரபடுத்திட்டு இருக்காங்க. ராஜபக்சே மாற்று இன மக்களுக்கு எதிரா செய்த்த படுகொலையை விட மோடி சொந்த நாட்டு மக்களுக்கு செய்த துரோகம் பெரிசு. கரன் தப்பார் எடுத்த பேட்டி ஒன்ன பாத்தாலே போதும், முதல்வன் ரகுவரன் மாதிரி செம பெர்ஃபார்மன்ஸ் போடுவாரு. இதுல வேற மோடி இளைஞர்களின் நம்பிக்கை முகம், அலை வீசுது, நாத்தம் வீசுதுனு பில்டப் கொடுக்குறானுங்க, நடுவுல வேற ட்விட்டர், ஃபேஸ்புக்ல எக்கசக்கமா ஆதரவு மோடிக்கு தான் இருக்கு அவங்க எல்லாம் ஓட்டு போட்டாலே மோடி பிரதமர் ஆகுறத யாரும் தடுக்க முடியாதுன்னு எஃபக்ட் கொடுத்தாங்க. இத சொல்லும் போது ஒரு பேட்டியில எனக்கு நம்ம பவர்ஸ்டார் ,"நான் நெனச்சா நாளைக்கே என் ரசிகர்கள் 50லட்சம் பேர கடற்கறையில கூட்டி காட்டுறேன் சார்"னு சொன்னாரு அதான் ஞாபகம் வருது. கள்ள ஓட்டு போடுறதுக்கு ஆள் வச்சிருப்பாங்கன்னு கேள்வி பட்ருக்கேன் ஆனா கள்ள லைக் போடுறதுக்கு ஃபேக் ஐடி வச்சிருக்கிற ஆள இப்பாதான் பாக்குறேன். சரி அப்படி என்னதான்யா நிர்வாகத்திறமையால என்ன தான் சாதிச்சிட்டாருன்னு பாத்தா இந்தியாவுல உள்ள மாநிலங்கள்ல வளர்ச்சி சதவிகிதத்துல குஜராத் ஒன்னும் அவ்ளோ சிறப்பா இல்ல. பல மடங்கு பின் தங்கிய பீகார் முதல் இடத்துல இருக்கு. ஆனா மீடியா அதையும் பில்டபோட சொல்லி ஊர ஏமாத்துறாங்க. நம்மாளு மோடியும் டீ கடையில உக்காந்து அரசியல் பேசுறது, பஞ்ச் டயலாக் விடுறதுன்னு என்னென்னமோ கம்பு சுத்தி காட்டுறாரு..பாப்போம்.



அடுத்து நம்ம ராகுல் காந்தி. ஒரு நாள் டி.வியில ஒரு விளம்பரத்துல ஒரு இளைஞர் வந்து டப்பிங் பண்ண விளம்பரம் மாதிரி பேசிட்டு இருந்தாரு.. ஏதோ டப்பிங் பண்ண அரசாங்க விளம்பரமோ, இல்ல சக்தி மசாலா விளம்பரமோன்னு நெனச்சா திடீர்னு ராகுல், சோனியா,மன்மோகன் எல்லாம் என்ட்ரி ஆகுறாங்க..அப்புறம்தான் தெரியுது அது காங்கிரஸ் கட்சிக்கு விளம்பரம்னு.. காங்கிரஸ் நிலமை இப்படி ஆயிருச்சே..இனிமே ராகுல் தான் நம்ம 'டான்' இவரு கைல தான் எல்லாரும் முத்தம் தரனும்னு காங்கிரஸ் காரங்க மைண்ட் செட்டானங்க. இவரும் இளைஞர் காங்கிரஸ் அது இதுன்னு ஆரம்பிச்சாரு, அப்பதான் தேர்தல் வந்துச்சு நம்மாளும் குடிசைக்கு போய் சப்பாத்தி சாப்பிடுறது, கயித்து கட்டில்ல உக்காந்து காத்து வாங்குறதுன்னு என்னென்னமோ பண்ணாரு கடைசியில எல்லாம் புஸ்குனு போயிருச்சு. குடிசைக்கு போய் சப்பாத்தி சாப்புட்டு ஓட்டு கேக்க மறந்துட்டாரு போல, மக்களும் பாவம் புள்ளைக்கு பசி போலன்னு சப்பாத்திய போட்டுட்டு ஓட்டு போடாம விட்டாங்க. பெருசுங்க எல்லாம் நாங்களா போய் கை காலுல விழுந்தா கூட ஓட்டு போட்ருபாய்ங்க, உன் பேச்ச கேட்டு இப்படி ஆயிருச்சேன்னு கடுப்பாயிட்டாங்க.  இப்ப நடுவுல சும்மா இருக்காம பேட்டி கொடுக்க போறேன்னு போய் அங்க எந்த கேள்வி கேட்டாலும் நம்ம வடிவேலு மாதிரி "என்ன கைய புடிச்சு இழுத்தியா??"ன்னு சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிட்டு கிளம்பி வந்துட்டாரு. அப்பதான் காங்கிரஸ்க்கு தெரிஞ்சிச்சு போல இந்தாளு சிரிப்பு போலீஸ்னு. தம்பி நீங்க ஒதுங்கிக்குங்க நாங்க பாத்துக்குறோம் ஜெயிச்சா உன்ன ஆட்டையில சேத்துக்குறோம்னு சொல்லி அமைதி படுத்திருக்காங்க. மன்மோகன் சிங், மனுசன் அவரு பாட்டுக்கும் வெள்ளை சட்ட போட்டுகிட்டு நிதி அமைச்சரா டீசண்டா இருந்தாரு, அவர கொண்டு வந்து பிரதமர் ஆக்கிவிட்டு இண்டர்நேசனல் லெவல்ல நாரடிச்சிட்டாய்ங்க. இனிமே கூல்ட்ரிங்க்ஸ் குடிக்கும் போதெல்லாம் எனக்கு அந்த ஞாபகம் தானடா வரும்னு ஃபீல் பண்ணிட்டு கிளம்பிட்டாரு. இப்ப பிரதமர் வேட்பாளர் யாருன்னு அவங்களுக்கு தெரியாது நமக்கும் தெரியாது.

கடைசியா நம்ம லோக்கல் ஸ்டார் ஜெயலலிதா. தெரிஞ்சிக்குங்க மக்களே, நாப்பதுக்கு நாப்பது ஜெயிச்சாலும் அது எப்படி பிரதமர் ஆக முடியும்னு யாரும் லாஜிக்கல் கொஸ்டின் கேக்க கூடாது. அவங்க சொன்னத கேட்டுக்கனும். தல கவுண்டமணி சொல்ற மாதிரி "பழனிச்சாமி என்ன தைரியத்துல நீ இப்படியேல்லா பேசுற"ன்னு எல்லாம் கேக்க கூடாது. நமக்கு தமிழ்நாட்ட நிர்வாகிக்கறதுக்கே ஒரு மாசத்துக்கு ரெண்டு மாசம் ஓய்வு கேக்குது. இதுல டெல்லி ஆசை எதுக்கு?? இங்க எல்லாம் சாதிச்சு முடிச்சிடாங்களாம் அடுத்து இப்ப இந்தியா மானத்தை நான் தான் காப்பாத்துவேன்னு கிளம்பிட்டாங்க. ஆபிஸ்ல ஒரு தடவை இந்த பேச்சு வந்தப்ப கூட வேலை பாக்குற ஒரு பொண்ணு அம்மா பிரதமர் ஆனா தான் நல்லா இருக்கும்னு சொன்னாங்க.அப்படி என்னதாங்க அந்த அம்மா பண்ணிருக்குன்னு கேட்டேன், யோசிச்சு யோசிச்சு பாத்து கடைசியில அவங்க நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்னு சொன்னாங்க. ஏங்க ரெண்டு மணி நேரம் சொல்லிட்டு கரெண்ட நிறுத்துனாங்க இந்தம்மா வந்து ரெண்டு மணி நேரம் தாண்டா எங்க ஊர்ல கரெண்டே விட்டுச்சுன்னு சொன்னா,"பொய் சொல்லாதிங்க பாஸ், நாலு மணி நேரம் தான் கரெண்ட் கட் ஆச்சு'ன்னு சொல்றான் இன்னொரு சென்னை பையன். ரெண்டு வருசமா தமிழ்நாடே இருள்ல மூழ்கி இருந்தது கூட தெரியாம அட்மினிஸ்ட்ரேட்டர்னு அரைகுறையா உளறிட்டு இருக்காங்க நம்ம பசங்க. நல்ல அட்மினிஸ்ட்ரேட்டர்னு குருட்டுத்தனமா சொல்றவங்களுக்கு இப்போ வந்த GDP ரிப்போர்ட்ல அட்மினிஸ்ட்ரேட்டர் அம்மா தமிழகத்த எங்க கொண்டு போய் விட்ருக்காங்க தெரியுமா?? ஒலிம்பிக் பதக்க பட்டியல்ல இந்தியா பேரு மாதிரி கீழ கிடக்கு. 2009ல் திமுக ஆட்சியில் 10.8% இருந்த வளர்ச்சி விகிதம் பின் 2010ல் திமுக ஆட்சியில் 13.8ஆக உயர்ந்தது. பின் 2011-2012 ஜெயலலிதா ஆட்சியில் 7.42 ஆக  சரிந்த வளர்ச்சி விகிதம் இப்போது 2013ல் 4.14% ஆகக் குறைந்து அதலபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது (அட்மினிஸ்ட்ரேட்டர்னு சொல்ற பல பேருக்கு GDP என்ன, எதுக்குனே தெரியாது). இதெல்லாம் நம்ம பசங்களுக்கு தெரியாது,காரனம் ஊடகம். ஒன்னுமே செய்யாம எல்லாமே செஞ்சு சாதிச்ச மாதிரி பில்டப் கொடுத்து ஏத்தி விடுறதே இவங்களுக்கு பொழப்பு.



நம்ம ஆளுங்களும் இந்தம்மா அறிவிக்கிற திட்டங்கள நம்பி என்னமோ நெறைய நன்மை செய்யிறதா நெனச்சிகிட்டு ஏமாந்து போறாங்க. சுருக்கமா சொல்லனும்னா வானத்தை போல படத்துல செந்தில் பிச்சகாரனுக்கு இட்லி,வடை,தோசைன்னு கட்டி தர சொல்லுவாரு அதுக்கேத்த மாதிரி அந்த பிச்சக்காரனும் மகராசா,எசமான்,நூறு வருசம் இருக்கனும் வாழ்த்துவாரு, கடைசியில ஒன்னுமே தராம செந்தில் பிச்சக்காரன்கிட்ட, ஏண்டா நீ சொன்னதெல்லாம் எனக்கு நடக்கவா போகுது,உன் மனசுக்கு சந்தோசமா நான் சொன்னேன், என் மனசுக்கு சந்தோசமா நீ சொன்ன அவ்ளோதான் கிளம்புன்னு சொல்லுவாரு. அதே கதை தான் தமிழக மக்களுக்கும், ஜெயலலிதாவும்.
செந்தில் ஜெயலலிதா அறிவிக்கும் திட்டத்துக்கு (அறிவிப்பு மட்டுமே) நம்மாளுங்களும் அன்னலெட்சுமி,வீரலட்சுமி,ஈழத்தாய் அது இதுன்னு அகராதியில இருக்குற எல்லா பட்டத்தையும் கொடுப்பாங்க, கடைசியில நீங்க என்ன அடுத்த தடவ எனக்கா ஓட்டுப் போட போறிங்க உங்களுக்கு செய்யிறதுக்குன்னு சொல்லிட்டு கொடநாட்டுக்கு கிளம்பிருவாங்க. இதுக்கும் வக்காலத்து வாங்குவானுங்க நம்மாளுங்க, கொடநாடு தமிழ் நாட்டுல தான இருக்கு அங்க இருந்து முதல்வர் அலுவலக வேலை செய்யலயான்னு லா பாயிண்ட் பேசுவானுங்க.
என்னயா டிக்கெட் எடுக்காம கக்கூஸ்லையே உக்காந்து போற மாதிரி சொல்றிங்க. டிக்கெட் எடுத்தவன் நல்லா சீட்ல உக்காந்து போக வேண்டியது தான.. எப்பவுமே கக்கூஸ்ல இருக்குறதுக்கு எதுக்கு டிக்கெட் எடுக்கனும். (படிக்காதவன் படத்தில் விவேக் ட்ராக்). அப்படி முடியாத பட்சத்துல எதுக்கு கஷ்டப்பட்டு முதல்வரா இருக்கனும் போய் முழுசா ஓய்வு எடுக்க வேண்டியது தான.

ஆகமொத்ததுல ஒன்னு தெளிவா தெரியுது ஒருகாலத்துல கிராமத்து மக்கள சினிமாவ காட்டி ஓட்டு வாங்குன மாதிரி இன்னைக்கு இளைஞர்கல மீடியா விளம்பரத்த காட்டி ஏமாத்தி ஓட்டு வாங்க பாக்குறாங்க. இவங்களுக்கு போடுங்க அவங்களுக்கு போடாதிங்கன்னு சொல்லல,யாருக்கு போட்டாலும் கொஞ்சம் முன்ன பின்ன யோசிச்சு, விசயத்தை,விளைவுகளை,நிகழ்வுகளை எண்ணி முடிவு பண்ணுங்க.

2 comments:

  1. YOV....POST ULTIMATE....IRUNDALUM ROMBA NAKKAL YA UNAKKU....UNAKU KALI CONFIRMED...!!!!!!1111

    ReplyDelete
  2. வாவ். இவ்வளவு எதார்த்தமா நக்கலா நம்ம மக்கள் மண்டையில் நச் என பதியும் அளவுக்கு பதிவை படிச்சதே இல்லப்பா, :)) ட்விட்டரில் பகிர்ந்தாச்சு. கூடவே பிரதமர் போட்டிக்கு தயாராகும் மம்தா போன்றோரையும் சேர்த்து இருக்கலாம். ஆனாப் பாருங்க, தமிழக வளர்ச்சியை குப்பைக் கிடங்கில் போட்டுவிட்டு அரசியல் ஸ்டண்ட் அடித்து கோல் போட நினைக்கிறாங்க இந்தம்மா. அதையும் நம்பிக்கிட்டு விட்டில் பூச்சிகள் விளக்கில் விழுந்தமாதிரி போய் விழுந்துகிட்டு கிடக்கிறாங்க நம்மாளுங்க. கொடுமைடா.

    ReplyDelete