Thursday 13 September 2012

முகநூல் கஜினிகள்



  இந்தியாவிலயே, ஏன் இந்த வர்ல்டுலயே வாய வச்சே போராடுற கோஷ்டினா அது நம்ம நட்ட நடு சென்டர் கோஷ்டி தான். எந்த பக்கம் இருந்து அவிய்ங்களை சாணியால அடிச்சாலும் திமுககாரன் நிக்கிற பக்கம் மட்டுமே தங்கள் இலக்கா வச்சு முன்னேறுறதுல அவிய்ங்களுக்கு நிகர் அவய்ங்கதான்!

இவனுகள பத்தி இன்னும் சிறப்பா சொல்லனும்னா
"கஜினி"னு சொல்லலாம். 17 முறை விடா முயற்சியுடன் படையெடுத்த கஜினி முஹம்மது இல்ல, இது நம்ம சூர்யா அரைமண்டையனா நடிச்ச கஜினி மாதிரி. அதுல அவருக்கு short term memory loss இருக்கும் ஆனா இந்த நடுசென்டர்காரய்ங்களுக்கு life time memory loss இருக்கும். நடுநிலைனா என்னனு கேட்டீங்கனா அது ஈரோடு பக்கம், தூத்துக்குடி பக்கம் இருக்கும்பாய்ங்க.
 

முதல்ல நம்ம தமிழ்நாட்டு லெவல்ல பார்ப்போம். இங்க 2011 மே மாசத்துல ஆட்சி மாறுனதே இவய்ங்களுக்கு தெரியல. அந்த அளவிற்கு நடுநிலமை நோய் முத்திப்போச்சு! கஜினில வில்லன் சூர்யா மண்டைலயே ஒரு போடு போட்ட மாதிரி இவய்ங்க தலைல அந்தம்மா கரண்டு பில்லு, பஸ் டிக்கெட்டு, பால் விலைனு ஒரே போடா போட்டதுல, மொத்தமும் மறந்து போய் இப்படி ஆயிட்டாய்ங்க போல பாவம்!

கஜினி படத்துல மண்டை பொளந்து மெண்டலாகுறதுக்கு முன்னாடி கடைசியா பாத்த அசினை மட்டும் சூர்யாக்கு நியாபகம் இருக்க மாதிரி இவய்ங்களுக்கு கடைசியா பாத்த திமுக மட்டும் நியாபகம் இருக்கு. எந்த போராட்டமானாலும் சரி, விலைவாசி ஏத்துனாலும் சரி, ஒருநாளைக்கு 28மணி நேரம் கரண்டை புடுங்குனாலும் சரி, திங்கிற சோத்துல விசத்த கலந்தாலும் சரி, போலிச வுட்டு அள்ளைலயே மிதிச்சாலும் சரி அவிய்ங்க குறிக்கோள் திமுகவ திட்டுறது தான். பொது விஷயத்துல கலைஞர் எதாவது அறிக்கை வுட்டா, நக்கல் அடிக்கிறது, அறிக்கை கொடுக்கலேனா ஏன் கொடுக்கலேங்குறது!

இன்னைக்கு ஒரு ஜென்டில்மேன் கலைஞர் வீல் சேர்ல போறத கிண்டல் பண்ணிருக்காரு. ஏண்டா உங்களுக்கெல்லாம் வயசானா வீல்சேர்ல போகாம 'க்யூரியாசிட்டி' விண்கலத்துலயாடா போவீங்க?

போன ஆட்சில சொல்லிட்டு ரெண்டு மணி நேரம் கரண்ட்ட கட் பண்ணதுக்கு வாயிலயும், வயித்துலயும் அடிச்சுக்கிட்டு "அய்யோ போச்சே, போச்சே"னு அழுதாய்ங்க. இப்ப ஒருநாளைக்கே ரெண்டு மணி நேரம்தான் கரண்ட் இருக்கு. ஆனா ஒருபய வாய தொறக்கலையே! எல்லாரும் ஈடன் கார்டன்ல வாழுற ஆதாம் ஏவாள் மாதிரி சந்தோசமா இருக்காய்ங்க போல!

இவய்ங்க தான் இப்படினா புதிய தலைமுறை டிவி அதுக்கு மேல. நடுநிலைமைய ஓல்சேல் குத்தகைக்கு எடுத்தவய்ங்க இவய்ங்கதான். அம்மா செருப்பால அடிச்சா கூட அம்மா செருப்பால் ஆசிர்வதித்தார்னு செய்தி வாசிக்கிறாய்ங்க. சேனல்4 போட்டத மறு ஒளிபரப்பு பண்ணி போராளிகளோட ஃபேவரிட் சேனல் ஆனாய்ங்க. இப்ப பாத்தா இவய்ங்களே அங்க காலேஜ தொறந்து வச்சிருக்காய்ங்க. இதப்பத்தி தமிழ்தேசியவாதி எவனாச்சும் பேசுறானானு பாத்தா.. ஹ்ம்ம் ஹ்ம்ம்... இதெல்லாம் ஒரு பொழப்பு!

கூடங்குள போராளித்தலைவர் என்னனா மன்மோகன் சிங்தான் தமிழக முதல்வர் மாதிரி மத்திய அரசை மட்டும் குறை சொல்றாரு! ஆகமொத்தம் உதயகுமாருல இருந்து உதவாத குமாரு வரைக்கும் இப்படிதான் இருக்காங்க!

ஒரு படத்தில் வடிவேலு காமெடில, சரக்குனு நினைச்சு விசத்த குடிச்சிருவாரு வடிவேலு. குடிச்சுட்டு, "என்னடா தொண்டய கவ்வுது"ம்பாரு..,
மற்றொருவர்: "விஷம் குடிச்சா அப்படிதான்னே இருக்கும்"னு சொல்லுவாரு.

அது மாதிரி இப்ப தமிழ்நட்டு மக்கள் ஓவரா ஆசப்பட்டு அதிமுகவ தேர்ந்தெடுத்துட்டு "தொண்ட கவ்வுதேடா"ங்குறாய்ங்க!
இப்ப நம்ம சொல்லுவோம், "மாற்றம் வேனும்னு கேட்டா இப்படிதாண்ணே இருக்கும்..!!"   


                             

9 comments: