Friday, 11 December 2015

எனக்குப் புடிச்ச சூப்பர் ஸ்டார்..!!

                                   

      மூனு வயசு பையன். எப்போ பாத்தாலும் அழுது தொந்தரவு பண்ணிட்டே இருக்குற அவன ஒரு இடத்துல உக்காரவைக்க அவங்க அம்மா ஒரு வழி கண்டுபுடிச்சாங்க. அதுல இருந்து அவன இருக்குற இடம் தெரியாம ஆடாம அசையாம அமைதியா உக்கார வைக்கனும்னா அந்த வழியதான் செய்வாங்க. அந்த வழி....சூப்பர் ஸ்டார் நடிச்ச அண்ணாமலை படம், அந்த பையன்... நான். எப்ப அந்த பட கேசட்ட டெக்ல போட்டு விட்டாலும் கண் இமைக்காம அந்த படத்த பாத்துட்டே இருப்பேன்..முடிஞ்சவுடன திருப்பி போடனும் இல்லனா அழுவேன்னு இப்போ வரைக்கும் அம்மா சொல்லிட்டே இருப்பாங்க. அப்படி பாத்து பாத்து ஊறிப்போன படம், முதல் முதலா புடிச்ச ஹீரோ, சூப்பர் ஸ்டார். எனக்கு மட்டும் இல்ல ஏறத்தாழ அந்த தலைமுறை குழந்தைங்க அத்தன பேருக்குமே புடிச்ச ஹீரோ சூப்பர் ஸ்டார் தான். 

சின்ன வயசுல சூப்பர் ஸ்டார் ஸ்டைலு..சண்டை..பாட்டுனு எல்லாமே புடிச்சதுனா கொஞ்சம் வளந்ததுக்கு அப்புறம் பழைய படங்கள எல்லாம் பாத்தா அவரு நடிப்பும் புடிக்க ஆரம்பிச்சிருச்சு. 90களின் பிற்பாடுகள்ல இருந்து அவரு நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் அவ்வளவா இல்லன்னாலும் முன்னாடி உள்ள படங்கள் எல்லாம் பயங்கரம். அதுவும் சூப்பர் ஸ்டார் நெகடிவ் ரோல் பண்ணா அதிரும். நெற்றிக்கண் படத்துல அப்பா கேரக்டர் எல்லாம் செம. முள்ளும் மலரும் ,தில்லு முல்லு, பாட்ஷானு எல்லா genereலயும் கலக்குனாரு சூபபர் ஸ்டார். இந்திய சினிமாவே கொண்டாடுற அளவுக்கு சூப்பர் ஸ்டார் வந்தது ஸ்டைல்னால மட்டும் இல்ல இந்த நடிப்புனாலையும் தான். 





எல்லாரும் கமல் நடிப்பு கூட ஒப்பிடுவாங்க சூப்பர் ஸ்டார.. கமல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த நடிச்ச படங்கள் அதிகம். ஆனா ஸ்டைல் சாம்ராட் ஆன சூப்பர் ஸ்டாரோட நடிப்பு அதுக்கு  குறஞ்சதே இல்ல.. இன்னும் சொல்லப்போனா சூப்பர் ஸ்டார்னால நடிச்சும் ஜெயிக்க முடியும் , ஸ்டைல் மாஸ் காட்டியும் ஜெயிக்க முடியும். பஞ்ச் டயலாக் பேசுறதுல டாக்டர் பட்டம் கொடுக்கனும்னா அது சூப்பர் ஸ்டாருக்கு தான்..!! சாதாரன டயலாக்க கூட சூப்பர் ஸ்டார்னால மட்டும் தான் மாஸ் ஆக்க முடியும்.

கமல்-ரஜினி போட்டி அஜித்-விஜய் போட்டியா ரசிகர்கள் கிட்ட மாறுனாலும் ரஜினிக்கு உண்டான கூட்டம் அப்படியே தான் இருக்கு.காலேஜ்ல வேற ஸ்டேட் பசங்க நம்ம கூட ஒத்துப்போற ரொம்ப சில விசயங்கள்ல ரஜினியும் ஒன்னு. எந்த ஸ்டேட் பையனா இருந்தாலும் அவனுக்கு தமிழ்நாட்டுல என்ன தெரியுதோ இல்லையோ ரஜினிய தெரிஞ்சிருக்கு. ஃபேன்னு வேற சொல்லிக்குவாய்ங்க. ஒரு படம் வெளியாவது பண்டிகையாகவும், அந்த நாள் திருவிழாவாகவும் கொண்டாடப்படுறதுக்கு முக்கிய காரணமே ரஜினி ரசிகர்கள் தான். அப்படியொரு கூட்டம்.

                                        

ரஜினிய புடிக்காதவங்க கூட ரஜினி படம் பாக்காம இருக்க மாட்டாங்க. எனக்கு தெரிஞ்ச தீவிர கமல் ரசிகர் ஒருத்தர் ரஜினிய திட்டிகிட்டே இருப்பாரு ஆனா ரஜினி படம் போட்டா உக்காந்ந்து பாக்க ஆரம்பிச்சுருவாரு..கேட்டா.."ரஜினி படம் பாத்தா ஒரு எனர்ஜெடிக்கா இருக்கும்ப்பா" னு சொல்லுவாரு. சும்மாவா அவரு ரசிகர்ங்க அவங்க பேரு கூட ரஜினி பட பேரையும் சேத்து வச்சிக்குறாங்க?? இப்படி நான் ரசிச்ச சூப்பர் ஸ்டார் மேல எனக்கு சில வருத்தம் இருக்கு.

ஒரு நடிகரா சூப்பர் ஸ்டார் மாபெரும் உச்சம்ங்குறதுல எந்த மாற்று கருத்தும் இல்ல. அப்படி இருந்தும் ஏன எல்லா பஞ்சாயத்துலையும் ரஜினிய இழுத்து விடுறாங்க? இதுக்கு யாரு காரணம்? மக்களா? பத்திரிக்கைகளா? அரசியல் கட்சிகளா?? ரசிகர்களா??

தேர்தல் அறிவிச்சாச்சா ? ரஜினி யாருக்கு ஆதரவு?
சமூக ப்ரச்சனையா ?? ரஜினி என்ன சொன்னாரு?
நிவாரணமா ??  ரஜினி எவ்ளோ கொடுத்தாரு??
தேர்தலா ?? ரஜினி யாருக்கு ஓட்டு போட்டாரு??

இப்படி எல்லா விசயத்துக்கும் ரஜினி..ரஜினி..ரஜினின்னு கெளப்புறதுல மீடியாவுக்கு செம பங்கு இருக்கு. அவைங்களுக்கு தேவை விளம்பரம் விற்பனை. ரஜினி படம் போட்டா பத்திரிக்கை வித்துரும், அதுக்காக என்ன மாதிரி நியூஸ் எல்லாம் போட முடியுமோ போட்ருவாங்க. அடுத்த படம் எந்த இயக்குனர்னு ஆரம்பிச்சு..கதை..ரிலீஸ் டேட்..மட்டும் இல்லாம சொந்த பிரச்சனை..அரசியல் நிலன்னு படிப்படியா இவங்க வியூகத்த எல்லாம் பரப்புவாங்க. இப்படி பண்ணி பண்ணியே மக்களும் அதுக்கு அடிக்ட் ஆயிட்டாங்க. "தேர்தல் அறிவிப்பு ரஜினி திட்டம்"னு தலைப்பு போடுவாய்ங்க ஆனா உள்ள பாத்தா ஒன்னுமே இருக்காது. இவைங்களே அந்நியன் மாதிரி மாத்தி மாத்தி பேசிக்குவாய்ங்க. இப்படி ரஜினி பேர எல்ல விசயங்களிலும் இழுத்து விடுறதுல மீடியாவுக்கு தான் 90% பங்கு இருக்கு. ஏன் மத்த நடிகருங்கள எல்லாம் விட்டுட்டு ரஜினிய மட்டும் பேசுறாங்க.

ஏன்னா அதுக்கு எல்லாம் தீனி போடுற மாதிரி செய்றதே ரஜினி தான்.

 வேற எந்த ஒரு நடிகரையும் அவர் நடிக்கிற படத்துல அந்த கேரக்டரா தான் பாப்பாங்க ஆனா ரஜினி படத்துல அவரு கேரக்டர ரஜினியா தான் பாப்பாங்க. அவரும் படத்துல கதைக்கு தேவையான பஞ்ச் டயலக்கோ..கருத்தோ மட்டும் சொல்லிட்டு போகாம..அரசியல் ரீதியாக பஞ்ச் பேசுறதும்.. கூட்டத்த காட்டுறதும்.."நீங்க அரசியலுக்கு வரனும்னு" மக்களே கூப்பிடறதும்.."உப்பிட்ட தமிழ் மன்னை நான் மறக்க மாட்டேன்" போன்று சினிமாவுலயும், தமிழ் மக்கள் என்னை வாழவைத்த தெய்வங்கள்னும்..தமிழ்நாட்டுக்கு எதாவது செய்யனும்னும் வெளிய பேட்டி கொடுக்குறாரு .இப்படி சீசனுக்கு சீசன் ஸ்டேட்டஸ் அப்டேட் பண்ற மாதிரி எதாவது சொல்லிட்டே தான் இருக்காரு. நாய் குட்டிக்கு பிஸ்கட்ட காட்டி காட்டி விளையாட்டு காட்டுற மாதிரி அப்ப அப்போ இந்த விசயத்த கையில எடுத்து கருத்து சொல்றாரு. ஒன்னு பிஸ்கட்ட கையில இல்லாம தூக்கி போட்டுறனும் இல்ல நாய்குட்டிக்கு போடனும்... இல்ல ஒன்னு நாய்க்குட்டி ஏமாந்து போயிரும் இல்ல கைய கடிச்சிரும். 

 ஒவ்வொரு தேர்தலின் போதும் ஏறக்குறைய எல்லா கட்சிக்காரங்களும் ஆதரவுக்காக எதிர்பார்க்கும் சர்வ வல்லமை படைத்த ரஜினி ஏன் அரசியலுக்கு வர தயங்குறார்னு அவருக்கே வெளிச்சம்.அரசியலுக்கு வர்றேன்னு நான் பொறக்குறதுக்கு முன்னாடி இருந்தே சொல்லிட்டு இருக்காரு.  அவரு அரசியல் நிலைபாட்டுல அவரு உறுதியா இருக்காரா இல்லையாங்குறது அவர் தனிப்பட்ட விசயம். ஆனா அது விளம்பரமாகவோ, பரபரப்புகாகவோ ஆகும் போது தான் பிரச்சனை ஆகுது. இந்த கசப்பான உண்மைய நாம ஏத்துகிட்டு தான் ஆகனும்



அவருக்கு இருக்குற மாஸ் கும் பிசினஸ்க்கு 100 என்ன 200 கோடி கூட சம்பளம் வாங்கலாம்..நடிக்கலாம்,, யாரு கேக்க போறா..ஆனா சின்ன வயசுல சூப்பர் ஸ்டாரா, ஹீரோவா, நடிகனா பாத்து ரசிச்ச சூப்பர் ஸ்டார இன்னைக்கு அவரோட இந்த நிலையற்ற நிலைபாடால அவரும் குழம்பி ரசிகர்களையும் குழப்புறது வருத்தமா இருக்கு. சிவாஜி படத்துல "நீ அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி"ன்னு சொல்ற மாதிரி, சூப்பர் ஸ்டார் நடிப்புல மட்டுமே கவனம் செலுத்தனும்ங்கிறது தான் என் விருப்பம்.

தலைவரா இருக்குற ரஜினிக்கு தொண்டனா இருக்க வேணாம்...சூப்பர் ஸ்டாரா இருக்குற ரஜினிக்கு ரசிகனா இருக்கவே விருப்பம்..!!

சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!! 




Friday, 2 October 2015

புலி - சீரியஸ் படமும் - காமெடி அரசியலும்

பொதுவா புதுப்படங்க எல்லாம் பண்டிகை சமயத்துல வர்றது தான் வழக்கம். ஆனா விஜய் படம் எப்போ ரிலீஸ் ஆகுதோ அப்போதான் ஊருல முக்கால்வாசி பேருக்கு பண்டிகையே. நல்லா இருந்தா ஓட்டுவாய்ங்க..நல்லா இல்லன்னா டெஃபனைட்டா ஓட்டுவாங்க. ஆக மொத்ததுல ஓட்டு வாங்குறது நிச்சயம் ஆயிருச்சு..(சில விஜய் படம் ஓட்டு வாங்குறதுக்கு கூட வொர்த் இல்லாத அளவுக்கு இருந்திருக்கு..அது வேற கதை) இந்த டைமிங்ல தான் நம்ம ஆளு "புலி"யா பாய்ஞ்சு வந்திருக்காரு.

                                   

  மொத ஷோ முடிஞ்சவுடனையே ,"சிம்புதேவன் வச்சு செஞ்சுட்டாரு", விஜய் வைக்காம செஞ்சுட்டாரு"ன்னு கடைசில இவங்க தான் படத்த வச்சு செஞ்சிடாய்ங்க. ஆனா உண்மையிலையே புலி படம் இவைங்க பரப்புற அளவுக்கு மொக்கையான படம் எல்லாம் இல்ல (விஜய் கத்தி புடிக்கிர ஸ்டைல்ல இருந்து ஓட்டுறதுக்கு பல விசயம் படத்துல இருந்தாலும்) படம் நல்லா இருக்கு. கமல் பண்ணா புதுமை, ரஜினி பண்ணா புதுமை, விஜய் பண்ணா மட்டும் கோமாளித்தனமா?? என்னலே நியாயம்..அத விட விஜய் மொக்க வாங்க முக்கியக் காரணம் அவரு ரசிகர்கள் தான். ஒன்னும் இல்லாத சுறா, தலைவா கத்தி எல்லாத்துக்கும் கம்பு சுத்துறாய்ங்க, சுத்த வேண்டிய படத்துக்கும் ஓரமா போய் உக்காந்துறாய்ங்க. இவைங்கனால தான் விஜய் வேற எதும் புதுசா பண்ணாம அரைச்ச மாவையே அறைக்குறாரு.

 தமிழ்ல பல வருசங்களுக்குப் பிறகு ஒரு ஃபாண்டசி படம் தந்ததுக்கு இயக்குனர் சிம்புதேவனுக்கு வாழ்த்துக்கள். கதைக்களம் ஒன்னும் புதுசில்லனாலும்,  சுவாரஸ்யமாவே இருக்கு. 

  விஜய் ஆளு சூப்பரா இருக்காரு. கேரக்டருக்கு அப்படியே பொருந்துறாரு. டான்ஸ் வழக்கம் போல அருமை. ஆனா ஜில்லா படத்துல மோகன் லால் கிட்ட மட்டும் சினுங்க்குனவரு இந்தப் படத்துல எல்லாருகிட்டயும் சினுங்குறாரு. வடிவேலு சொல்ற மாதிரி "அய்யோ சினுங்குறானே..போடா"னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க தியேட்டர்ல. தயவு செஞ்சு மாடுலேசன மாத்துங்க கன்றாவியா இருக்கு. ஹீரோயின் யாருன்னே தெரில.. மூனு பாட்டுக்கு வந்த கணக்குப்படி ஸ்ருதி தான் ஹீரோயின், வழக்கமான விஜய் பட ஹீரோயின். மத்தப்படி சுதீப் மெரட்டிருக்காரு. படத்துல சண்டை தான் மொக்கையா இருக்கு.

படத்தோட இன்னொரு ஹீரோ நம்ம DSP தான். பாட்ட விட BGM பட்டைய கிளப்பிட்டரு. பல சீன் செமையா இருந்ததுக்கு காரணமே இவரு தான். அப்புறம் ஶ்ரீதேவி பின்னிட்டாங்க. ஃபாண்டசி படத்துக்கு ஏத்த வில்லி. வசனம் பேசுறதுலையும், சிரிப்புலையும், மெரட்டிட்டாங்க. அரசிக்கு உண்டான கம்பீரம் சூப்பர். அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் வரிசைல ஶ்ரீதேவியும் சேர்ந்துட்டாங்க. மத்தப்படி க்ராபிக்ஸ் எல்லாம் ரொம்ப மொக்கை எல்லாம் சொல்ல முடியாது. மத்தப் படத்தோட கம்ப்பேர் பண்ணாம பாத்தா ஓகே நல்லா தான் இருக்கு.
மத்த மொழியில ஃபாண்டசி படம் பாக்குறத சும்மா சீன் போட மட்டுமே பாக்குறவங்க தான் இத மொக்கைன்னு சொல்லுவாங்க.ஆரம்பத்துல திரைக்கதை வசனத்துல கொஞ்சம் இழுவையா இருந்தாலும் போக போக சூடு புடிக்க ஆரம்பிச்சிருச்சு. அருமையான கதைக்களம் சிம்புதேவன், வசனத்தையும்,திரைக்கதையையும் வேற ஆளுக்கிட்ட கொடுத்திருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும். ஆனா இவைங்க ஓட்டியே படத்த நாசம் பண்ணி இனிமே எந்த இயக்குனரும் ஃபாண்டசி படத்த தொட பயப்பட வச்சிருவாங்க. யாரு பேச்சையும் கேக்காம, மத்த படத்தோட ஒப்பிடாம போய் தியேட்டர்ல பாருங்க, புலி நல்ல படம்.


விஜய் அரசியல் அவதாரம் :

ரஜினி அரசியலுக்கு வர்றாரோ இல்லையோ விஜய் அதுக்கு முன்னாடி அரசியலுக்கு வந்துருவாரு போல. அரசியல் அடித்தளமான கதைக்களத்துல என்ன பண்ணிருக்கருன்னு பாப்போம்." கோட்டைக்கு நீங்க கூட்டி போகலைனாலும் நானே வந்திருப்பேன்"னு ஆரம்பிச்சு "மக்களுக்கா குரல் கொடுப்பேன்"னு முடிக்குற வரைக்கும் படத்துல பெரும்பாலும் அரசியல் டயலாக் தான். ஆனா இந்த படம் அவரோட அரசியலுக்கு உபயோக படுதோ இல்லையோ, ஜெயலலிதாவ சமாதானப்படுத்த முயற்சி பண்ணிருக்காரு. "எனக்கும் ராணிக்கும் பிரச்சனை இல்ல, நடுவுல இருக்குறவங்க தான் தப்பு" , "உங்க ஆசிர்வாதம் எங்களுக்கு எப்பவும் தேவை",னு போஸ்டிங் வாங்காத நான்ஞ்சில் சம்பத் மாதிரி ஆயிட்டாரு. ஆனா இவ்ளோ பண்ணியும் கெஞ்சி பேசி டயலாக் வச்சும் ரீலீசுக்கு முந்தின நாள் ரெய்டு வச்சுட்டாய்ங்க அண்ணனுக்கு. வடிவேல மருதமலை படத்துல ,"ரெண்டு ரூபா தானடா கேட்டேன் அதுக்கு போயி பான்பராக்க  துப்பிட்டான்"னு சொல்ற மாதிரி.. "நானும் ஐஸ் வச்சு தானடா பேசுறேன், அதுக்கு போயி ரெய்டு பண்ணிட்டாய்ங்கனு" பொலம்பிருப்பாரு. கடைசில ஶ்ரீதேவியே இவருக்கு மகுடம் சூட்டுற மாதிரி சீன் வேற கேடு. அப்பவும் இவரு அவங்கள ஜெயிக்கலையாம், அவங்களா இவருக்கு இடம் கொடுக்குறாங்களாம். கருமம்.

அரசியலுக்கு வரனும்னு ஆசை இருந்தா மட்டும் போதாது..தைரியமும் வேணும். ஆட்சியாளர எதிர்க்க துப்பு இல்லாம டான்ஸ் தெரியுதேன்னு அடிக்க அடிக்க இன்னும் குனிஞ்சிட்டே இருந்தா கடைசி வரைக்கும் படத்துல மட்டும் தான் டயலாக் பேச முடியும். வரனும்னு முடிவு பண்ணிட்டா கேப்டன் மாதிரி முழுசா வரணும். இல்ல ரஜினி மாதிரி பட்டும் படாம பேசிட்டு இருந்திரனும் அத விட்டுட்டு இம்புட்டு பயத்த வச்சுகிட்டு ஏன் இந்த ஆசை.? ஒன்னு கேரக்டர மாத்துங்க இல்ல கெட்டப்ப மாத்துங்க. உங்களுக்கு அரசியல் வேசம் செட் ஆவல. பழையபடி அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி.  

Friday, 14 August 2015

மோடி - இனிமேயும் இப்படித்தான்..!!

                   நாங்கள் ஆட்சிக்கு வந்தா அத செய்வோம் இட செய்வோம்னு அரசியல்வாதிங்க, தொண்டர்கள் சொல்லி ஆட்சிக்கு வந்ததை பாத்திருப்போம் ஆனா மக்களே ஆர்வக்கோளாறா "பிராண்டிங்" பண்ணி ஜெயிக்க வைச்சது மோடியதான். அவர பத்தி அவருக்கே தெரியாத பல விசயங்கள பத்திரிக்கைகளும், ஏ.சி. ரூம் யூத்துங்களும் தான் அதிகமா தேடி புடிச்சு பரப்புனாங்க. என்ன தான் டிவிட்டர்ல லட்சக்கணக்கா போலி பாலோயர்கள் வச்சிருக்காரு, ஃபேக் ஃப்ரொபைல் வச்சிருக்காருன்னு சொன்னாலும் கடைசியில என்னமோ ஜெயிச்சது அவருதான். ஜெயிச்சாரு...பயங்கர பலத்தோட ஜெயிச்சாரு.. நம்ம பசங்களும் இந்த சினிமாவுல கடைசி சீன்ல ஹீரோ பாயிண்ட் புடிச்சு பேசும் போது கூட்டத்துல நின்னு, "அடிச்சான் பாரு மொத பால்ல சிக்சர்", "அப்படி கேளு தலைவா", சிங்கம் களம் இறங்கிருச்சு"ன்னு எல்லாம் கத்துற மாதிரி செம பவரோட இருந்தாய்ங்க.. நம்மாளும் பதவியேற்ற தெம்புள ஒன்னு ரெண்டு பன்ச் டயலாக்க சேத்து விட்டாரு.. அதோட விடாம கக்கூஸ் கட்றேன்..காம்பவுண்டு செவுரு கட்றேன்..கரெண்ட் பில் கட்றேன்னு என்னென்னமோ சொன்னாரு கடைசிக்கு கோட்சேக்கு சிலை வக்கிறேன்னு முடிச்சிட்டு அடுத்து ஊற சுத்தப்படுத்துறேன்னு "ஜீ" பட அஜீத் மாதிரி கையில வெளக்கமாத்த எடுத்துட்டு கெளம்புனாரு.. மீடியாவும் நம்ம பசங்களும் முதல்வன் அர்ஜூன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுத்தாய்ங்க. 

என்னமோ இந்தியாவுல குப்பையே இல்லாத மாதிரியும் இவைங்க தேடி தேடி கூட்டுன மாதிரியும் காஞ்சு போன நாலு இலைய கூடையில எடுத்துட்டு வந்து கொட்டி அத கூட்டி தள்ளி நாப்பது ஃபோட்டோ எடுத்து படம் ஓட்டுனாய்ங்க. இதுல இத என்னமோ ஒலிம்பிக் ஜோதி மாதிரி நடிகர் நடிகை, விளையாட்டு வீரர்கள்னு எல்லாத்து கைளையும் மாத்தி மாத்தி கொடுத்து விட்டாரு..அவங்களும் இதே மாதிரி இலைய கொட்டி கூட்டிட்டு..கெளம்பிட்டாங்க. அவ்ளோ தான் அது அப்படியே காணாம போச்சு.  அவ்ளோதான் அதுக்கு அப்புறம் நம்மாளு எந்த நாட்டுல இருக்காருன்னு அவருக்கே தெரியல..

பிரதமர் மத்த நாடுகளுக்கு சுற்றுபயணம் போறதுங்குறது சகஜமான விசயம் தான்..ஆனா நம்மாளு இந்தியாவுக்கே சுற்றுபயணம் மாதிரி தான் வந்துட்டு போறாரு.. கூகுள் மேப்ல இல்லாத இடத்துக்கெல்லாம் போயிட்டு வந்துட்டாரு. விட்டா கொலம்பஸ் மாதிரி புதுசா ஒரு நாடையே கண்டுபிடிச்சாலும் கண்டுபிடிப்பாரு. சரி வெளிநாடு போயி அப்படி என்னதா பறந்து பரந்து வேலை பாக்குறாரு இந்திய பொருளாதாரம் மேல அவ்ளோ அக்கறையான்னு பாத்தா அதானி க்ரூப்புக்கு "பிசினஸ் எக்ஸிக்யூட்டிவ்" வேலை பாத்துட்டு இருக்காரு. சும்மா சொல்லக்கூடாது பம்பரமா சுத்தி அப்ரைசைல் பீரியட்ல டபுள் இன்சென்டிவ் வாங்குற அளவுக்கு தீயா வேலை செய்யிறாரு. கல்யாண் ஜுவல்லர்ஸ் பிரபுவுக்கு ," நீ லோக்கல் தம்பி..ஐயாம் வேர்ல்டு டூர்"னு சொல்ற அளவுக்கு டஃப் ஃபைட் கொடுக்குறாரு மோடி. ஒரு வழியா அதானிக்கு டபுள் டார்கெட் அச்சிவ் பண்ணிட்டு நம்மூரு பக்கம் எட்டி பாத்திருக்காரு.
                                       



சரி ஊருக்கு தான் ஒன்னும் பண்ணல போனோமா ஊர சுத்தி பாத்தோமா..புள்ளைங்க கூட "செல்ஃபி" எடுத்தோமா,நல்லது கெட்டத திண்ணோமான்னு இல்லாம எல்லா ஊருலையும் இங்க மாதிரியே எழுதி வச்சு படிச்சு அதையும் தப்பா படிச்சு அசிங்கப்படுறாரு. திருமதின்னு குறிக்குற Mrsஅ   M.R.Sனு இனிசியல் மாதிரி படிச்சு வச்சுட்டாரு..எவன்டா இன்சியல மாத்துனதுனு சண்டையே வந்திருக்கும். அது கூட பரவாயில்ல வேற கண்ட்ரி.. நம்ம நாட்ல தேச பிதா பேர "மோகன்லால் கரம்சந்த் காந்தி"ன்னு சொல்லிட்டாரு..பாவம் நைட்டு "திரிஷ்யம்" மலையால படம் பாத்திருப்பாரு போல அந்த் கன்பீசன்ல உளறிட்டாரு. இது மட்டும் இல்ல இது மாதிரி இன்னும் பல எடத்துல பல சம்பவங்கள் செஞ்சிட்டு வந்திருக்காரு. மாவீரர் அலெக்சாண்டர் படையை பீகார் வீரர்கள் எதிர்கொண்டனர்னு பிட்டு போட்ருக்காரு அதையும் பீலான்னு கண்டு புடிச்சிடாய்ங்க உடனே. பாவம் பெரிய மனுசன் ஸ்டோரி இண்ட்ரெஸ்ட்டுக்காக எதொ பிட்டு சேர்த்து சொல்றாருன்னு விடாம எல்லாத்தையும் கண்டுபுடிச்சிட்டாய்ங்க. அவரும் "எந்த கெட்டப் போட்டாலும் பாடி சோடான்னு கண்டுபுடிச்சா மதிப்பில்லையாடா"ன்னு வருத்தப்படுறாரு. சரி நம்மாளும் சும்மா இருக்காரா, கூட்டத்த பாத்தவுடன ஆடு மிரள்ற மாதிரி என்னென்னமோ ப்ளோவுல பேசிறாரு, சீனாவுல போய் இந்தியர்கள் இந்தியாவுல பொறந்ததுக்கு வெக்கப்பட்டாங்க நான் ஆட்சிக்கு வர்றதுக்கு முன்னாடின்னு பேசிட்டாரு.. ட்விட்டர்ல எதிர்ப்பு எகிறுச்சு ஆனா எப்படியோ அவரு ஃபேக் பாலோயர் ஐடி வச்சு ட்ரெண்டிங்க மாத்திவிட்டுட்டாரு. இதுக்கு முன்னாடி இருந்த பிரதமரு பேசல பேசலன்னு வருத்தப்பட்டாய்ங்க..இவரு ஏன்டா பேசுறாருன்னு கவலப்படுறாய்ங்க. மோடிஜீ மொதல உங்களுக்கு எழுதி கொடுக்குற ஆள புடிச்சு உள்ள போடுங்க..(ஒருவேளை சரியா எழுதினததான் இவரு தப்பா வாசிக்கிறாறோ..!!)

                                                     


சரி அங்க தான் அப்படின்னா இங்க அதுக்கு மேல.. "பீ இண்டியன் பை இண்டியன்"னு புதுசா ஆரம்பிச்சு விட்டாரு அவருக்கு ஆபத்தா ஆயிருச்சு..போட்ருக்குற கண்ணாடி, சட்டைல இருந்து ஷூ வரைக்கும் மட்டும் இல்லாம ஒபாமா வந்தப்போ மோடி போட்டிருந்த சூட் பத்து லட்ச ரூபாயாம்.. அதுலையும் எதோ சின்ன பசங்க பென்சில் பாக்ஸ்ல பேரு எழுதி வச்சிருக்குற மாதிரி ட்ரெஸ் முழுக்க பேரு எழுதி வச்சிருக்காரு.. அது போக ஊரு ஊரா போய் "லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள"னு எடுத்துக்குறது எல்லாம் "ஐ போன்" தான்னு எல்லாம் வெளிநாட்டு பொருள்னு பட்டியல் போட்டுட்டாய்ங்க. சரி தேர்தல் நேரத்துல கக்கூஸ் கட்டுவேன்,கறுப்பு பனத்த கொண்டு வருவேன், , ஆளுக்கு பேங்க்ல பணம் போடுறேன் என்னென்னமோ ஷங்கர் பட ஹீரோ மாதிரி பில்டப் விட்டுட்டுபோயிட்டாரு..அத நம்பி எல்லாம் பேங்க்ல போயி தகராறு பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க "எங்கடா என் பங்கு"ன்னு. விவசாயிங்களும் விவசாயத்துக்கும் என்னமோ இவரு தான் காட்ஃபாதர் மாதிரி பேசிட்டு இருந்தாரு, சரி அவங்க கஷ்டத்த போக்க என்னமோ பண்ண போறாருன்னு பாத்த "விவசாயம் செய்யிறதுனால தான கஷ்டம், பண்ணாதிங்கன்னு சொல்றமாதிரி அவங்க இடத்த எல்லாம் புடிங்கிட்டு விட முடிவு பண்ணிட்டாரு. எல்லாத்தையும் இந்த பெட்ரோல் விலை.."சங்கமே அபராதத்துலா தான் ஓடுது"ங்குற ரேஞ்சுல கச்சா எண்ணெய் விலை குறைஞ்சாலும் நம்ம ஊருல மட்டும் இன்னும் செழிப்பான விலைக்கு தான் வருது. சரி தேர்தல் அப்போ எதோ ஃப்ளோவுல சொல்லிட்டாப்ல ஆனா எதையும் செய்ய முடிலன்னு விட்றலாம்  இவரு தான் இப்படின்னா பாஜக காரய்ங்க அதுக்கு மேல இருக்காங்க. சிறுநீருக்கு ஃப்ராண்டிங் பண்ண ஒருத்தரு,மாட்டுக்கறிய தடை பண்ண ஒரு கூட்டம், இந்தியா இந்து நாடு, இந்துக்கள் ஜனத்தொகைய பெருக்க இந்து பெண்கள் நிறைய குழந்தைகள் பெத்துக்கனும், முஸ்லீம்களுக்கு எதுக்கு ஓட்டுரிமை,இதெல்லாம் விட கற்பழிப்புக்கு இதுல பல பேரு சொல்ற காரணத்த கேட்டா கற்பழிச்சவனே பரவாயில்லன்னு தோனும். இப்படி ஊருல்ல உள்ள அறிவாளிங்க எல்லாம் இங்கனதான் இருக்காய்ங்க. இத எல்லாம் பாத்தா பிஜேபிக்கு எதிரா அடுத்த எலெக்சன்ல பிரச்சாரமே பண்ண வேணாம் அவைங்களே பேசி ஆப்பு வச்சிக்குவாங்க. இதுல இந்த சுதந்திர தின விழாவுல என்ன பேசுறதுன்னு மக்கள் கிட்ட கருத்து கேட்ருக்காராம்.. அதான நம்ம ஊருல இருந்தா தான என்ன நடக்குதுன்னு தெரியும்..நல்லவேலை எந்த நாட்டு சுதந்திர தினம்னு கேக்காம விட்டாரு..

ஆனா நம்ம பசங்களையும் மீடியாவையும் பாத்தா தான் ரொம்ப பாவமா இருக்கு. உங்க ஜட்ஜ்மெண்ட்டு ரொம்ப தப்புன்னு மோடியே சொல்லிருவாரு. நம்ம ஊருல கேப்டன் பண்றத கிண்டல் செஞ்சு, memes போடனே ஒரு கூட்டம் இருக்கு ஆனா அத எல்லாம் விட நூறு மடங்கு கேலிக்கூத்து எல்லாம் அசால்ட்டா பண்ணிருச்சு எங்க தல. கிட்டதட்ட படிக்காதவன் பட விவேக் கத தான் நம்மாளு. இதுவரைக்கும் எதுவுமே பண்ணல..இனிமேயும் இப்படிதான்னு சொல்லிருவாரு.. இதெல்லாம் வேணாம்னு "நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிரு சிவாஜி"னு சொல்ற மாதிரி மோடி கிட்டயும் சொல்லி மறுபடியும் டூர் அனுப்புறது தான் பெஸ்ட்டு.